Tag: Idol

  • கரூரில் கருப்பணசாமிக்கு ஆயிரம் முட்டைகள், ஏழு கிடாவுடன் பிரம்மாண்ட அசைவ படையல்.. குவிந்த பக்தர்கள்

    கரூரில் கருப்பணசாமிக்கு ஆயிரம் முட்டைகள், ஏழு கிடாவுடன் பிரம்மாண்ட அசைவ படையல்.. குவிந்த பக்தர்கள்


    <p style="text-align: justify;"><strong>கரூர் காணியாளம்பட்டியில் தமிழகத்தின் முதல்முறையாக மேற்கு திசை நோக்கி உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ஆலயத்தில் 21 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கருப்பு சுவாமி சிலை நிறுவப்பட்டது.</strong></p>
    <p style="text-align: center;"><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/a6c392fc0d0cd145a0fb324cb22d97851708012483218113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அருகே உள்ள கோயில்பட்டி பகுதியில் பிரம்மாண்டமாக பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ஆலயம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆலயத்தில் கிடாய் வெட்டி கருப்பசுவாமி 25 அடி சிலையை நிறுவப்பட்டது. மிகப்பெரிய அளவிலான கிரேன் வாகனத்தின் மூலம் சுமார் 50 டன் எடை கொண்ட கருப்பணசுவாமி சிலை பிரதிஷ்டையானது</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/5e160a655711b1ee378173064f44df0c1708012516622113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக பிரம்மாண்ட கருப்பண சுவாமிக்கு கையில் அருவாள் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக பிரம்மாண்ட வண்ண மாலை, எலுமிச்சம் கனிமாலை உள்ளிட்ட மாலைகள் அணிவித்து, பட்டாடை உடுத்தி தொடர்ச்சியாக கருப்பண சுவாமி வாசலில் படையலிட்டு அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் மற்றும் ஆட்டுக்கறி மற்றும் அன்னம் படைக்கப்பட்டு மதுபானம், சுருட்டு உள்ளிட்ட பொருட்கள், கருப்பண சுவாமிக்கு பிடித்தமான உணவுகளை வைத்து படையல் இட்டு தொடர்ச்சியாக அருள்வாக்கு வந்தபடி ஆலயத்தின் பூசாரி காளிமுத்து சுவாமிக்கு மகா தீபாராதனை &nbsp;காட்டினார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/9a45fc29ed4004b5b5c6276a0bfb7f871708012055717113_original.jpeg" /></p>
    <p style="text-align: center;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கருப்பண சுவாமிக்கு படையல் இட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கருப்பு சுவாமி பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். <strong>குறிப்பு – தமிழகத்தில் ஒரே கல்லினால் ஆன மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள கருப்பு சுவாமி கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.</strong></p>
    <p style="text-align: center;"><strong><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/219e47f00c299b8f6ff41e1d17dc67f71708012077841113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">இன்று நடைபெற்ற 18-ஆம் படி கருப்பண சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை முதல் யாக வேள்வி நடைபெற்றது அதைத் தொடர்ந்து&nbsp; காலை ஆகவேண்டி 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது அதன் பிறகு சாமி அந்தஸ்தை நிகழ்ச்சி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் அசைவிருந்து வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அருள்வாக்கும் சொல்லப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">குறிப்பாக குழந்தையின்மை திருமண தடை தொழில் தடை மற்றும் பில்லி சூனியம் ஏவல் கண் திருஷ்டி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு காணப்படுவதாக நம்பப்படுகிறது என ஆலயத்தின் தலைவர் காளிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/3f0115329dab5e89221493de36f3cfef1708012101429113_original.jpeg" /></p>
    <p style="text-align: center;">&nbsp;</p>
    <p style="text-align: center;"><strong>கருப்பண்ண சுவாமி ஆலய தலைவர் மற்றும் பூசாரி காளிமுத்து புகைப்படம்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</strong></p>
    <p style="text-align: left;">மேலும் பக்தர்கள் வசதிக்காக பிரத்யேகமாக காணியாளம்பட்டியில் இருந்து போக்குவரத்து வசதியும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் வரும் பக்தர்கள் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>

    Source link

  • Madras Highcourt : சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்ல.. சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

    Madras Highcourt : சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்ல.. சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?


    <p>சாலையோரத்தில் இருக்கும் கல்லுக்கு துணியை போர்த்தினால் அது கடவுள் சிலையாகிவிடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு உள்ளே செல்ல முடியாத வகையில் கடவுள் சிலை ஒன்றை உள்ளூர்வாசிகள் வைத்துள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>"சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்லை"</strong></h2>
    <p>இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த கல்லை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p>
    <p>அதில், "சாலையோரத்தில் கல் ஒன்றுக்கு பச்சை நிற துணியை போர்த்திவிட்டு, அது கடவுள் சிலை என்ற நிலையை அடைந்துவிட்டதாக ஒருவர் கூற முடியாது. தனியார் நிலத்தில் சிலையை வைத்துவிட்டு அதற்கு சொந்தமானவரின் உரிமைகளை அனுபவிக்க விடாமல் தடுக்க முடியாது. சமுதாயத்தில் இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுவது துரதிர்ஷ்டவசமானது. மக்கள் வளர மறுக்கின்றனர்" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.</p>
    <p>தனக்கு சொந்தமான இடத்தின் நுழைவாயில் அருகே உள்ள கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கோரி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், "பச்சைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த கல், &nbsp;தனியார் இடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல முடியாமல் கல் இடையூறாக இருந்தது.</p>
    <h2><strong>சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:</strong></h2>
    <p>கல்லை அகற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர் முயற்சித்துள்ளார். இருப்பினும், சில உள்ளூர்வாசிகள் அதை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். &nbsp;ஏனெனில், இது ஒரு கல் மட்டுமல்ல, அது ஒரு கடவுள் சிலை என்றும், அதில் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.</p>
    <p>குறிப்பிட்ட இடத்தில் இருந்து கல்லை அகற்றுவது சிவில் பிரச்னை என்றும் இந்த விவகாரத்திற்கான தீர்வை சிவில் நீதிமன்றமே வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் முன்வைத்தது.</p>
    <p>இந்த வாதத்தை மறுத்த நீதிமன்றம், "நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை இந்த நீதிமன்றம் கவனமாக ஆய்வு செய்தது. மனுதாரருக்குச் சொந்தமான இடத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த கல்லை பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று யாரோ ஒருவர் அழைக்க முயற்சி செய்கிறார்.</p>
    <p>அந்த இடத்தில், தனது சொத்தை அனுபவிக்க விடாமல் மனுதாரரை தடுத்துள்ளனர். மனுதாரரால் கல்லை அகற்ற முடியவில்லை. இதற்காக, மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுக முடியாது" என தெரிவித்தது.</p>
    <p>&nbsp;</p>

    Source link