Tag: K balachander

  • Ilaiyaraaja: இசையமைப்பதை விட்டுறேன்,  பயங்கர ஹோம் ஒர்க் பண்ணேன்.. கே.பாலச்சந்தரிடம் சவால்விட்ட இளையராஜா!

    Ilaiyaraaja: இசையமைப்பதை விட்டுறேன், பயங்கர ஹோம் ஒர்க் பண்ணேன்.. கே.பாலச்சந்தரிடம் சவால்விட்ட இளையராஜா!


    <p>இசை என்றால் இளையராஜா, இளையராஜா என்றால் இசை. தமிழ்நாட்டில் இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியுமா என்ன? பலரின் சோகங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், பயணங்கள், வலிகள், இழப்புகள் என அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க, இளையராஜாவின் மேஜிக்கல் இசையால் மட்டுமே சாத்தியம். எப்படிப்பட்ட சிச்சுவேஷன் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமாக இசை அமைக்கக் கூடிய இசை மேதை. சமீபத்தில் இளையராஜா கலந்துகொண்ட நேர்க்காணல் ஒன்றில் அவர் இதுவரையில் எந்த இயக்குநர் கொடுத்த சிச்சுவேஷனுக்கு இசையமைப்பது மிகவும் பிரமிப்பாகவும் சவாலாகவும் இருந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/01dc32867e714bc526e2ad267b674d421712594408974224_original.jpg" alt="" width="1200" height="675" /></p>
    <p>&ldquo;கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘சிந்து பைரவி’ படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன்… என்ற பாடலுக்கு இசையமைப்பது சவாலாக இருந்தது எனலாம். இசைக் கச்சேரியில் மிகப்பெரிய பாடகர் ஒருவர் &ldquo;பாடும்போது எல்லோருக்கும் புரியும்படி தமிழில் பாடுங்கள்&rdquo; என சொல்லவும், &ldquo;நீ என்னை விட பெரிய பாடகியா? வந்து ஒரு பாட்டு பாடு&rdquo; என கர்வமாக சொல்கிறார் அந்த இசை மேதை.</p>
    <p>அந்தப் பொண்ணும் ஏதோ ஒரு ஃபோக் பாடல் பாடுவாள் என்று தான் இயக்குநர் சொன்னார். ஆனால் அந்த பாடலுக்காக நான் பயங்கரமாக ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணேன். அப்படி வீட்டுக்குப் போய் ஹோம் ஒர்க் பண்ணி கம்போஸ் பண்ண ஒரே பாடல் என்றால் அது அந்தப் பாடல் தான்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2Of0brvEd1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2Of0brvEd1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Isaikettaal (@isaikettaal)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>&nbsp;</p>
    <p>அந்தப் பாடலை கே.பாலச்சந்தர் சார் கேட்ட பிறகு என்னை மிகவும் பாராட்டினார். &ldquo;இந்தப் பாட்டு தியேட்டர்ல வந்த உடனே கிளாப்ஸ் வரவில்லை, என்றால் நான் இத்துடன் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்&rdquo; என நான் அவரிடம் சொன்னேன். அவர் அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தியேட்டர்ல போய் பார்த்துவிட்டு வந்து &ldquo;நீங்க சொன்ன மாதிரியே நடந்தது&rdquo; என சொன்னார். இந்தப் பாடலுக்கு சிறந்த இசைக்காக இளையராஜா மற்றும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை கே.எஸ். சித்ராவும் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. &nbsp;</p>

    Source link

  • Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day

    Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day


    தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள். “ஆத்தாடி பாவாட காத்தாட…” இந்த பாடல் ஞாபகம் இருக்கிறதா. ஆம் இப்பாடல் இடம்பெற்ற ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 
     

    இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து அனுபவம் பெற்ற அமீர்ஜான் அறிமுக இயக்குநராக களம் இறங்கினார். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட கருப்பு வைரங்களுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் ‘பூவிலங்கு’ படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் முரளி. கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சித்தலிங்கையாவின் மகன் தான் முரளி. 1983ம் ஆண்டு தந்தையின் இயக்கத்தில் வெளியான “பிரேமா பர்வா” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான முரளிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ஒரு சில கன்னட படத்தில் நடித்த முரளியை கே. பாலச்சந்தர் தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். பிரேமா பர்வா படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘பூவிலங்கு’. இப்படம் 1984ம் ஆண்டு வெளியானது.   
    ஹீரோயினாக அறிமுகமான குயிலி ஏற்கனவே தூங்காதே தம்பி தூங்காதே, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் ‘பூவிலங்கு’ படத்தின் மூலம் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. 
     

    இளையராஜாவின் இசை இப்படத்தை தூக்கி நிறுத்தியது. கதைக் களத்துக்கு ஏற்ற பின்னணி இசை, வைரமுத்துவின் வரிகளுக்கு இசைஞானியின் இசை என அப்படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் பிரபலம். அதிலும் ‘ஆத்தாடி பாவாட காத்தாட…’ பாடல் உருவானதற்கு பின்னால் ஒரு ஸ்வாரஸ்யமான கதை உள்ளது. ஹீரோயின் குளிக்கும் இடத்திற்கு ஹீரோ வந்து விட அந்த சந்தோஷத்தில் ஹீரோ பாடும் இந்த பாடலின் வரிகள் மூலம் உணர்வுகளை பொங்கவிட்டனர். இளையராஜா இந்த பாடலுக்கு ட்ராக் மட்டும் பாட முழு பாடலையும் எஸ்.பி.பி பாடுவதாக இருந்தது. ஆனால் இளையராஜாவின் குரலே படத்தின் சூழலுக்கு பொருத்தமாக இருக்கவே அவரையே பாடவைத்தாராம் இயக்குநர். அப்பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஏராளமான படங்கள் மற்றும் தொடர்களில் பிரபலமான நடிகராக விளங்கும் மோகன் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் தான். அதனாலேயே அவர் பூவிலங்கு மோகன் என்ற அடையாளத்துடன் பிரபலமானார்.  

    மேலும் காண

    Source link

  • Actor Uday Kiran committed suicide due to nepotism like Sushant Singh Rajput hero of the film K. Balachander

    Actor Uday Kiran committed suicide due to nepotism like Sushant Singh Rajput hero of the film K. Balachander


    நெப்போடிசம் உலக அளவில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. குறிப்பாக பணம் அதிகம் புழங்கும் அரசியல் மற்றும் சினிமாவில்தான். இதனாலே இந்த இரண்டு துறைகளிலும் நெப்போடிசம் எப்போதும் ஓங்கே இருக்கின்றது. இந்திய அரசியலில் நெப்போடிசத்தை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் இறுதியில் நெப்போடிசத்திற்கு இரையாகிப்போன வரலாறு தொடங்கி கண் முன் வாழும் சாட்சியங்கள் வரை உள்ளனர். 
    அதேபோல் சினிமாவில் நெப்போடிசம் என்பதும் பல நல்ல நடிகர்களை சினிமாவில் இருந்து வெளியேற்றி அவர்களை தற்கொலைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் என்றால், பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வந்த நாயகன் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, பாலிவுட் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய நெப்போடிசம்தான். ஹிந்தி சினிமா முழுக்க முழுக்க கான்கள் மற்றும் கபூர்களின் கரங்களில் இருந்தது, இருக்கின்றது. இவர்களுக்கு அடுத்து இந்த சினிமா இவர்களின் வாரிசுகள் வசம் வரவேண்டும் என்ற நிலையை ஆதிக்கம் செலுத்திவரும் கான்களும், கபூர்களும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். 
    தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் மிகத் திறமையான நடிகர். இவர் நடித்த பல படங்கள் பாலிவுட்டில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பில் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் கொடுத்த படம் என்றால் அது எம்.எஸ். தோனி அண்டோல்டு ஸ்டோரி படம்தான். இந்த படத்தில் தோனியாகவே வாழ்ந்திருந்தார் சுஷாந்த். ரசிகர்களை தோனியின் அருகில் அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல், தோனியை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கம் ஆக்கியது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பு. இவரது தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் இது தற்கொலையே இல்லை கொலை என பலரும் இன்று வரை பொதுவெளியில் கூறிவருகின்றனர். 
    வட இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா மட்டும்தான் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், தென்னிந்திய சினிமாக்கள் தமிழ் சினிமா, மலையாள சினிமா, கன்னட சினிமா மற்றும் தெலுங்கு சினிமா எனவகைப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தென்னிந்தியாவில் நெப்போடிசத்தினால் ஒரு நடிகர் தற்கொலை செய்துள்ளார் என்று கூறினால் நம்புவீர்களா? ஆமாம். 
    தெலுங்கு சினிமாவில் இன்றைக்கு ஆதிக்கம் செலுத்தி வருவது, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ், என்.டி.ஆர் மற்றும் தில் ராஜூ குடும்பங்களின் கரங்களில் உள்ளது. இவர்கள் கண் அசைவில்தான் அனைத்துமே நடைபெற்று வருகின்றது. இவர்கள் ஆதிக்கத்திற்கு மத்தியில், சித்திரம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் உதய் கிரண். இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாதவர். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க, தெலுங்கு சினிமாவே திரும்பிப் பார்த்தது. இதனால் இவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க சிரஞ்சீவி முடிவெடுக்கின்றார். ஆனால் இந்த திருமணத்திற்கு பின்னால் இருக்கும் சூழ்ற்சியை தெரிந்து கொண்ட உதய் கிரண், திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் நிறுத்துகின்றார். 
    இதன் பின்னர் இவரை தெலுங்கு சினிமா உலகம் ஓரம் கட்டியது. இதனால் இவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்களே அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கொண்டனர். இப்படியான நிலையில், உதய் கிரண் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய அவரது 101வது மற்றும் கடைசி தமிழ் திரைப்படமான பொய் படத்தில் நடித்துள்ளார். 
     

    மேலும் காண

    Source link