Tag: ரிஷப் ஷெட்டி

  • IPL 2024 RCB Name Change Royal Challengers Bengalure RCB Social Media Post Viral

    IPL 2024 RCB Name Change Royal Challengers Bengalure RCB Social Media Post Viral


    ஐ.பி.எல் 2024:
    சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
    தல தோனி – தளபதி விராட்:
    ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி இது என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்படி ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதைப்போலவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. சென்னை அணியை பொறுத்தவரை தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி களத்தில் இறங்கினால் போதும் ரசிகர்கள் எழுப்பம் சத்தம் விண்ணை பொளக்கும்.
    அதேபோல் தான் விராட் கோலி களம் இறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். அதேநேரம் ( 2010, 2011, 2018, 2021, 2023) ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பெற்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. ஆனால், என்ன தான் உலக அளவில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தாலும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரை ஒரு கூட ஐ.பி.எல் கோப்பையை தங்கள் அணிக்காக வென்று உச்சி முகர்ந்ததில்லை. இது ரசிகர்களிடம் 16 வருடங்களாக சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்டல்களுக்கு ஆளானாலும் மறுபுறம் என்றாவது ஒரு நாள் எங்கள் பக்கம் காற்று அடிக்கும் அன்றைக்கு நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று காத்திருக்கின்றனர் பெங்களூரு ரசிகர்கள்.
    ஆர்.சி.பி பெயர் மாற்றம்?

    ರಿಷಬ್ ಶೆಟ್ಟಿ ಎನ್ ಹೇಳ್ತಿದ್ದಾರೆ ಅರ್ಥ ಆಯ್ತಾ? Understood what Rishabh Shetty is trying to say? You’ll find out at RCB Unbox. Buy your tickets now. 🎟️@shetty_rishab #RCBUnbox #PlayBold #ArthaAytha #ನಮ್ಮRCB pic.twitter.com/sSrbf5HFmd
    — Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2024

    இந்நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.  அதாவது அந்த வீடியோவில், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 3 காளைகள் நிற்க, அதில் கடைசியாக இருக்கும் பெங்களூரு என்ற காளையை மட்டும் “இது வேண்டாம் கூட்டி போ” என ரிஷப் சொல்லி, ரசிகர்களை பார்த்து என்ன சொல்றேன்னு புரியுதா..? என கன்னடத்தில் கேட்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் சூழலில் ரசிகர்கள் இதனை வைத்து அணியின் பெயர் மாற்றப்படுகிறதா என்று விவாதித்து வருகின்றனர். RCB unboxing என்ற பெயரில் இது குறித்தான விளக்கம் வரும் 19-ஆம் வெளிவரும் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
    மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

    மேலும் காண

    Source link

  • Actor Rishab Shetty Is Ramraj Cotton’s New Brand Ambassador For Dhotis, Shirts & Kurtas

    Actor Rishab Shetty Is Ramraj Cotton’s New Brand Ambassador For Dhotis, Shirts & Kurtas

    Ramraj Cotton: நடிகர் ரிஷப் ஷெட்டி தங்களை போன்றே பாரம்பரியத்தை விரும்பும் நபர் என, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ராம்ராஜ் நிறுவனத்துடன் கைகோர்த்த ரிஷப் ஷெட்டி:
    காட்டன் வேட்டி, சட்டைகள் மற்றும் குர்தா விற்பனையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்ராஜ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து தங்களது, பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தங்களது வியாபாரத்தை தேசிய அளவில் விரிவு செய்யும் நோக்கில், காந்தாரா படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற ரிஷப் ஷெட்டியுடன் ராம்ராஜ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்,  பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் நாங்கள் இணைந்துள்ளோம் என்பதையும், அவர் எங்கள் வேட்டிகள், சட்டைகள் மற்றும் குர்தாக்களை அங்கீகரிக்கும் எங்களது பிராண்ட் அம்பாசிடராக இருப்பார் என்பதையும் உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    பாரம்பரியத்தை விரும்பும் ரிஷப் – ராம்ராஜ்:
    ”ரிஷப் ஷெட்டி நடிகர் என்பதோடு மட்டுமின்றி, தனது கலாசாரத்தை கொண்டாடும் நபராகவும், பாராம்பரியத்தால் பெருமை கொள்ளும் நபராகவும் இருக்கிறார். தான் கலந்துகொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கூட, பாரம்பரியமான வேட்டியையே அணிந்து செல்வார். இதுவும் அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திற்கான காரணங்களில் ஒன்றாகும். பாரம்பரிய பொருட்களை பயன்படுத்துவது மற்றும் கொண்டாடுவதில், ராம்ராஜ் நிறுவனம் மற்றும் ரிஷப் ஷெட்டியின் எண்ணங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ரிஷப் ஷெட்டி உடனான இந்த பயணம் மூலம், தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கும் எங்களது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறோம்” என ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ரிஷப் ஷெட்டி பெருமிதம்:
    ராம்ராஜ் நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். அதன்படி, ”ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து பயணிப்பது எனது பெருமை. வீடுகளிலும், நமது ஊர் நிகழ்வுகளிலும் நாம் காட்டன் வேட்டிகள் மற்றும் சட்டைகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். காட்டன் வேட்டி மற்றும் சட்டை போன்ற பாரம்பரிய ஆடைகளை நாம் வீடுகளில் அணிவது போன்று, மற்ற இடங்களிலும் அணிந்து நம்மை நாமாகவே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ராம்ராஜ் நிறுவனம் தந்துள்ளது. முதன்முதலில் ராம்ராஜ் நிறுவனத்தை பார்த்தபோது, இது ஒரு பெரிய பிராண்டாக வரும் என நினைத்தேன். ஆனால், இன்று இந்திய கலாசாரத்தின் அடையாளமாக பெரும்பாலானோர் ராம்ராஜ் ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் இது ஒரு பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.  இதேபோன்று, நாடு முழுவதிலும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஒரு பெரிய பிராண்டாக வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். உள்நாட்டை சேர்ந்த ஆடை நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இந்நிறுவனத்தை ஆதரிக்க வேண்டும்” என ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

    Source link