Tag: 12th Fail

  • 12th Fail Actor Vikrant Massey apologises for viral 2018 tweet featuring Ram-Sita cartoon Never my intention to hurt Hindu community
    12th Fail Actor Vikrant Massey apologises for viral 2018 tweet featuring Ram-Sita cartoon Never my intention to hurt Hindu community


    சமீபத்தில் இந்தியில் வெளியாகி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் 12th ஃபெய்ல். இப்படம் இந்தியா முழுவதும்  விமர்சனரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர், நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், நாளிதழ் ஒன்றில் வெளியான கார்ட்டூனை பதிவிட்டு, ”அரைவேக்காட்டு உருளைக்கிழங்கு மற்றும் அரைவேக்காட்டு தேசியவாதிகள் குடலில் வலியை மட்டுமே ஏற்படுத்துவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கார்ட்டூனில், ”நான் ராவணனால் கடத்தப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்கள் பக்தர்களால் அல்ல” என சீதா கூறுவதைப் போன்ற படமும் உள்ளது. 

    இந்நிலையில் சமூக வலைதளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட விக்ராந்த் மாஸ்ஸியின் இந்தப் பதிவு தற்போது சர்சையைக் கிளப்ப,  அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார். இந்தப் பதிவினை கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவாவில் எட்டு வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விக்ராந்த் மாஸ்ஸி பகிர்ந்துள்ளார்.
    இந்தப் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளதால், இது தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ள விக்ராந்த், “இந்து சமூகத்தை காயப்படுத்தவோ, அவமதிக்கவோ அல்லது அவமரியாதை செய்யவோ தான் ஒருபோதும் விரும்பவில்லை” என தன் எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

    In context to one of my Tweets way back in 2018, I’d like to say a few words: It was never my intention to hurt, malign or disrespect the Hindu community. But as I reflect in hindsight about a Tweet made in jest, I also release the distasteful nature of it. The same could…
    — Vikrant Massey (@VikrantMassey) February 20, 2024

    மேலும், “2018இல் எனது ட்வீட் ஒன்றின் பின்னணி குறித்து, எனது தரப்பு வாதத்தை வெளிப்படுத்த நினைக்கின்றேன். இந்து சமூகத்தை புண்படுத்துவது, இழிவுபடுத்துவது அல்லது அவமரியாதை செய்வது எனது நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை.
    ஒரு நாளிதழில் வெளியான கார்ட்டூனைச் சேர்க்காமல் இதை சொல்லியிருக்கலாம். எல்லா நம்பிக்கைகளையும் மதங்களையும் நான் மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, புண்படுத்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் நான் மிகவும் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் காலப்போக்கில் வளர்ந்து நமது தவறுகளை நினைத்துப் பார்க்கிறோம். இந்தத் தவறு என்னுடையது” எனத் தெரிவித்துள்ளார். 

    மேலும் காண

    Source link

  • Anand Mahindra Meets Couple That Inspired 12th Fail Takes Autograph
    Anand Mahindra Meets Couple That Inspired 12th Fail Takes Autograph


    12th Fail: ஐ.பி.எஸ். மனோஜ்குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். இருவரும் தான் உண்மையான ஹீரோக்கள் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 
    12த் ஃபெயில் படம்:
    இந்தியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டரில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெளியான படம் ‘12த் ஃபெயில் (12th Fail)’.  சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார்.
    இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி என பலரும் நடித்துள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின்  வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப் படம் பரவலான கவனம்  பெற்றது. இந்த படத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
    12த் ஃபெயில் பட நிஜ தம்பதிகளுடன் ஆனந்த் மஹிந்திரா:
    இந்த நிலையில், ’12த் ஃபெயில்’ படத்தின் உண்மையான தம்பதிகளை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சந்தித்திருக்கிறார். ஐ.பி.எஸ். அதிகாரி மனோஜ் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். ஆகியோரை சந்தித்து ஆட்டோகிராஃப் வாங்கினார்.

    They were shy when I requested them for their autographs, which I am proudly holding. But they are the true real-life heroes Manoj Kumar Sharma, IPS and his wife Shraddha Joshi, IRS. The extraordinary couple on whose lives the movie #12thFail is based. Over lunch today, I… pic.twitter.com/VJ6xPmcimB
    — anand mahindra (@anandmahindra) February 7, 2024

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”நான் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டபோது, அவர்கள் வெட்கப்பட்டனர். ஐ.பி.எஸ். மனோஜ் குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ்., இருவரும் உண்மையான ஹீரோக்கள். இன்று அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டேன். 12த் ஃபெயில் படம் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை  அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதை தெரிந்து கொண்டேன்.
    நேர்மையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மக்கள் பின்பற்றினால், இந்தியா மிக விரைவில் வல்லரசாகும். இவர்கள் தான் இந்த நாட்டில் உண்மையான பிரபலங்கள். அவர்களிடம் பெற்ற ஆட்டோகிராஃபை எனது பரம்பரை சொத்தாக கருதுகிறேன்” என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். 

    மேலும் காண

    Source link

  • vikranth massey could not stop crying reveals 12th fail assistant director jaskunwar kohli
    vikranth massey could not stop crying reveals 12th fail assistant director jaskunwar kohli


    படத்தில் மிக முக்கியமான ஷாட் முடிந்த பின் நடிகர் விக்ராந்த் மாஸி கதறி அழுததாக 12th ஃபெயில் படத்தின் உதவி  இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
    12th ஃபெயில்
    கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸி, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியானது. ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. மனோஜ் குமார் தனது வாழ்க்கையில் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஐ.பி. எஸ் பரிட்சையில் வெற்றிபெறும் தருணம் மிக உணர்ச்சிகரமாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட விதம் ரசிகர்களை மிக உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
    விக்ராந்த் மாஸ்ஸி
    இப்படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கும் முக்கிய காரணங்களில் ஒருவர் நடிகர் விக்ராந்த் மாஸி. Death In The Gunj, Lootera உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸி. தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வரும் விக்ராந்த், முன்னதாக நடித்த டெத் இன் தி கஞ்ச் படத்தில்  கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து மீளமுடியாமல் வளர்ந்த ஒரு மனிதனின் உளவியலை தனது நடிப்பில் வெளிப்படுத்தினார். 12th  ஃபெயில் படத்தில் மனோஜ் குமாராக அவர் நடித்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. 

    ஷாட் முடிந்தபின் கதறி அழுதார்
    விக்ராந்த் மாஸி இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடித்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இப்படத்தின் உதவி இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இப்படி கூறியுள்ளார். “இந்தப் படத்தின் இறுதிகாட்சியில் கதாநாயகன் மனோஜ் குமார் தனது தேர்வு முடிவுகளைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசமாக அழுவார். நின்றவாக்கில் தரையில் முழங்காலில் விழுந்து அழ வேண்டும். அந்த காட்சி நிறைய டேக் எடுத்தது , ஆனால் விக்ராந்த் மாஸி மறுபடி மறுபடி எழுந்து மீண்டும் முழங்காலில் விழுந்து  நடித்துக்கொண்டே இருந்தார். அந்த காட்சியில் அவருக்கு ஒரு வசனம்தான் இருந்தது.
    அந்த காட்சி முடிந்து இயக்குநர் கட் சொன்னபிறகும் கூட விக்ராந்த் மாஸி அழுவதை நிறுத்தவில்லை. அவர் தொடர்ச்சியாக அந்த ஒரு வரியை சொல்லிக்கொண்டே இருந்தார். மனோஜ் குமாரைப்போல் இந்த இடத்திற்கு வர தனக்கு 19 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று விக்ராந்த் மாஸி தெரிவித்தார்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் காண

    Source link

  • 12th Fail Movie Actor Vikrant Massey Says He Could Not Stop Crying Even After The Director Says Cut
    12th Fail Movie Actor Vikrant Massey Says He Could Not Stop Crying Even After The Director Says Cut

    12th ஃபெயில்
    கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸ்ஸே, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
    ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப் படம் பரவலான கவனம்  பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் மனோஜ் குமாராக நடித்த விக்ராந்த் மாஸ்ஸே இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.
    கட் சொன்னபிறகும் அழுகையை நிறுத்தமுடியாது

    This scene still has my heart. Rona aa gaya tha. 🥹#12thFail is a Masterpiece.Mujhe abhi bhi Goosebumps aa rhe hai. 🔥#VikrantMassey You nailed it. 💯pic.twitter.com/WOiz4WP8Ev
    — Believer (@Believer2202) December 31, 2023

    Death In The Gunj, Lootera உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸ்ஸே. தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வரும் விக்ராந்த், முன்னதாக நடித்த டெத் இன் தி கஞ்ச் படத்தில்  கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து மீளமுடியாமல் வளர்ந்த ஒரு மனிதனின் உளவியலை தனது நடிப்பில் வெளிப்படுத்தினார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபின் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதனை சரிசெய்ய தான் மனநல ஆலோசனை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
    சமீபத்தில் வெளியாகிய 12th ஃபெயில் படத்தைப் பொறுத்தவரை ஒரு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஒருவர் படித்து ஐ,ஏ எஸ் அதிகாரி ஆவதன் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிவசமான  நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் தான் அழும் காட்சிகளில் நடித்துகொண்டிருந்தபோது டைரக்டர் கட் சொன்ன பிறகும் தன்னால் அழுகையை நிறுத்த முடியாமல் அழுகொண்டே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
    விக்ராந்தை பாராட்டிய கங்கனா ரனாவத்
    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விக்ராந்த் மற்றும் கங்கனா ரனாவத் இருவருக்கும் இடையில் நடந்த கருத்து மோதல் காரணமாக விக்ராந்தை கங்கனா கரப்பான்பூச்சி என்று திட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து 12th ஃபெயில் படத்தைப் பார்த்த கங்கனா ரனாவத் விக்ராந்தின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமில்லாமல், அவர் பார்க்க நடிகர் இர்ஃபான் கான் மாதிரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தி சினிமாவில் இர்ஃபான் கான் விட்டுச் சென்ற வெற்றிடத்தை விக்ராந்த் நிரப்புவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Source link