Tag: வைரமுத்து

  • டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…

    டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…

    நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து, அவருடனான கலந்துரையாடலை கவியாக வடித்துள்ளார்.

    அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ…

    https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08

    கடிகாரம் பாராத
    உரையாடல்
    சிலபேரோடுதான் வாய்க்கும்

    அவருள் ஒருவர்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    80நிமிடங்கள்
    உரையாடியிருக்கிறோம்

    ஒரே ஒரு
    ‘கிரீன் டீ’யைத் தவிர
    எந்த இடைஞ்சலும் இல்லை;
    இடைவெளியும் இல்லை

    சினிமாவின் அரசியல்
    அரசியலின் சினிமா
    வாழ்வியல் – சமூகவியல்
    கூட்டணிக் கணக்குகள்
    தலைவர்கள்
    தனிநபர்கள் என்று
    எல்லாத் தலைப்புகளும்
    எங்கள் உரையாடலில்
    ஊடாடி ஓய்ந்தன

    எதுகுறித்தும்
    அவருக்கொரு தெளிவிருக்கிறது

    தன்முடிவின் மீது
    உரசிப் பார்த்து
    உண்மை காணும்
    குணம் இருக்கிறது

    நான்
    அவருக்குச் சொன்ன
    பதில்களைவிட
    அவர் கேட்ட கேள்விகள்
    மதிப்புமிக்கவை

    தவத்திற்கு ஒருவர்;
    தர்க்கத்திற்கு இருவர்

    நாங்கள்
    தர்க்கத்தையே
    தவமாக்கிக் கொண்டோம்

    ஒரு காதலியைப்
    பிரிவதுபோல்
    விடைகொண்டு வந்தேன்

    இரு தரப்புக்கும்
    அறிவும் சுவையும் தருவதே
    ஆரோக்கியமான சந்திப்பு

    அது இது

    இவ்வாறு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவி பதிவிட்டுள்ளார்.

    அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ…

    https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08

    கடிகாரம் பாராத
    உரையாடல்
    சிலபேரோடுதான் வாய்க்கும்

    அவருள் ஒருவர்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    80நிமிடங்கள்
    உரையாடியிருக்கிறோம்

    ஒரே ஒரு
    ‘கிரீன் டீ’யைத் தவிர
    எந்த இடைஞ்சலும் இல்லை;
    இடைவெளியும் இல்லை

    சினிமாவின் அரசியல்
    அரசியலின் சினிமா
    வாழ்வியல் – சமூகவியல்
    கூட்டணிக் கணக்குகள்
    தலைவர்கள்
    தனிநபர்கள் என்று
    எல்லாத் தலைப்புகளும்
    எங்கள் உரையாடலில்
    ஊடாடி ஓய்ந்தன

    எதுகுறித்தும்
    அவருக்கொரு தெளிவிருக்கிறது

    தன்முடிவின் மீது
    உரசிப் பார்த்து
    உண்மை காணும்
    குணம் இருக்கிறது

    நான்
    அவருக்குச் சொன்ன
    பதில்களைவிட
    அவர் கேட்ட கேள்விகள்
    மதிப்புமிக்கவை

    தவத்திற்கு ஒருவர்;
    தர்க்கத்திற்கு இருவர்

    நாங்கள்
    தர்க்கத்தையே
    தவமாக்கிக் கொண்டோம்

    ஒரு காதலியைப்
    பிரிவதுபோல்
    விடைகொண்டு வந்தேன்

    இரு தரப்புக்கும்
    அறிவும் சுவையும் தருவதே
    ஆரோக்கியமான சந்திப்பு

    அது இது

    இவ்வாறு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவி பதிவிட்டுள்ளார்.

  • art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு

    art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு


    இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 
    ஞான பீட விருது:
    உருது கவிஞரும், இந்தி சினிமா பாடலாசிரியருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம்பத்ரச்சார்யா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட தேர்வுக்குழு வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து, இலக்கிய ஆளுமைகள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 
    கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்தினை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், என பன்முகம் கொண்ட குல்சாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் பலவற்றில், தமிழில் வைரமுத்துவும், இந்தியில் குல்சாரும் பாடல் வரிகளை எழுதிய நிலையில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதை தனது வரிகளில் நினைவு கூர்ந்துள்ளார். 
    தமிழ் மொழி புறக்கணிப்பு:
    கூடவே, ஞானபீட விருது கடந்த 22 ஆண்டுகளாக தமிழை புறக்கணித்து இருப்பது குறித்தும் வைரமுத்து அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் பதிவிட்டுள்ளதாவது, ”சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது.
    இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார். 
     

    சமஸ்கிருத மொழிக்காகசமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும்உருது மொழிக்காகஇலக்கிய ஆளுமை குல்சாரும்இந்த ஆண்டு ஞானபீட விருதைப்பகிர்ந்துகொள்வதுமகிழ்ச்சி தருகிறதுஇரு பேராளுமைகளுக்கும்வாழ்த்துக்கள்ஜெயகாந்தனுக்குப் பிறகுஞானபீடம்தமிழ்மொழியை 22ஆண்டுகள்தவிர்த்தே வருவதுதற்செயலானதன்று… pic.twitter.com/YLlP2kqykk
    — வைரமுத்து (@Vairamuthu) February 18, 2024

    மேலும் படிக்க
    Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
    Shaktimaan: அட… சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!
     

    மேலும் காண

    Source link

  • Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்

    Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்


    Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!
    இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஷங்கர்  மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க
    Kamala Cinemas: மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கும் ரீரிலீஸ்! எப்போ யாரு படங்கள்?
    வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அண்ணாமலை திரைப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் படமும் வெளியாக இருக்கிறது. மேலும் இதே தேதியில் விஜய்யின் திருமலை படமும் திரையிடப்படுகிறது. 
    இப்படங்கள் தவிர்த்து விஜய்  நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அஜித் குமார் நடித்த வாலி படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படிக்க
    One 2 One: வெளியானது சுந்தர் சி நடித்த ஒன் டூ ஒன் படத்தின் சிங்கம் சிறுத்தை பாடல் லிரிக்ஸ் வீடியோ!
    இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி அனுராக் கஷ்யப் நடித்துள்ள படம் One 2 One. இருவேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படமாக one to one படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து சிங்கம் சிறுத்தை என்கிற லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் அமைந்துள்ளது.மேலும் படிக்க
    Lal Salaam Box Office: வசூலில் சொதப்பிய ரஜினியின் லால் சலாம்! 9 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்ன?
    லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.55 கோடியும் இரண்டாவது நாளாக 3.25 மற்றும் மூன்றாவது நாளாக 3.15 கோடியும் வசூல் செய்தது.  இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. நான்காவது நாளாக 1.13 கோடிகளாக குறைந்த படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை நோக்கிச் சென்றுள்ளது. மேலும் படிக்க
    Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
    மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,  திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • Kavin, who is acting in Vetrimaran movie; Udayam theater closure, Vairamuthu in grief – Cinema headlines | Cinema Headlines :வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்; உதயம் தியேட்டர் மூடல், வேதனையில் வைரமுத்து

    Kavin, who is acting in Vetrimaran movie; Udayam theater closure, Vairamuthu in grief – Cinema headlines | Cinema Headlines :வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்; உதயம் தியேட்டர் மூடல், வேதனையில் வைரமுத்து


    Kavin: வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!
    கவினின் அடுத்த புதுப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க வெற்றி மாறனின் உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
    Udhayam Theatre: கண்ணீர் வடிக்கின்றேன்.. உதயம் தியேட்டர் மூடப்படுவதால் வைரமுத்து வேதனை!
    சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
    Ramki: நிரோஷாவே வேண்டாம் என சொல்லியும் கேட்கல.. நடிகர் ராம்கி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
    நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார். அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.மேலும் படிக்க
    SPB Pallavi: பல ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் எஸ்.பி.பி., மகள் பல்லவி – என்ன காரணம் தெரியுமா?
     தான் ஏன் பாடவில்லை என்பதை பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பா என்னிடம் நிறைய கிளாசிக்கல் இசை கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் எனக்கும் தம்பிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எஸ்.பி.பி.யின் பையன், பொண்ணு என்று சில வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதனால் விருப்பம் போய்விட்டது. ஆனால் முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாக இருக்காது. நான் நியாயமாக இருக்கிறேன் என்று சொல்வதை விட அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலும் படிக்க
    Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்
    ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • 12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song

    12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song


    இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள்.
    ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒரு சிலரோ ஏராளமான வேரியேஷன்கள் பாடல்களில் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் அதை கவனித்து இருந்தாலும் பெரும்பாலானோர் அதை ரசிக்க மட்டுமே செய்வார்கள் தவிர அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து பார்ப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒரு மெனக்கெடலுடன் எடுக்கப்பட்ட பாடல் தான் 12பி படத்தில் இடம்பெற்ற ‘ஒரு புன்னகை பூவே…’ பாடல். திரையில் நாம் பார்த்த காட்சிக்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக…
     

    படமாக்கியது எப்படி?2001ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஷ்யாம், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 12பி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற  லவ் பண்ணு, சரியா தவறா, முத்தம் முத்தம் முத்தம்மா, பூவே வாய் பேசும் போது, ஜோதி நெறஞ்சவ, ஒரு பார்வை பார், ஓ நெஞ்சே என அனைத்து பாடல்களுமே இன்று வரை அனைவரின் பிளே லிஸ்ட்களிலும் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்கள். 
    “ஒரு புன்னகை பூவே… சிறு பூக்களின் தீவே…” என்ற பாடலை கே கே மற்றும் பிரசாந்தினி பாடி இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இந்த பாடலை கேட்கவே மிகவும் அற்புதமாக  இருக்கும். இந்த பாடலின் மேக்கிங் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஜீவாவும், டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரமும் யோசித்த போது அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. 
    சம்மர் சீசன், மழைக்காலம், இலையுதிர் காலம், ஸ்னோ சீசன் என நான்கு சீசனும் இடம் பெரும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு பாடலுக்காக இவ்வளவு மெனெக்கெட்டு எடுத்து இருக்கிறார்களா? என தோன்றும். இது எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்பது தெரியாது என்றாலும் ஒரு பாடலுக்காக அவர்கள் எடுத்த இந்த மெனக்கெடல் பாராட்டிற்குரியது. இதே போல பல திரைப்படங்களிலும் பல பாடல்களின் பின்னணியிலும் ஏதாவது மறைந்து இருக்கும் ஸ்பெஷாலிட்டி இருக்கும். அவற்றை உற்று நோக்கும் போது தான் தெரியவரும். 

    மேலும் காண

    Source link