Tag: Exam

  • TN TRB SGT Notification 2024 Secondary Grade Teachers apply from tomorrow feb 14 Check Vacancy Exam Date All Details | TN TRB SGT Notification: 1768 பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
    TN TRB SGT Notification 2024 Secondary Grade Teachers apply from tomorrow feb 14 Check Vacancy Exam Date All Details | TN TRB SGT Notification: 1768 பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


    1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (பிப்.14) தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்
    பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.
    எனினும் தற்போது போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்‌துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இதற்கு பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    வயது வரம்பு
    தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
    எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர், பிசி முஸ்லிம்கள், எம்பிசி ஆகிய பிரிவினருக்கு அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம்.
    கல்வித் தகுதி
    * ஆசிரியர்களுக்கான பி.எட். அல்லது டி.டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்புகள்
    மற்றும் 
    * தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TNTET)
    தேர்வு முறை
    * கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
    * எழுத்துத் தேர்வு
    * சான்றிதழ் சரிபார்ப்பு

    சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

     
    * 10வது வகுப்பு/ எஸ்.எஸ்.எல்.சி.
     
    * 12வது வகுப்பு/ மேல்நிலைப் படிப்பு/ டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு.
     
    * ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ / தொடக்கக் கல்வியில் டிப்ளமோ / டிப்ளமோ (சிறப்புக் கல்வி)
     
    * பட்டப்படிப்புச் சான்றிதழ் அல்லது தற்காலிகச் சான்றிதழ்
     
    * இளநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்
     
    * தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் (TNTET) – தாள் I
     
    * தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் (PSTM) சான்றிதழ் (தேவைப்பட்டால்)
     
    * ஊனமுற்றோர் சான்றிதழ் (தேவைப்பட்டால்)

    விண்ணப்பிப்பது எப்படி?
    * இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 
    * லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.
    இதற்கு முன்னதாக, விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிக்கையை  https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf என்ற இணைப்பில் காணலாம். 
    கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/

    மேலும் காண

    Source link

  • //// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக
    //// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக

    Punjab: பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக அவரைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதச்சென்று பிடிப்பட்டுள்ளார். 
    உண்மையாக காதலிப்பவர்கள் தனது காதலிக்காகவும், காதலனுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பலரும் கூறுவர். இருப்பினும், இந்த காலத்தில் அப்படி செய்வது அரிவது என்றும் பலரும் கூறுவார்கள். சில நேரங்களில் காதலுக்காகவும், காதலிப்பவர்களுக்காகவும் சில விபரீதமான செயல்களையும் சிலர் செய்வார்கள். ஆனால், அப்படி பேசுபவர்களை வாய் அடைக்க செய்தது ஒரு இளைஞரின் செயல். 
    காதலிக்காக தேர்வு எழுதி சென்ற இளைஞர்:
    பஞ்சாப் மாநிலம் கோட்காபூரா பகுதியைச் சேர்ந்தவர் பெண் பரம்ஜித் கௌர் (26). பட்டப்படிப்பை முடிந்த இவர், அரசு பணிகளுக்காக தேர்வு எழுதி வருகிறார்.  ஆனால், இவர் எழுதிய தேர்வில் எதிலும்  இவர் தேர்ச்சி பெற்றதில்லை.  
    இதுகுறித்து தனது காதலான அன்கிரீஸ் சிங்கிடமும் பலமுறை கூறி வருத்தப்பட்டு உள்ளார்.  இந்த மன வருத்தத்தை போக்க தான் உனக்கு பதிலாக நான் தேர்வு எழுதுகிறேன் என்று காதலன் அன்கிரீஸ் சிங் (31) கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சுகாதார பணியாளர்கள்  தேர்வுக்காக 2 மாதங்களாக தீவிரமாக படித்து வந்தார் அன்கிரீஸ் சிங்.
    அன்கிரீஸ் சிங் தனக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிடுவான் என்ற தையரியத்தில் பெண் பரம்ஜித் கௌரும் இருந்து வந்துள்ளார்.
    காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்:
    இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி டிஏவி பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்றது. அப்போது, சுடிதார், லிப்ஸ்டிக், ஒட்டுமுடி, பொட்டு, கண்மை என தன்னை ஒரு பெண் போலவே மாற்றிக் கொண்டு  தேர்வு மையத்துக்கு சென்றார் அன்கிரீஸ் சிங். மேலும், தனது நடை மற்றும் முக பாவனைகளை பெண் போலவே மாற்றிக் கொண்டார்.
    அவரை பார்த்து யாருக்கும் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தன்னை ஒரு பெண் போல் காட்டினார். பின்னர், அனைவரையும் சோதனையிட்ட அதிகாரிகள் செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையில் புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்தன. தனது ஒரிஜினல் புகைப்படத்தில் இருந்த மீசையை போட்டோஷாப் கொண்டு மறைத்து தலை முடியையும் வளர்த்து வைத்திருந்தார்.
    இதை பார்த்த சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பயோ மெட்ரிக் கருவி மூலம் அவரது விரலை அதில் வைக்க செய்தனர். அப்போது, அன்கிரீஸ் சிங்கின் பெண் போல வேடமிட்டு வந்திருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  
    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பரம்ஜித் கௌரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் – பீகாரில் என்ன நடந்தது?
    Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?

    Source link