Tag: ஷீத்தல்

  • Actor Babloo Prithiveera relationshiop separation about sheetal she is opened to social media

    Actor Babloo Prithiveera relationshiop separation about sheetal she is opened to social media


    Babloo Prithiveeraj: பப்லு பிரித்விராஜ் உடனான பிரிவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷீத்தல் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். 
    பப்லு பிரித்விராஜ்
    1979-ல் வெளியான நான் வாழவைப்பேன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பப்லு பிரித்விராஜ். அதன்பின், அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த, பப்லு பிரித்விராஜூக்கு ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. 
    அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தற்போது  ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக இருந்து வரும் பப்லு ப்ரித்விராஜ் தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை.
    இதற்கிடையில், தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அவரை பிரிந்த பப்லு ப்ருத்திவிராஜ் கடந்த ஆண்டு மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்ததாக இணையத்தில் தகவல்கள் கசிந்தன. 
    ”நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்”
    இதனை அடுத்து, ஷீத்தல், பப்லுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்துமே தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி, பப்லுவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சூசகமாக கூறினார். இதற்கு இவர்கள் இருவரும் எந்தவித கருத்தும் எங்கேயும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
    இந்த நிலையில், தற்போது ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “என்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி பலரும் கேட்கின்றனர். பலரும் என்னுடைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல், என்னை தவறாக புரிந்து கொள்கின்றனர்.
    பிருத்வியும் நானும்  திருமணம் செய்து கொள்ளவில்லை.நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் நினைத்தப்படி இல்லை. நாங்கள் சேர்ந்து இருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன.  அதனால், சில மாதங்களாக பிரிந்து இருக்கிறோம்.
    ஆனால்,  இது பிரிவிற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து, எங்களுக்கான நேரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த நேரத்திற்கு எங்களுக்காக அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    மேலும் படிக்க
    Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!
    Rajinikanth: தலைவர் என்றும் வேற லெவல்.. 15 பேருக்காக ரஜினிகாந்த் நடித்த படம்!

    மேலும் காண

    Source link

  • Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!

    Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!


    <p>நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
    <p>1980,90 காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் கடந்த 20 வருடங்களாக தன் மீதான அந்த எண்ணத்தை அவர் படிப்படியாக மாற்றி வருகிறார். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். உண்மையில் அந்த நிகழ்ச்சியில் ஷகீலாவின் கடந்த கால எண்ணங்களை எல்லாம் மாற்றி போட்டு விட்டது.&nbsp;</p>
    <p>இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். அதில் பங்கேற்பவர்களின் அறியப்படாத பக்கங்களையும், அவர்கள் செய்த தவறுகளையும் கேள்வி கேட்கும் அந்த நிகழ்ச்சியும் ஷகீலாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவர் மீது, வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் ஷகீலா, தனது சகோதரர் மறைந்து விட்ட காரணத்தால் அவரது மகள் ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.&nbsp;</p>
    <p>இதனிடையே நேற்று மாலை ஷகீலாவுக்கும், ஷீத்தலுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஷீத்தல் ஷகீலாவை தாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது வழக்கறிஞர் சௌந்தர்யாவுக்கு போன் செய்து விவரத்தை ஷகீலா கூறியதும், சமாதானம் பேச வழக்கறிஞர் வந்துள்ளார். முதலில் ஷீத்தலிடம் சமாதனமாக செல்லலாம் என போனில் பேசிய வழக்கறிஞர் சௌந்தர்யா அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.&nbsp;</p>
    <p>இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு தனது தாய் சசி, சகோதரி ஜமீலாவுடன் வந்த ஷீத்தல் ஆகியோரிடம் வழக்கறிஞர் சௌந்தர்யா சமாதானம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிகரெட் அணைக்கும் ட்ரேவை எடுத்து வழக்கறிஞர் தலையில் ஷீத்தல் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் தாயார் சசி சௌந்தர்யாவின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஷகீலாவுக்கு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டலும் விடுத்ததாக தகவல் வெளியானது.&nbsp;</p>
    <p>இதனையடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யா கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தன் மீதான தாக்குதல் குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஷகீலா மற்றும் ஷீத்தல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

    Source link