Tag: Enforcement Directorate

  • "இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!

    "இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!


    <p>டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள டெல்லியில் மதுபான கொள்கையை சாராய நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தி லஞ்சம் பெற்றதாக பகீர் புகார் எழுந்தது.</p>
    <h2><strong>பரபரப்பை கிளப்பிய கெஜ்ரிவால் கைது:</strong></h2>
    <p>இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத்துறை கைது செய்து வருகிறது. டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா (கைதுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டார்), ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்க்துறையால் கைது செய்யப்பட்டனர்.</p>
    <p>அந்த வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதால் தேசிய அளவில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.</p>
    <p>டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை 10 நாள்கள் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை முன்வைத்து.</p>
    <h2><strong>லஞ்சம் வாங்கினாரா கெஜ்ரிவால்?</strong></h2>
    <p>சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, "டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டார்.</p>
    <p>மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து மதுபான ஊழலில் முக்கிய புள்ளியாக உள்ளார். முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான். டெல்லி மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதற்காக சவுத் குழுமத்திடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றவர் கெஜ்ரிவால்.</p>
    <p>மதுபான ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சவுத் குழுமத்துக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டவர் கெஜ்ரிவால். பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக சவுத் குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் இருந்து 100 கோடி ரூபாய் கேட்டுள்ளார்.</p>
    <p>கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 45 கோடி ரூபாய் பணம் ஹவாலா வழிகளில் இருந்து வந்த லஞ்சம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கமூலமும் சாட்சிகளின் வாக்குமூலமும் அழைப்பு விவரப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி ஒரு தனிநபர் அல்ல. ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் நடத்தைக்கு ஒவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள்" என வாதிட்டார்.&nbsp;&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Delhi CM Kejriwal arrest following Jharkhand cm Hemant Soren episode list of leaders arrested by ED

    Delhi CM Kejriwal arrest following Jharkhand cm Hemant Soren episode list of leaders arrested by ED


    மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    எதிர்க்கட்சி தலைவர்களை தட்டி தூக்கும் ED: 
    அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த சில மாதங்களாகவே, அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வந்தது. இப்படிப்பட்ட சூழலில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
    கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முற்பட்டது. இதையடுத்து, தனது முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகிய நிலையில், சோரன் கைது செய்யப்பட்டார்.  
    ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சருமான பூபேஷ் பாகல், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவரை தவிர, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
    சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறை:
    தேர்தல் நெருங்கும் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்களை முடக்கும் நோக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக புகார் எழுந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார்.
    ஆம் ஆத்மி கட்சியில் மட்டும் நான்கு முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஜ்ரிவாலை தவிர, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை ஒப்பிடுகையில்  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
    கடந்த 2014லிருந்து 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 121 முக்கிய அரசியல் தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களில் 115  பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சிலருக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக கடந்த 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
    இதையும் படிக்க: Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. தேசிய அரசியலில் பரபரப்பு!

    மேலும் காண

    Source link

  • கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? தேசிய அரசியலில் பரபரப்பு!

    கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? தேசிய அரசியலில் பரபரப்பு!


    Kejriwal Arrest: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதையடுத்து, டெல்லி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
    எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தொடரும் ED நடவடிக்கை:
    சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய பாஜக அரசு மிரட்டி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் விதமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
    டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.
    இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகிறது.
    கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்?
    இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை ஒருமுறைக் கூட, அமலாக்கத்துறை முன்பு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியது. 

    மேலும் காண

    Source link

  • சென்னை கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

    சென்னை கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…


    சென்னையில் கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. 
    கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 10 மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் இன்று, சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 
    கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர, திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
    இதர மாநிலங்களில் சோதனை:
    தமிழ்நாடு மட்டுமன்றி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவ அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    தமிழ்நாடு மட்டுமன்றி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவ அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    தனக்கு சட்டவிரோதமாக சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், “அது எதுவும் செல்லாது. இதுபோன்று, கடந்த காலத்தில் குறிப்பிட்ட காரணத்தை சொல்லாமல் பொதுவாக அனுப்பப்பட்ட நோட்டீஸை செல்லாது என அறிவித்து, அதை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என குற்றஞ்சாட்டினார்.
    நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
    இன்னும் சில மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    Source link

  • 8ஆவது முறையாக சம்மன்.. ஊழல் வழக்கில் விடாது துரத்தும் ED.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?

    8ஆவது முறையாக சம்மன்.. ஊழல் வழக்கில் விடாது துரத்தும் ED.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?


    மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
    அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை:
    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
    மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. மார்ச் 4ஆம் தேதி, விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
    கடந்தாண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல்முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்குவதால் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிவாய்ப்பை பறிக்கும் நோக்கில் தன்னை கைது செய்ய மத்திய பாஜக அரசு சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். மேலும், தனக்கு சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்படுவதாக கூறி வருகிறார். 
    டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் விசாரணையில், 7 முறை சம்மன் அனுப்பியும் அதற்கு ஆஜராகாதது ஏன் என நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க உள்ளார்.
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப டெல்லி சிறப்பு நீதிமன்றம் எந்த வித தடையும் விதிக்கவில்லை. எனவே, தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. எவ்வளவு அதிக முறை அவர் சம்மன்களை நிராகரிக்கிறாரா, அதே அளவு அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அமலாக்கத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இதே வழக்கில் அவரை சிபிஐ விசாரணை செய்தது.

    மேலும் காண

    Source link

  • Mahua Moitra Summoned By Enforcement Directorate In Foreign Exchange Violation Case | ED

    Mahua Moitra Summoned By Enforcement Directorate In Foreign Exchange Violation Case | ED


    Mahua Moitra : லஞ்சம் பெற்ற வழக்கில் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மஹுவா மொய்த்ராவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
    தொடர் சவால்களை சந்திக்கும் மஹுவா மொய்த்ரா:
    நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் அனல் பறக்க கேள்விகளை எழுப்பியவர் மஹுவா மொய்த்ரா. இந்த கேள்விகளை எழுப்ப இவர், லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.
    இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார்.
    இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
    ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அமலாக்கத்துறை:
    தொடர் சவால்களை சந்தித்து வரும் மஹுவா மொய்த்ராவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாக மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது மட்டும் இன்றி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடக்க உள்ள விசாரணைக்கு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
    மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்தது. 
    அந்த வரிசையில், நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    இதையும் படிக்க: விவசாய சின்னத்தை இழக்கிறதா நாம் தமிழர்? கர்நாடக கட்சியால் வந்த சிக்கல்.. அடுத்த பிளான் என்ன?

    மேலும் காண

    Source link