Tag: Ilaiyaraja

  • Ilaiyaraaja: இசையமைப்பதை விட்டுறேன்,  பயங்கர ஹோம் ஒர்க் பண்ணேன்.. கே.பாலச்சந்தரிடம் சவால்விட்ட இளையராஜா!

    Ilaiyaraaja: இசையமைப்பதை விட்டுறேன், பயங்கர ஹோம் ஒர்க் பண்ணேன்.. கே.பாலச்சந்தரிடம் சவால்விட்ட இளையராஜா!


    <p>இசை என்றால் இளையராஜா, இளையராஜா என்றால் இசை. தமிழ்நாட்டில் இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியுமா என்ன? பலரின் சோகங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், பயணங்கள், வலிகள், இழப்புகள் என அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க, இளையராஜாவின் மேஜிக்கல் இசையால் மட்டுமே சாத்தியம். எப்படிப்பட்ட சிச்சுவேஷன் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமாக இசை அமைக்கக் கூடிய இசை மேதை. சமீபத்தில் இளையராஜா கலந்துகொண்ட நேர்க்காணல் ஒன்றில் அவர் இதுவரையில் எந்த இயக்குநர் கொடுத்த சிச்சுவேஷனுக்கு இசையமைப்பது மிகவும் பிரமிப்பாகவும் சவாலாகவும் இருந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/01dc32867e714bc526e2ad267b674d421712594408974224_original.jpg" alt="" width="1200" height="675" /></p>
    <p>&ldquo;கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘சிந்து பைரவி’ படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன்… என்ற பாடலுக்கு இசையமைப்பது சவாலாக இருந்தது எனலாம். இசைக் கச்சேரியில் மிகப்பெரிய பாடகர் ஒருவர் &ldquo;பாடும்போது எல்லோருக்கும் புரியும்படி தமிழில் பாடுங்கள்&rdquo; என சொல்லவும், &ldquo;நீ என்னை விட பெரிய பாடகியா? வந்து ஒரு பாட்டு பாடு&rdquo; என கர்வமாக சொல்கிறார் அந்த இசை மேதை.</p>
    <p>அந்தப் பொண்ணும் ஏதோ ஒரு ஃபோக் பாடல் பாடுவாள் என்று தான் இயக்குநர் சொன்னார். ஆனால் அந்த பாடலுக்காக நான் பயங்கரமாக ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணேன். அப்படி வீட்டுக்குப் போய் ஹோம் ஒர்க் பண்ணி கம்போஸ் பண்ண ஒரே பாடல் என்றால் அது அந்தப் பாடல் தான்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2Of0brvEd1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2Of0brvEd1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Isaikettaal (@isaikettaal)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>&nbsp;</p>
    <p>அந்தப் பாடலை கே.பாலச்சந்தர் சார் கேட்ட பிறகு என்னை மிகவும் பாராட்டினார். &ldquo;இந்தப் பாட்டு தியேட்டர்ல வந்த உடனே கிளாப்ஸ் வரவில்லை, என்றால் நான் இத்துடன் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்&rdquo; என நான் அவரிடம் சொன்னேன். அவர் அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தியேட்டர்ல போய் பார்த்துவிட்டு வந்து &ldquo;நீங்க சொன்ன மாதிரியே நடந்தது&rdquo; என சொன்னார். இந்தப் பாடலுக்கு சிறந்த இசைக்காக இளையராஜா மற்றும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை கே.எஸ். சித்ராவும் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. &nbsp;</p>

    Source link

  • music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio

    music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio


    இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவுக்கு வருகை தந்தது குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
    இசைஞானி இளையராஜா இன்று தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கு வருகை தந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட டி.எஸ். பி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    இளையராஜா இசையும் என்னையும் பிரிக்க முடியாது
    ”ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த  இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்குள் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. நான் படிக்கும்போது கூட, எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசையுடன் வளர்ந்தேன். பிரிக்க முடியாத வகையில் நான் அவருடைய இசையுடன் இணைந்திருக்கிறேன்.  எப்போது இருப்பேன். ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் அவரது இசைதான் 
    ஸ்டுடியோவை உருவாக்கியதும்  இளையராஜாவின் ஃபோட்டோவை மாட்டினேன்

    1/2My LIFETIME DREAM came TRUE🎶❤️🙏🏻Maestro ISAIGNANI ILAYARAJA@ilaiyaraaja SIRin my Humble Studio..🎶🎶My “GOD OF MUSIC” In my TEMPLE🙏🏻🤗❤️🎶 pic.twitter.com/W4EY1qHacn
    — DEVI SRI PRASAD (@ThisIsDSP) March 12, 2024

     “நான் இசையமைப்பாளராக மாறி எனது சொந்த ஸ்டுடியோவை உருவாக்கியதும் அதில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை மாட்டினேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இளையராஜா ஐயா என்னைப் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு.
    இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகள் மற்றும் அன்பை நிறைவேற்றக் கூடியது. அதன்படி இறுதியாக எனது இந்த கனவு நனவாகியது, குறிப்பாக எனது குருவான ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணா பிறந்த நாளில் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது. நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா, உங்கள் வருகைக்கு நன்றி.
    என்னையும் எனது குழுவிற்கும் உங்களுடைய ஆசீர்வாதத்தை வழங்கியதற்கும் நன்றி. எப்பொழுதும் எங்களை ஊக்குவித்தும் சொல்லிக்கொடுத்தப் படியும் இருந்ததற்கு நன்றி. லவ் யு ஃபார் எடர்னிட்டி டியர்ஸ்ட் ராஜா சார் இந்த சந்தர்ப்பத்தில், இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    என்னுடைய திறைமைகளை வெளிப்படுத்த  வாய்ப்புகளை வழங்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என் குடும்பம், நண்பர்கள் மற்றும் குழு எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கிறது. என் இசையை விரும்பி என்னை எப்போதும் இந்த உயர் பீடத்தில் அமர்த்தும் அனைத்து மக்களும் என் மீதும் எனது இசை மீதும் அபார அன்பைப் பொழிந்த ரசிகர்களுக்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்

    Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்


    <p>இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக பத்திர்கையாளர் முன்னிலையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
    <h2><strong>திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தேர்தல்</strong></h2>
    <p>திரைப்பட இசையமைபபளர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டதைத் எதிர்த்து&nbsp; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் திரைப்பட இசையமைப்பாளர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிட்டது.</p>
    <p>இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இப்படியான நிலையில் இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது.&nbsp;</p>
    <p>இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிட வளாகத்திற்குள் இந்த தேர்தல் நடைபெறும் என இந்த சங்கத்தின் தலைவர் தீனா தெரிவித்தார். இசையமைப்பாளரான தீனா இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.&nbsp;</p>
    <h2><strong>கங்கை அமரன் குற்றச்சாட்டு</strong></h2>
    <p>இந்த தேர்தல் குறித்து வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில்&nbsp; இசையமைபபாளர் கங்கை அமரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் &ldquo; தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் சங்கம் இது தான். இதற்கு பிறகு தான் மற்ற சங்கம் எல்லாம் உருவாகின.&nbsp; அப்போது எல்லாம் தினம் சம்பளம் கிடையாது, இந்த சங்கத்தில் இருந்தவர்கள் போராடி வாங்கிக் கொடுத்தார்கள், அவர்களின் கருணையால் நாங்கள் இன்று நன்றாக இருக்கிறோம் .&nbsp;</p>
    <h2><strong>அவர் மட்டும் தான் ஆள வேண்டுமா?</strong></h2>
    <p>&nbsp;தொடர்ந்து பேசிய&nbsp; அவர் இசையமைபபாளர் தீனா மிது சில குற்றச் சாட்டுக்களை வைத்துள்ளார். &rdquo;இளையராஜா வந்து உட்கார்ந்து வந்து உட்கார்ந்திருக்க வேண்டிய இடம் இது. எங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு பதிலாக இந்த இடத்தில் நான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.</p>
    <p>இந்த சங்கத்தின் விதிமுறைப் படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு வருட காலம் தங்களது பதவியை நீடித்துக் கொள்ளலாம். இந்த சங்கத்தை தொடர்ந்து ஆண்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் தீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது பதவியை 4 ஆண்டுகள் தக்கவைத்துக் கொண்டு இந்த ஆண்டும் போட்டி போடுகிறார். இது என்ன அரசியல் கட்சியா? தலைவர் என்கிற பதவியை எல்லாரும் இருந்து அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.&rdquo; என்று கூறினார்</p>
    <h2><strong>தீனா ஒரு எச்சக்கல</strong></h2>
    <p>&rdquo;கொரோனா காலத்தில் இந்த சங்கத்தில் பல்வேறு தவறான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் பணம் கேட்டு பல இசைக்கலைஞர்கள் கையெழுத்து போட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில் பவதாரிணியின் கையெழுத்தை போட்டுகூட பணம் வாங்கப் பட்டுள்ளது, கிட்டதட்ட 80 லட்சம் வரை மோசடி செய்யப் பட்டுள்ளது.</p>
    <p>இந்த உண்மைகளை வெளியே தெரியாமல் இருக்கத்தான் இப்போது மீண்டும் தலைவராக தீனா முயற்சி செய்கிறார். இளையராஜா நம்மை எல்லாரையும் வளர்த்துவிட்டவர். அவர் சொல்லியும் தீனா கேட்பதாக இல்லை, இளையராஜாவை மதிக்காதவர் எங்களுக்கு தேவையில்லை. தீனா ஒரு எச்சகல என்று தான் சொல்ல வேண்டும்&rdquo; என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசியுள்ளார்.</p>

    Source link

  • Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!

    Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!


    <p>மறைந்த பாடகர் பவதாரிணி கடைசியாக இசையமைத்த &lsquo;புயலில் ஒரு தோணி&rsquo; படத்தின் இயக்குநர் ஈசன் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p>
    <h2><strong>பவதாரிணி</strong></h2>
    <p>பாடகர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரது உடல் தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
    <p>ஒரு பாடகராக தனது குழந்தை போன்ற குரலால் அனைவரையும் வசீகரித்தவர் பவதாரிணி. பவதாரிணி பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது வெகுஜன பரப்பில் பரவலாக அறியப்படாத ஒரு தகவல். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தமிழில் அமிர்தம், இலக்கணம் உள்ளிட்ட பவதாரிணி இசையமைத்தப் படங்கள் வெளியாகி இருக்கின்றன.</p>
    <p>மேலும் போரிடப் பழகு, கள்வர்கள், மாயநதி உள்ளிட்ட அவர் இசையமைத்த பாடல்கள் வெளியாகவில்லை. பவதாரிணி இறப்பதற்கு முன் கடைசியாக இசையமைத்த படம் புயலில் ஒரு தோணி. இந்தப் படத்தின் இயக்குநர் ஈசன் பவதாரிணியின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம்</strong></h2>
    <p>புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் புயலில் ஒரு தோணி படத்தில் நடித்துள்ளார்கள். பவதாரிணி குறித்து படத்தின் இயக்குநர் ஈசன் இப்படி கூறியுள்ளார்.</p>
    <p>&rdquo;பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையைத் தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். நான் முழு படத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன்.</p>
    <p>அவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்குக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை &nbsp;ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர்.</p>
    <p>நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார். மேலும், பின்னணி இசையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைத்துள்ளார். படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியளவும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்&rdquo; என்று பேசியுள்ளார்.</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க : <a title="Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை’" href="https://tamil.abplive.com/entertainment/vetrimaaran-viduthalai-part-1-part-2-received-standing-ovation-rotterdam-film-festival-screening-164599" target="_self" rel="dofollow">Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை'</a></strong></p>
    <p><strong><a title="Pa Ranjith: &ldquo;நீலம் ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்&rdquo; – பா.ரஞ்சித் ஆதங்கம்!" href="https://tamil.abplive.com/entertainment/pa-ranjith-fiercy-speech-about-tamil-film-censor-board-issues-at-blue-star-success-meet-164942" target="_self" rel="dofollow">Pa Ranjith: &ldquo;நீலம் ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்&rdquo; – பா.ரஞ்சித் ஆதங்கம்!</a></strong></p>

    Source link

  • Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini

    Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini

    தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
    பவதாரிணி மறைவு
    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி  25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை முறைக்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் அவரது சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனது 47 வயதில் உயிரிழந்துள்ளது திரையுலகினரையும் பொதுமக்களையும் பெரும் சோகத்திற்குள் தள்ளியுள்ளது.
    இறுதி அஞ்சலி
    இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தியாகராய நகரில் அவரது தந்தை இளையராஜாவின் வீட்டில் அரசியல் தலைவர்கள், திரை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் அவருக்கு தங்களது அஞ்சலியை நேரடியாகவும் சமூக வலைதளம் வாயிலாகவும் செலுத்தினார்கள். இந்த தருணத்தில் மிகப்பெரும் சோகத்திற்கு உள்ளாகியிருக்கும் வெங்கட்பிரபு, கங்கை அமரன் , பிரேம் ஜி, வாசுகி, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, மற்றும் இளையராஜா ஆகிய குடும்பத்தினருக்கு அனைவரும் தங்களது ஆதரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
    எனக்கு இசை கற்றுக் கொடுத்தது அக்கா தான்
    பவதாரிணி பற்றிய பல்வேறு நினைவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தனது குழந்தை போன்ற குரலால் பல பாடல்களுக்கு உயிர்கொடுத்த அவர், லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத தடம்பதித்துச் சென்றுள்ளார். பவதாரணியுடனாக தங்களது பல நினைவுகளை திரையுலகினரும் பகிர்ந்து வருகிறார்கள். இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பேசியுள்ள பழைய காணொளி ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
    தனது தந்தை இசைஞானி என்று போற்றப்பட்டாலும், யுவன் ஷங்கர் ராஜா இசையை முறையாக கற்றவர் இல்லை. ஆனால் கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகிய இருவரும் முறையாக இசை பயின்றவர்கள். தனக்கு சுத்தமாக இசை தெரியாது என்றும், முதல்முறையாக தன் கையைப்பிடித்து பியாவோவில் வைத்து,  தனக்கு அதை வாசிக்க சொல்லிக் கொடுத்தவர் தன் அக்கா பவதாரிணி தான் என்று யுவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது காண்போரை உருகவைத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    Life can be cruel sometimes Stay strong Yuvan @thisisysr #Bhavatharini #RIPBhavatharini 🕊️pic.twitter.com/cpUsdD8KWc
    — Irfan ❤️ (@irfan12995) January 25, 2024

     நல்லடக்கம்
    பவதாரிணியின் உடம் சென்னையில் இருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது. அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து  இளையராஜா தனது மகளுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

    Source link

  • Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!

    Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!


    <h2><strong>மிஷ்கின்</strong></h2>
    <p>சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த திரைமொழியை உருவாக்கி இருக்கிறார் மிஷ்கின். தற்போது ரிலீஸூக்கு தயாராக இருக்கும் டெவில் படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.&nbsp;</p>
    <h2><strong>டெவில்</strong></h2>
    <p>மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் &nbsp;எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் &ldquo;டெவில்&rdquo;. &nbsp;சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.</p>
    <p>டெவில் படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்திற்கு இசையமைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.</p>
    <h2><strong>டைரக்&zwnj;ஷன் மட்டும் எனக்கு பத்தல</strong></h2>
    <p>டெவில் படத்திற்கு தன்னை இசையமைக்கும்படி இயக்குநர் ஆதித்யா தன்னிடம் கேட்டபோது தான் ஆச்சரியப்படும் விதமாக உடனே சம்மதித்ததாக மிஷ்கின் கூறினார். சினிமாவில் டைரக்&zwnj;ஷன் ஒன்று மட்டும் தனக்கு போதவில்லை என்றும், தொடர்ந்து ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒரு தாகம் தனக்குள் இருந்துகொண்டே இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இந்த தாகத்தை தீர்த்துகொள்ள முடியும் என்று தனக்கு தோன்றியதால் தான் உடனே சம்மதம் தெரிவித்ததாக மிஷ்கின் கூறினார்.&nbsp;</p>
    <h2><strong>இளையராஜாவை யாராலும் வெறுக்க முடியாது</strong></h2>
    <p>மேலும், இந்த நேர்காணலில் தனது வாழ்க்கையில் உடைந்து அழுத தருணம் ஒன்றைப் பற்றி மிஷ்கின் பகிர்ந்துகொண்டுள்ளார். &ldquo;என் வாழ்க்கையில் நிறைய தருணங்களில் நான் அழுதிருக்கிறேன், ஆனால் உடைந்து அழுத தருணம் என்றால் இளையராஜாவின் அலுவலகத்தின் முன் நின்ற அழுத நிகழ்வை குறிப்பிடுவேன். ஒரு முறை எனக்கும் இளையராஜாவுக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வந்தது.&nbsp; நான் எப்போதும் அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.</p>
    <p>நாங்கள் சண்டைபோடும்போதும்நான் அவரை அப்பா என்று அழைத்து தான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியே நின்றபோது இளையராஜா ஏதோ சொல்ல என்னை அழைத்தார். நான் சொல்லுங்க அப்பா என்று கேட்டேன். உடனே அவர் &ldquo;என்னை அப்பா என்று கூப்பிடாத, நீ என்ன எனக்கா பிறந்த?&rdquo; என்று என்னை கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.</p>
    <p>தான் எனது தாயின் இடத்தில் வைத்த ஒருவர் என்னை அப்படி கேட்டது என்னை உடைத்துவிட்டது. அந்த இடத்தில் ஒரு மணி நேரம் நின்றபடி அழுதுகொண்டிருந்தேன். அவர் ரொம்ப சாதாரணமாக அதை சொன்னார். என்னால் அவரை வெறுக்க முடியவில்லை. இளையராஜாவை யாராலும் வெறுக்கவே முடியாது&ldquo; என்று மிஷ்கின் கூறியுள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link