Tag: மியான்மர்

  • India Myanmar relationship witness crack suspends Free Movement Regime

    India Myanmar relationship witness crack suspends Free Movement Regime


    இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும், இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது.
    மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மக்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்:
    இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேணி வருவதால், இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் இந்தியர்கள், மியான்மர் எல்லைக்குள் விசா இன்றி 16 கிமீ வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்திய எல்லைக்குள் 16 கிமீ வரை விசா இன்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் (Free Movement Regime) ஒரு பகுதியாக இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
    இந்த நிலையில், சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை (Free Movement Regime) உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது இந்தியா. இதனால், எல்லைப்பகுதியில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்தியாவுக்கு செல்ல விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
    சாட்டையை சுழற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா:
    எக்ஸ் வலைதளத்தில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடுகையில், “இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் எல்லையில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பை பராமரிக்கவும் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் (MHA) முடிவு செய்துள்ளது. 
    வெளியுறவு அமைச்சகம் தற்போது அதை ரத்து செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை உடனடியாக இடைநிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
     

    It is Prime Minister Shri @narendramodi Ji’s resolve to secure our borders.The Ministry of Home Affairs (MHA) has decided that the Free Movement Regime (FMR) between India and Myanmar be scrapped to ensure the internal security of the country and to maintain the demographic…
    — Amit Shah (@AmitShah) February 8, 2024

    சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்திய – மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த நான்கரை ஆண்டுகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அந்த வழியாக வரும் அனைவரும் விசா பெற்றிருக்க வேண்டும்.
    வேலி அமைக்க முயற்சி:
    கடந்த 2023ஆம் ஆண்டு, இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேசுகையில், “சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இந்திய-மியான்மர் எல்லையில் சுந்திர நடமாடும் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தவும் மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது” என்றார்.
    மணிப்பூருடன் 390 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது மியான்மர். ஆனால், 10 கிமீ தொலைவில் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் காண

    Source link

  • India’s Ministry of External Affairs has asked Indians not to travel to Myanmar’s Rakhine state.

    India’s Ministry of External Affairs has asked Indians not to travel to Myanmar’s Rakhine state.


    மியான்மரின் ராக்கைன் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அங்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்தியா வெளியுறவுத் துறை,  அறிவுறுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான சூழலை கருத்தில் கொண்டு , இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு துறை அமைச்சகம் (MEA) கேட்டுக் கொண்டுள்ளது.  

    MEA issues an advisory for Indian nationals travelling to or based in the Rakhine State of Myanmar. “In view of the deteriorating security situation, disruption of means of telecommunications, including landlines, and severe scarcity of essential commodities, all Indian… pic.twitter.com/ipOyE18tPR
    — ANI (@ANI) February 6, 2024

    மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தியாவை ஒட்டிய மியான்மர் பகுதிகளில் அரக்கான் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவின் கை ஓங்கி இருக்கிறது. இதனிடையே சமீப ஆண்டுகளாக மியான்மர் நாட்டிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்டவர்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைவது அதிகரித்து வருகிறது.  மியான்மரில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியா-மியான்மர் இடையே உள்ள 1,643 கிலோமீட்டர் எல்லையில் வேலி அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

    The Modi government is committed to building impenetrable borders.It has decided to construct a fence along the entire 1643-kilometer-long Indo-Myanmar border. To facilitate better surveillance, a patrol track along the border will also be paved.Out of the total border length,…
    — Amit Shah (@AmitShah) February 6, 2024

    இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் அந்நாட்டின் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கி.மீ நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படுகிறது. வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்”  என குறிப்பிட்டுள்ளார்.    
    இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் யாரும் மியான்மரில் இருக்கும் ராக்கைன் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அப்பகுதியில் இருக்கு இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.  கடந்த 3 ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ராக்கைன் மாநிலம் மற்றும் பல பிராந்தியங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், ஆயுதமேந்திய இனக்குழுக்களுக்கும் – மியான்மர் இராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
    மியான்மர் ராணுவம் தனது எதிரிகளையும், ஆளும் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களையும் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மியான்மர் இந்தியாவின் மூலோபாய அண்டை நாடுகளில் ஒன்றாகும், மேலும் இது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்து மற்றும் மணிப்பூர் உட்பட பல வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த வாரம், அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைக்க  இந்தியா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.    

    மேலும் காண

    Source link