இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் 41 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இன்றும் இளவயது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்து வீசி வருகிறார்.
700 விக்கெட்டுகள்:
இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்கும்போதே ஆண்டர்சன் இந்த தொடரில் 700 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் டெஸ்டில் ஆடாத ஆண்டர்சன் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். ஆனாலும், அந்த போட்டிகளில் பெரியளவில் சோபிக்கவில்லை.
இந்த நிலையில், தரம்சாலாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் – பும்ரா களமிறங்கினர். குல்தீப் அப்போது, 9வது விக்கெட்டாக குல்தீப் யாதவை ஆண்டர்சன் அவுட்டாக்கினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் தற்போது 3வது இடத்தில் உள்ளார்.
அசத்தும் ஆண்டர்சன்:
41 வயதான ஆண்டர்சன் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தும் 3வது வீரர் ஆவார். முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன் வார்னே. அவருக்கு அடுத்தபடியாக 700 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன். தற்போது 700 வி்க்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.
2003ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 21 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறார். 2002ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆண்டர்சன் 194 ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 19 டி20 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 700 விக்கெட் வீழ்த்தியுள்ள ஆண்டர்சனுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தரம்சாலாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ், சுப்மன்கில் ஆகிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 477 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 259 ரன்கள் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் முன்னிலையில் உள்ளது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் அசத்திய அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிக்க: INDvsENG: இந்தியா 477 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட்! இங்கிலாந்தை மீண்டும் மிரட்டுமா இந்திய பவுலிங்?
மேலும் படிக்க: WPL 2024: இறுதி வரை திக்..திக்! ஆட்டத்தை மாற்றிய தீப்தி, கிரேஸ்! 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி
Tag: INDVSENG

IND Vs ENG 5th Test England Pacer James Anderson 700th Wicket

IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி விவரம்:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் ( விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
இங்கிலாந்து அணி கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதால் அவர்கள் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த போட்டியில் தோற்றால் அவர்கள் தொடரை இழந்து விடுவார்கள். ராஞ்சி மைதானமானது சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இரு அணிகளும் சுழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுழல் பலம்:
இங்கிலாந்து அணியின் சுழல் பலமாக டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர். முக்கிய சுழற்பந்துவீச்சாளராக டாம் ஹார்ட்லி மற்றும் சோயிப் பஷீர் உள்ளனர். பஷீர் ஏற்கனவே விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்தியா சுழற்பந்துவீச்சில் பலமாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என பலமாக உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை யாரிடமும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது பெரும் பின்னடைவாக உள்ளது. ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
ஜானி பார்ஸ்டோ பேட்டிங் பரிதாபம்:
ஜானி பார்ஸ்டோ இந்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். அவர் இதுவரை ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பியது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல, இங்கிலாந்து அணியின் பலமான ஜோ ரூட் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். கேப்டன் ரோகித் சர்மாவின் அனுபவம் இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க: Most Ducks in IPL: ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
மேலும் படிக்க:Mohammed Shami: ஐபிஎல்-லில் இருந்து விலகும் முகமது ஷமி; குஜராத் அணிக்கு புதிய சிக்கல்; காரணம் என்னனு தெரியுமா?
England Head Coach Brendon McCullum On Jonny Bairstow’s Struggles Against India | ‘நான் கண் தெரியாதவன் அல்ல’
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
கண் தெரியாதவன் அல்ல:
இந்திய அணியை காட்டிலும் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து அணி வலுவாக கொண்டிருந்தபோதிலும் எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பார்ஸ்டோ மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங் பற்றி கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியிருப்பதாவது,
“ நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல. எங்களுக்காக அவர் நிறைய செய்துள்ளார். ஜானி பார்ஸ்டோ யாருக்கு எதிராகவும், எந்த சூழலிலும் மிகச்சிறப்பாக ஆடுபவர் என்பது எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை தடுத்து அவருக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.
அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஜானி மீண்டும் நல்ல நிலைக்கு வருவார் என்பது உறுதி. ஜானி பார்ஸ்டோவுடன் சிறிது நேரம் செலவழித்து பேசினேன். அவரிடம் அவர் ஒரு தலைசிறந்த வீரர் என்பதை நினைவூட்டினேன்.” எனத் தெரிவித்தார்.
மோசமாக ஆடும் பார்ஸ்டோ:
ஜானி பார்ஸ்டோ இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும், 10 ரன்கள், 37 ரன்கள், 25 ரன்கள், 26 ரன்கள், 0 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அணியின் மிகவும் நம்பிக்கைக்குரிய வீரரான ஜானி பார்ஸ்டோ இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 சதம், 26 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 906 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் மட்டுமின்றி 3 வடிவிலான போட்டியிலும் இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரரான ஜானி பார்ஸ்டோ, 107 ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 17 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 868 ரன்களும், 70 டி20 போட்டிகளில் 1512 ரன்களும் எடுத்துள்ளார்.
அனுபவ வீரர்கள் சொதப்பல்:
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் ஜானி பார்ஸ்டோ கடந்த 10 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக இங்கிலாந்து அணிக்காக அவர் ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், போப் ஆகியோர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அனுபவ வீரர்களான ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இங்கிலாந்து பேட்டிங் ஆர்டருடன் ஒப்பிடும்போது அனுபவம் குறைந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!
மேலும் படிக்க: Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!
IND vs ENG: இன்று 3வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துமா இந்தியா?
<p>இந்தியா வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.</p>
<h2><strong>இன்று 3வது டெஸ்ட்:</strong></h2>
<p>இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் மோதுகின்றனர். இரு அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஆர்வத்துடன் இருப்பார்கள்.</p>
<p>கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் இருக்கும். இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக விராட்கோலி இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது அமைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். கே.எல்.ராகுலும் இந்த டெஸ்டில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பலவீனம் ஆகும்.</p>
<h2><strong>பேட்டிங், பவுலிங்:</strong></h2>
<p>இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலமாக ஜெய்ஸ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித்சர்மா உள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத ரோகித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தால் இங்கிலாந்துக்கு தலைவலியாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்.</p>
<p>இளம் வீரர்களான படிதார், பரத், படிக்கல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பந்துவீச்சில் பும்ரா அசத்தி வருகிறார். அவருடன் கடந்த போட்டியில் களமிறங்காத சிராஜ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பது அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா சுழல் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<h2><strong>இங்கிலாந்து பலம், பலவீனம்:</strong></h2>
<p>இங்கிலாந்து அணியும் சரிசம பலம் வாய்ந்த அணியாக உள்ளனர். கிராவ்லி, டக்கெட் சிறந்த தொடக்கம் அளித்தால் பின்வரிசைக்கு பக்கபலமாக அமையும். ஒல்லி போப்பும் சிறந்த ஃபார்மில் உள்ளார். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.</p>
<p>வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இளம் வீரர் சோயிப் பஷீர், ரெஹன் அகமது சுழலில் அச்சுறுத்தலாக திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார்.</p>
<h2><strong>பேட்டிங் சாதகம்:</strong></h2>
<p>சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று மோதுவதால் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது. ராஜ்கோட் மைதானத்தில் 28 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு பக்கபலமான மைதானம் ஆகும்.</p>
<p>முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் இங்கு 593 ஆகும். இரண்டாவது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 334 ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 228 ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 172 ஆகும்.</p>
<p>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இந்த மைதானத்தில் 649 ரன்களை விளாசியதே அதிகபட்சம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை எடுத்ததே குறைந்தபட்சம் ஆகும்.</p>
Indian Cricketer Cheteshwar Pujara Explains How Age Is Just A Number To Him
எந்தவொரு செயலையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணமாக உள்ளனர். விளையாட்டிலும் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக, பல விளையாட்டுகளில் 33 வயதை கடந்த பிறகு ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட்டிற்கும் அது பொருந்தும்.
புஜாரா:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. 36 வயதான புஜாரா டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற வைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
வயது என்பது வெறும் எண்:
புஜாரா தன்னால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ என்னைப் பொறுத்தவரை வயது என்பதை ஒரு எண்ணாகவே கருதுகிறேன். உதாரணத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால், இப்போது வரை இங்கிலாந்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் அவர். ஜோகோவிச் சமீபத்தில் 35 என்பது புதிய 25 என்றார்.
நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் எனது உடலை சிறப்பாக பராமரிக்க முடியும். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செ ்ய வேண்டும். இங்கிலாந்து அணி தற்போது தாக்குதல் ஆட்டம் ஆடுகிறது. ஆனால், அது அனைத்து மைதானங்களிலும் கிடையாது. டியூக்ஸ் பந்துகளில் அதேபோல நகர்வுகள் கிடையாது.
வெற்றியே முக்கியம்:
முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் என்பது கடினம். தற்போது கிரிக்கெட் மாறுகிறது. ஏராளமான ஷாட்கள் ஆடுகிறார்கள். மைதானங்கள் தற்போது அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால், உங்களால் அதை தென்னாப்பிரிக்காவில் செய்ய முடியாது.
நான் என் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும், அது எப்படி அணிக்கு உதவ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு அடுத்து பேட் செய்ய வருபவர்களுக்கு பலமாக இருக்க வேண்டும். நான் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால் அது அணிக்கு உதவும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நன்றாக ஆடுவதை விட வெற்றி பெறுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் நேர்மறையுடன் ஆடி அணியை வெற்றி பெற வைத்தால் அது அணிக்கு நல்லது. விளையாடுவதற்கு பல வழிகள் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடி வரும் புஜாரா தற்போது நடந்து வரும் தொடரில் 10 இன்னிங்ஸில் ஆடி 673 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்கள் எடுத்ததும் அடங்கும். புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 7 ஆயிரத்து 195 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 51 ரன்களும், 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 390 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: Imran Tahir: 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள்.. வயது தடையல்ல என நிரூபித்த இம்ரான் தாஹிர்!
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் – சுனில் கவாஸ்கர்!
IND vs ENG: 2வது டெஸ்டில் முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்? ரோகித் சர்மா தந்த விளக்கம்
<p>ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா பேட்டிங் செய்து வருகின்றனர்.</p>
<h2><strong>முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்?</strong></h2>
<p>இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக ரஜத் படிதார் களமிறங்கியுள்ளார். இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் அனுபவ வீரர் முகமது சிராஜ் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் பந்துவீச்சாளர் முகேஷ்குமார் களமிறங்கியுள்ளார்.</p>
<p>இந்த டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஏன் களமிறக்கப்படவில்லை என்று கேப்டன் ரோகித்சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ கடந்த ஆறு மாதங்களில் எவ்வளவு போட்டிகள் அவர் ஆடியுள்ளார் என்று பாருங்கள். அதனால், அவருக்கு ஓய்வு அளிப்பது நல்லது என்று அளித்துள்ளோம். நாங்கள் முகேஷ்குமார், குல்தீப் யாதவை களமிறக்கி உள்ளோம். ரஜத் படிதார் அறிமுகமாகியுள்ளார்.”</p>
<p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
<h2><strong>இந்திய அணிக்கு பின்னடைவு:</strong></h2>
<p>முகமது சிராஜ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். அந்தாண்டு முதல் நடந்து வரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் முக்கிய பந்துவீச்சாளராக களமிறங்கி ஆடி வருகிறார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் பங்கேற்காத சூழலில், இன்றைய போட்டியில் முகமது சிராஜ் இல்லாததும் பெரும் பின்னடைவாக உள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்காத விராட் கோலி, இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ள நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இல்லாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது.</p>
<p>இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:</p>
<p>ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ( கேப்டன்), சுப்மன்கில், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, முகேஷ்குமார்.</p>
<p>இங்கிலாந்து அணி விவரம்:</p>
<p>ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்</p>





