Tag: Candidates

  • Supreme Court says contesting Candidates Need Not Disclose Every Moveable Property Owned By Them

    Supreme Court says contesting Candidates Need Not Disclose Every Moveable Property Owned By Them


    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி, இணையரின் (கணவன்/மனைவி) சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
    உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு:
    இந்த நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    கணிசமான மதிப்போ அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையை பிரதிபலிக்காத பட்சத்தில் அசையும் சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, வேட்பாளரின் இணையருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தேசு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கரிகோ க்ரி. இவரின் மனைவி மற்றும் மகனுக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    சொத்து விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டுமா?
    க்ரியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர், இது தொடர்பாக குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், க்ரியின் வெற்றி செல்லாது என அறிவித்தது.
    உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக க்ரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், க்ரியின் வெற்றி செல்லும் என அறிவித்தனர்.
    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், குறிப்பிட்ட அந்த வாகனங்களை க்ரி பரிசாகவும் வழங்கி இருப்பதும் விற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அந்த வாகனங்களை க்ரியின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமானதாகக் கருத முடியாது.
    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 123(2)ன்படி வாகனங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடாதது ஊழலாக கருத முடியாது. வாழ்வின் அனைத்து விவரங்களையும் வாக்காளர்கள் முன் வேட்பாளர் சமர்பிக்க வேண்டும் என கூறுவதை நாங்கள் ஏற்க விரும்பவில்லை.
    வாக்காளருக்கு தொடர்பு இல்லாத அல்லது பொருத்தமற்ற விஷயங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டாம். அவர்களுக்கும் தனியுரிமை உண்டு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதையும் படிக்க: PM Modi Chennai: “சென்னை என் மனதை வென்றது” ரோட்ஷோவுக்கு பிறகு பிரதமர் மோடி உருக்கம்!

    மேலும் காண

    Source link

  • Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டி; எங்கு தெரியுமா?

    Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டி; எங்கு தெரியுமா?

    Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக,பாஜக 5 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தெரிவித்தது.
    பாஜக 5வது பட்டியல்:
    18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 5வது பட்டியல் வெளியாகியது.
    மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி  ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
    மக்களவை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
    இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 5ஆம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
     

    BJP releases 5th list of candidates for the upcoming Lok Sabha elections. Nityanand Rai to contest from Ujiarpur. Giriraj Singh from Begusarai. Ravi Shankar Prasad from Patna Sahib. Kangana Ranaut from Mandi. Naveen Jindal from Kurukshetra. Sita Soren from Dumka. Jagadish… pic.twitter.com/xQOR2BDpA0
    — ANI (@ANI) March 24, 2024

    அதில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    மேலும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சம்பல்பூரில் போட்டியிடுகிறார். கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா, விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். அபிஜித்-க்கும் மேற்கு வங்க அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய மோதல் எழுந்ததையடுத்து, அரசியலில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் நீதிபதியாக ஓய்வு பெற்று அரசியலில் நுழைந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
    Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு

    Source link

  • lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram

    lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram


    மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024: (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும்.
    செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
    சரிபார்ப்பு:
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-னை முன்னிட்டு ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் EVM  (ம)  வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் VVPAT ஆகியவை வழங்கும் பொருட்டு  காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள வாக்குபதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

    சரிபார்த்தலின்போது (First Randomization) காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்,  தொடர்பு அலுவலர் / சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை கன்னியாகுமரி தொழிற்திட்டம், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    அதனை தொடர்ந்து மேற்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு  இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரம் கீழ்கண்ட எண்ணிக்கையில்  பிரித்து அளிக்கப்பட்டது.




    வ.எண்


    தொகுதி எண் மற்றும் பெயர்


    Ballot Unit


    Control Unit Count


    VVPAT Unit Count




    1


    28. ஆலந்தூர்


    481


    481


    521




    2


    29. திருப்பெரும்புதூர்


    438


    438


    474




    3


    36. உத்திரமேரூர்


    362


    362


    392




    4


    37. காஞ்சிபுரம்


    396


    396


    429


    மேற்படி சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் AJS Nidhi பள்ளி, சென்னையிலும் ஆகிய இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் காப்பு அறையில் (Strong room) வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் அக்காப்பு அறையானது 24 x 7 என்ற நிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். அனைத்து பாதுகாப்பு அறையிலும் CCTV Camera பொருத்தப்பட்டு 24×7 பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    தயாராகும் தேர்தல் அலுவலர்கள்
    தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்தல் பயிற்சியும் துவங்கியுள்ளது.  ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்த அனுபவம் உள்ள அலுவலர்களைக் கொண்டு,  கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று  தொடர்ந்து தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்களுக்கு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்  அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது

    மேலும் காண

    Source link

  • BJP Candidates List Released Lok Sabha 2024

    BJP Candidates List Released Lok Sabha 2024


    18வது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 9 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியது.
    மக்களவை தேர்தல்:
    இந்திய நாட்டில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும் இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது. 
    இந்நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வெளியிட்டு வருகின்றன. இன்று மாலை பாஜக மூன்றாம் கட்டமாக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. 
    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக களம் காண்கிறது. அதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 
    வேட்பாளர்களின் பெயர்கள்:
    அதில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை தொகுதியில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம், வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம், கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மன், நீலகிரி தொகுதியில் எல்.முருகன், பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.@DrTamilisaiGuv அவர்கள்..! pic.twitter.com/AI8rqCia35
    — BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 21, 2024
     
    விடுபட்ட பெண்கள்:
    ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது. பாஜகவில் இணைந்த விஜயதரணி, குஷ்பு, ராதிகா ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. 
    இதையடுத்து, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், அடுத்து வெளியிடப்படும் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், கன்னியாகுமரியில் போட்டியிடுவதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயதரணி, அந்த தொகுதியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வருகை தந்த விஜயதரணிக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 
    Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு

    Source link

  • Election contest candidates having criminal case follow rules and guidelines released by eci

    Election contest candidates having criminal case follow rules and guidelines released by eci


    இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
    குற்ற வழக்குகளை தெரிவிக்க வேண்டும்:
    வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.

    இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் படிவங்களை வரையறுத்துள்ளது.
    (i) படிவம் C-1 செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் வெளியீடு செய்ய.
    (ii) படிவம் C-2 செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் அரசியல் கட்சி வெளியீடு செய்ய
    (iii) படிவம் C-3 தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காக.
    (iv) படிவம் C-4 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக வேட்பாளரின் அறிக்கை.
    (v) படிவம் C-5 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக அரசியல் கட்சியின் அறிக்கை.
    (vi) படிவம் C-6 தலைமை தேர்தல் அதிகாரியின் பயன்பாட்டிற்காக. அலுலவக
    (vii) படிவம் C-7 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அறிக்கை அளிக்க வேண்டும்.
    மேற்காணும் பொருள் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை வெளியிட்டார். 
    Also Read: Breaking News LIVE: பாஜக அமமுக கூட்டணியிடையில் 2 தொகுதிகள் உறுதியானது

    மேலும் காண

    Source link