<p>விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.</p>
<p><strong>தேதி :</strong> 15-03-2024 வெள்ளிக்கிழமை</p>
<p><strong>இடம் :</strong> மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் </p>
<p><strong>நேரம் :</strong> காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. </p>
<p><strong>வயது:</strong> 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.</p>
<p><strong>கல்வி தகுதிகள் :</strong> 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.</p>
<p>மேலும், 25க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணை பெறலாம்.</p>
<p> தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.</p>
Tag: வேலைவாய்ப்பு முகாம்

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே
<p style="text-align: justify;"><strong>வேலைவாய்ப்பு முகாம்</strong></p>
<p style="text-align: justify;">டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நான்காம் நிகழ்வாக 13.022024 (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் </strong></p>
<p style="text-align: justify;">இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>கல்வி தகுதி </strong></p>
<p style="text-align: justify;">நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.</p>
<p style="text-align: justify;"><strong>முன்பதிவு </strong></p>
<p style="text-align: justify;">இச்சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் <a title="www.inprivatejobstn.gov.in" href="www.inprivatejobstn.gov.in" target="_self">www.inprivatejobstn.gov.in</a> என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.</p>
<p style="text-align: justify;">எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 13.02.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p>
Job Fair Private Employment Camp In Tiruvannamalai District – TNN
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 30ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ”வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் 30.01.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி;
இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
அடையாள அட்டை நகல்கள்;
முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Job Alert: நர்சிங் படித்தவரா?ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?
Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை
இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்
நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
வயது: 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணைபெறலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



