Tag: CM Stalin Spain Visit

  • CM Stalin: ஸ்பெயினில் இருந்து வந்ததும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முதலும் முக்கியமான கடிதம்!

    CM Stalin: ஸ்பெயினில் இருந்து வந்ததும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முதலும் முக்கியமான கடிதம்!


    <p>தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். இந்த நிலையில், ஸ்பெயின் பயணம் குறித்து <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> கடிதம் எழுதியிருக்கிறார்.&nbsp;</p>
    <h2><strong>பயணம் வென்றது! களமும் வெல்லட்டும்!</strong></h2>
    <p>அதில், &rdquo;ஸ்பெயின் நாட்டில் தரையிறங்கிய மறுநாளே முதலீட்டாளர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்நாட்டின் முக்கியமான தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில் – முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, சென்னையில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலகத் தரத்துடன் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவிருப்பதை எடுத்துரைத்து, நமது மாநிலத்தில் உள்ள தொழிற்கட்டமைப்புகளை விளக்கி, ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.&nbsp;</p>
    <p>முதலீட்டாளர் சந்திப்பிற்கு வந்திருந்த நிறுவனத்தினர் பலரின் முகங்களிலும் நம்பிக்கை பளிச்சிட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் பேசத் தொடங்கினேன். &ldquo;ஸ்பெயின் மக்களைப் போலவே தமிழர்களும் தங்கள் மொழி மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.&nbsp;</p>
    <h2><strong>&rdquo;வரலாறு இல்லாத கூட்டம் வரலாற்றை திரிக்கும்&rdquo;</strong></h2>
    <p>பனி மூட்டத்தை விலக்கிக் கொண்டு சூரியக் கதிர்கள் வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஸ்பெயின் நாட்டின் அதிகாலைப் பொழுதினைப் போல, தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்பு சூழ்ந்திருந்த இருளும் பனியும் விலகி, வெளிச்சக் கதிர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அயராத முயற்சியினால் பாயத் தொடங்கியிருக்கின்றன. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதனைச் சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற்றைத் திரிக்கும்.</p>
    <p>பண்பாட்டைச் சிதைக்கும். மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். வதந்திகளைப் பரப்பும். அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும். உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொண்டால்தான், வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பார்கள்.</p>
    <p>நம்முடைய உடனடி களப்பணி என்பது நாடாளுமன்றத் தேர்தல் களம்தான். அதற்காக அமைக்கப்பட்ட மூன்று குழுக்களுமே தங்களுடைய பணியைத் தொடங்கி, சிறப்பாகத் தொடர்வதை அறிந்துகொண்டேன். தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நடத்தும் குழு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நல்லமுறையில் நிறைவு செய்துள்ளது.</p>
    <h2><strong>"தேர்தல் களத்தில் &lsquo;இந்தியா&rsquo; வின் வெற்றி அமையும்"</strong></h2>
    <p>கழகத்தினரின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஆலோசனை நடத்தி, கள நிலவரத்தை எடுத்துரைத்து, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறது.</p>
    <p>தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. தலைமையின் சொல்லை உத்தரவாக – கட்டளையாக ஏற்றுச் செயல்பட்டு வருவது மகிழ்வைத் தருகிறது. இது எப்போதும் தொடர வேண்டும்.</p>
    <p>தனிப்பட்ட என்னுடைய – உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது. ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் &lsquo;இந்தியா&rsquo;வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>

    Source link

  • CM Stalin Spain Visit: "பை பை ஸ்பெயின்" தாயகத்திற்கு உற்சாகமாக திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

    CM Stalin Spain Visit: "பை பை ஸ்பெயின்" தாயகத்திற்கு உற்சாகமாக திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!


    <h2><strong>நாளை சென்னை திரும்பும் முதல்வர்:</strong></h2>
    <p>ஸ்பெயின் சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, &rdquo;ஸ்பெயினில் நல்ல நினைவுகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் சொந்தங்களுக்கு நன்றி. ஸ்பெயினும், அதன் அற்புதமான மனிதர்களும் நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும்" என்று &nbsp;முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.&nbsp;</p>
    <h2><strong>முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம்:</strong></h2>
    <p>தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சென்றிருந்தார். &nbsp;ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.&nbsp;</p>
    <p>முதலில், ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, உரையாற்றினார்.</p>
    <p>இதனை அடுத்து, ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் &nbsp;நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் &nbsp;முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.</p>
    <h2><strong>ஒப்பந்தங்கள்:</strong></h2>
    <p>&nbsp;அதைத் தொடர்ந்து, ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr.Rafael Mateo மற்றும் நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் Mr.Manuel Majon Vilda ஆகியோர், தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்பட்டது.&nbsp;</p>
    <p>முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனம் ரூ.2500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p>
    <p>மேலும், ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;ஸ்பெயின் நாட்டின் கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரி ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="abp-article-title"><a title="Minister Anbil Mahesh: வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகள் படிப்பை நிறுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்!" href="https://tamil.abplive.com/education/children-should-not-stop-studying-because-of-poverty-minister-anbil-mahesh-poyymozhi-166010" target="_self">Minister Anbil Mahesh: வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகள் படிப்பை நிறுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்!</a></p>
    <p class="abp-article-title"><a title="Chennai: சென்னை மாநகரப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் – அச்சச்சோ!" href="https://tamil.abplive.com/news/chennai/chennai-mtc-bus-accident-female-passenger-get-injury-know-details-165984" target="_self">Chennai: சென்னை மாநகரப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் – அச்சச்சோ!</a></p>

    Source link

  • CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” – ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

    CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” – ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!


    <p>வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று &rdquo;ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர்&nbsp; ஸ்டாலின் உரையாற்றினார்.</p>
    <h2><strong>&rdquo;கடல் கடந்து வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி"</strong></h2>
    <p>அதன்படி, "தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால் பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.</p>
    <p>நீங்கள் பிறந்தங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அயல்நாட்டில் இருக்கக்கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும் உதவி புரிய வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்" என்றார்.</p>
    <p>தொடர்ந்து பேசிய அவர், &rdquo;ஆனால் சில நாட்ளுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கலைஞர் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம்.</p>
    <h2><strong>&rdquo;ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் பெருமைப்படுகிறேன்&rdquo;</strong></h2>
    <p>அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்.</p>
    <p>உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி. அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல: இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான்.</p>
    <p>பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தாலும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="abp-article-title"><a title="Kilambakkam Police Station: கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்..! பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு..!" href="https://tamil.abplive.com/news/chennai/kilambakkam-police-station-address-project-value-and-full-details-tnn-165697" target="_self">Kilambakkam Police Station: கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்..! பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு..!</a></p>

    Source link