Tag: EVM

  • EVM VVPAT verification case supreme court assures to list before Lok Sabha election 2024

    EVM VVPAT verification case supreme court assures to list before Lok Sabha election 2024


    EVM case: கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது.
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு:
    கடந்த 1982ஆம் ஆண்டுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. பரவூர் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. 1998ஆம் ஆண்டுக்கு பிறகு, வாக்குச்சீட்டுக்கு பதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது அதிகரித்தது.
    கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த அனைத்து சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2004ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் வரலாற்று முடிவை எடுத்தது. மக்களவை தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவித்தது.
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
    கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தொடக்கத்தில் இருந்தே அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இதனால், விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டது. 
    யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ள விவிபேட் பயன்படுத்தப்பட்டது. வாக்களிக்கும் போது, ​​சீரியல் நம்பர், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய சீட்டு அச்சிடப்பட்டு வாக்காளருக்கு வழங்கப்படும்.
    கடந்த 2013ஆம் ஆண்டு நோக்சென் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இது முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் விவிபேட் பயன்படுத்தப்பட்டது. தற்போது, மக்களவை தொகுதியின் கீழ் வரும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் மட்டுமே விவிபேட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    உச்சநீதிமன்றத்தில் விசாரணை:
    இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் ஒப்புகை சீட்டு மூலம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் மூலம் சரிபார்ப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது.
    மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சங்கரநாராயணன், வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், நேஹா ரதி ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, இன்னும் இரண்டு வாரங்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது.
     

    மேலும் காண

    Source link

  • Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே

    Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே


    <p>இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?</strong></h2>
    <p>ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இது தொடர்பாக, பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்டு வருகிறது அந்த உயர் மட்ட குழு.</p>
    <p>ஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனநாயகத்துக்கு பாதகமான விளைவிகளை ஏற்படுத்தும் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும் என்றும் கூறி வருகின்றன.</p>
    <p>இந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுள் என்பது 15 ஆண்டுகள் ஆகும்.&nbsp;</p>
    <h2><strong>தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு:</strong></h2>
    <p>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், புதிய இயந்திரங்களை பயன்படுத்தி மூன்று முறை தேர்தலை நடத்தலாம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் மொத்தம் 11.80 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.</p>
    <p>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, ​​ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு செட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.<br />ஒன்று மக்களவைத் தொகுதிக்கும் மற்றொன்று சட்டமன்றத் தொகுதிக்கும் தேவைப்படும்.&nbsp;</p>
    <p>வாக்குப்பதிவு நடக்கும் நாள் உட்பட பல்வேறு நிலைகளில் இயந்திரங்களில் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், அதற்கு மாற்றாக கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (CUs), வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BUs), விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) தேவைப்படுகின்றன.</p>
    <p>பல்வேறு அம்சங்களை கருத்தில் எடுத்து கொண்டால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு குறைந்தபட்ச 46,75,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 33,63,300 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 36,62,600 விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களும் தேவைப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link