<p><strong>பாலிவுட் திரையுலகில் 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </strong></p>
<p>பொதுவாக சினிமாவை பொறுத்தவரை லாபம், நஷ்டம் என்பது சகஜமான ஒன்று என்றாலும் படங்களை வெளியிடுவது என்பது சவால் நிறைந்தது. அதுவும் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் காலக்கட்டங்களில் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு தியேட்டர் மட்டுமல்ல ஒரு காட்சி கூட திரையிட முடியாத அளவுக்கு சிக்கல் இருக்கும். சிறு <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> படங்கள் பல தரமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இதனால் பல படங்கள் ரிலீசாகமல் முடங்கி போயுள்ளதோடு, பல பேரின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விட்டது. </p>
<p>இப்படியான நிலையில் பெரிய நடிகர்கள் படங்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் ஆகியோர்களின் பணப் பிரச்சினை காரணமாக படம் வெளியாகாமல் முடங்கி விடும். ஆனால் ஓடிடி தளங்கள் அந்த எண்ணங்களை முற்றிலுமாக மாற்றி படைப்புச் சுதந்திரத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப்பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கே இந்த நிலைமையா என நினைக்கலாம். அப்படி என்ன பிரச்சனை அந்த படத்தில் என பார்ப்போம். </p>
<p>பிக், விக்கி டோனர், பிகு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஷூஜித் சிர்கார் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷூபைட் என்ற படத்தை இயக்கினார். இப்படம் Labour Of Love என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் அமிதாப்பச்சன், சரிகா, ஷ்ருஷ் ஜூட்ஷி, சஞ்சிதா ஷேக், நவாசுதீன் சித்தி என பலரும் நடித்திருந்தனர்.ஷூபிட் படம் முதலில் ஹாலிவுட்டில் வெளியிடப்பட்டு பின்னர் இந்தியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது தான் 12 ஆண்டுகள் இப்படம் கிடப்பில் கிடப்பதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. </p>
<p>நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஷூஜித், “ஷூபிட் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம். அமிதாப் பச்சனுடன் இது எனக்கு முதல் படம். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் எப்படி நியாயம் செய்திருக்கிறார் என்பதை நான் ரசிகர்களுக்கு காட்ட விரும்புகிறேன். டயலாக் டெலிவரிக்கு பெயர் பெற்ற அமிதாப்பச்சன், இந்த படத்தில் எதுவும் பேசாமல் நடித்துள்ளார். ஆனால் சில எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது. தற்போது அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சித்து வருகிறோம். இந்தப் படத்தை விரைவில் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார். </p>
Tag: Amitabh Bachchan

Amitabh Bachchan: 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம்.. என்னதான் பிரச்சனை?

அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?
<p>உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.</p>
<h2><strong>அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் அயோத்தி:</strong></h2>
<p>ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், அயோத்தியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் மத்திய அரசு அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. 1450 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன்அயோத்தி விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத கலாசார பாரம்பிரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதுமட்டும் இல்லாமல் அயோத்தியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அயோத்தியில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வீட்டு மனை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழு நட்சத்திர குடியிருப்பு பகுதியில் அவர் வீட்டு மனை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.</p>
<p>தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா குடியிருப்பு நிறுவனத்திடமிருந்துதான் அமிதாப் பச்சன் வீட்டு மனையை வாங்கியுள்ளார். எவ்வளவு சதுர அடிக்கு, எவ்வளவு ரூபாய்க்கு அவர் நிலம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், 10,000 சதுர அடி நிலத்தை 14.5 கோடி ரூபாய்க்கு அமிதாப் பச்சன் வாங்கிருப்பதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p>
<h2><strong>அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்:</strong></h2>
<p>ராமர் கோயிலில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் அமிதாப் பச்சன் வாங்கிய வீட்டு மனை அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். வரும் 2028ஆம் ஆண்டு, மார்ச் மாதத்துக்குள் வீட்டு மனையில் குடியிருப்பு கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியிருப்பு வளாகத்தில் ஐந்து நட்சத்திர விடுதி ஹோட்டலும் அமைய உள்ளது.</p>
<p>இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமிதாப் பச்சன், "எனது இதயத்தில் ஒரு தனித்து இடத்தைப் பிடித்திருக்கும் நகரமான அயோத்தியில் அபிநந்தன் லோதா குடியிருப்புடன் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். காலத்தால் அழியாத ஆன்மீக தளமாகவும்<br />கலாச்சார செழுமை மிக்க நகரமாகவும் அயோத்தி விளங்குகிறது. புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளது.</p>
<p>இது, அயோத்தியை நோக்கிய இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கமாகும். அங்கு பாரம்பரியமும் நவீனமும் பின்னி பிணைந்துள்ளது.<br />உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்கி என்னை தட்டி எழுப்புகிறது. உலகின் ஆன்மீக தலைநகரில் எனது வீட்டைக் கட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.</p>
<p> </p>


