Tag: 10 ஆண்டு சிறை

  • விழுப்புரம்: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர்: 10 ஆண்டு சிறை தண்டனை

    விழுப்புரம்: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர்: 10 ஆண்டு சிறை தண்டனை


    <p>விழுப்புரம் : காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்னை ஏமாற்றி &nbsp;பாலியல் வண்புணர்வில் ஈடுபட்ட வழக்கில் இளைஞருக்கு பத்தாண்டு &nbsp;சிறைதண்டனையும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>
    <h2>ஆசைவார்த்தை கூறி உல்லாசம்&nbsp;</h2>
    <p>விழுப்புரம் அருகே சித்தாமூரைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் பாலகுமார், இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் 23 வயதுடைய ஒரு இளம்பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். அப்போது பாலகுமார் அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் உறவில் இருந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம், அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததால் அவர் பாலகுமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார்.</p>
    <h2>போலீஸ் விசாரணை&nbsp;</h2>
    <p>அதற்கு அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணை ஆபாச வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அதற்கு உடந்தையாக பாலகுமாரின் தந்தை அய்யனார், தாய் நாவம்மாள் ஆகியோரும் இருந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமார், அய்யனார், நாவம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.</p>
    <h2>நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு&nbsp;</h2>
    <p>இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் &nbsp;நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பாலகுமாருக்கு &nbsp;10 சிறைதண்டனையும், ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை &nbsp;ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், அய்யனார், நாவம்மாள் ஆகிய இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலகுமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.</p>

    Source link

  • New Bill Proposes ₹ 1 Crore Fine, 10 Years Jail For govt Exam Paper Leak know in detail

    New Bill Proposes ₹ 1 Crore Fine, 10 Years Jail For govt Exam Paper Leak know in detail


    யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
    இதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று (மக்களவையில்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024 என்று பெயரிடப்பட்டுள்ளது.
    ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
    இதற்கிடையில், இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.  இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    புதிய மசோதா
    இதைத் தடுக்கும் நோக்கில் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா இன்று (பிப்.5) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024 என்று பெயரிடப்பட்டுள்ளது.
    மசோதா கூறுவது என்ன?
    தேர்வு வினாத் தாள்களை வேண்டுமென்றே கசிய விடும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட், ஜேஇஇ, க்யூட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள், தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    இதையும் வாசிக்கலாம்: JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?
     

    மேலும் காண

    Source link