Tag: fisherman arrest

  • CM Stalin: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தொடரும் தமிழக மீனவர்கள் கைது

    CM Stalin: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தொடரும் தமிழக மீனவர்கள் கைது


    CM Stalin: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
    முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
    இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்க  நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (15-3-2024) கடிதம் எழுதியுள்ளார்.
    அக்கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள  முதலமைச்சர் ஸ்டாலின், இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
    இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்பிரச்னைகளுக்கு தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    மீனவர்கள் கைது:
    தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இன்று ஒரே நாளில் தமிழகத்தின் 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    நாகப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இவ்வாறு இலங்கை கடற்படையின் கைதுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும் காங்கேசன் துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Kavitha Arrest: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!
    Lok Sabha Election 2024: சிதம்பரம், விழுப்புரத்தில் மீண்டும் வி.சி.க. போட்டி – வெளியானது வேட்பாளர் பட்டியல்?

    மேலும் காண

    Source link

  • Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

    Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..


    <p>இலங்கைக்கு பீடி இலை&nbsp; கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்&nbsp; லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ ,காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்&nbsp; விசாரணைக்காக வைத்துள்ளனர்.</p>
    <p>தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. &nbsp;</p>
    <p>இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.&nbsp;எல்லை தாண்டி மீன்பிடிப்பது, கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், &nbsp;இலங்கைக்கு பீடி இலை&nbsp; கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்&nbsp; லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்&nbsp; விசாரணைக்காக வைத்துள்ளனர்.</p>
    <p>நெல்லை மாவட்டம் கூந்தங்குழி கடற் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சுமார் 2 டன் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்ற பைபர் படகை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p>
    <p>தற்போது இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் பிடி இலை கடத்திய மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன் ,மரிய அந்தோணி மற்றும் லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த காட்வே சிலுவைப் பட்டியை சேர்ந்த டிஜோ என்பது தெரியவந்தது.&nbsp; இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டதாக மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.</p>

    Source link

  • Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..

    Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..


    <p>ராமேஸ்வரம் மீனவர்கள்&nbsp;&nbsp; 19 பேர் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.</p>
    <p>இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை &nbsp;அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>&nbsp;ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து&nbsp; நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்&nbsp; 2,500 க்கு மேற்பட்ட மீனவர்கள்&nbsp; மீன் பிடிக்க கடலுக்கு சென்று&nbsp; கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே&nbsp; மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 19 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று உள்ளனர்.&nbsp; இது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.</p>
    <p>இதேபோல் கடந்த வாரம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 வாரங்களாக சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>இதனை தொடர்ந்து, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்&zwnj; குழுவின்&zwnj; மூலம்&zwnj; மீனவர்&zwnj; பிரச்சினையைத்&zwnj; தீர்ப்பதற்கும்&zwnj; இலங்கைக்&zwnj; கடற்படையினரால்&zwnj; கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்&zwnj;, அவர்களது மீன்பிடிப்&zwnj; படகுகளையும்&zwnj; விடுவித்திடவும்&zwnj; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்&zwnj; துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்&zwnj; ஸ்டாலின்&zwnj; கடிதம்&zwnj; அனுப்பினார்.</p>
    <p>இது தொடர்பான கடிதத்தில், சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள்&zwnj; தொடர்ந்து இதுபோன்று இலங்கைக்&zwnj; கடற்படையினரால்&zwnj; கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும்&zwnj;, இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்&zwnj; என்பதால்&zwnj;, இதில்&zwnj; ஒன்றிய அரசு உடனடி கவனம்&zwnj; செலுத்த வேண்டிய அவசியம்&zwnj; ஏற்பட்டுள்ளதாகவும்&zwnj; முதலமைச்சர்&zwnj; தனது கடிதத்தில்&zwnj; குறிப்பிட்டுள்ளார்&zwnj;.</p>

    Source link

  • CM MK Stalin Seeks Release Of Tamil Nadu Fisherman Arrested By Sri Lankan Navy Writes Letter To Union Minister Jaishankar

    CM MK Stalin Seeks Release Of Tamil Nadu Fisherman Arrested By Sri Lankan Navy Writes Letter To Union Minister Jaishankar

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. கைது செய்வது மட்டும் இன்றி அவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் படகுகளை பறிமுதல் செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யப்படுவது நின்றபாடில்லை. 
    இலங்கை கடற்படையின் அட்டூழியம்:
    இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்தும் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    முதலமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
    நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறை சிறைபிடித்தனர் என்றும், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
    மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
    கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
    இதையும் படிக்க: IND vs AFG 3rd T20 LIVE Score: தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு 

    Source link