<p>நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஷோபா முதல் த்ரிஷா வரை தமிழ் சினிமாவில் இதற்குப் பல உதாரணங்களை சொல்ல முடியும். இவர்கள் இயல்பான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் என்றாலும் சவாலான கதாநாயகி என்றாலும் சரி சிறப்பாக நடித்திருப்பார்கள். இவர்களைப் போலவே, பூர்ணிமா ரவி பல்வேறு ஊடக தளங்களில் வெவ்வேறு பாத்திரங்களில் திறனை வெளிப்படுத்தி, தனது அனைத்து முயற்சிகளிலும் நிரூபித்து வருகிறார். இதே ஆர்வத்தோடு தனது திறமையை இன்னும் செழுமைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். </p>
<p>சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் அவர் தான் விரும்பிய கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் சவால்களை எதிர்கொண்டார். ஆனால் இப்போது, அவரை முதன்மைப்படுத்தி (female lead characters) நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார். </p>
<p>தனக்குப் பிடித்த நடிகர் என தனுஷைக் குறிப்பிடுபவர், எந்த கதாபாத்திரத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் தனுஷ் செல்வது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றார். இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார். ’ஹீரோயின் மெட்டீரியல்’ என்று சினிமாவில் எதுவும் இல்லை என்பவர், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.</p>
<h2><strong>யார் இந்த பூர்ணிமா ரவி..?</strong> </h2>
<p>வேலூரைச் சேர்ந்த பூர்ணிமா ரவி சொந்த ஊரிலேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு விஐடி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் முதலில் நரிகூட்டம் என்ற யூட்யூப் சேனலில் நடித்து வந்தார். அதன்பிறகு, அராத்தி என்ற பெயரில் சொந்தமாக யூட்யூப் சேனலை தொடங்கு அதன்மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து அதே சேனலில் தனது நடன வீடியோக்களை பதிவேற்றி அவரது திறமையை வெளிப்படுத்த, இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவெடுத்தது. இப்படியான வீடியோக்கள் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதாக ரசிகர்கள் வீடியோவில் கருத்து தெரிவித்து வந்தனர். </p>
<p>தொடர்ந்து யூட்யூப்பில் கிடைத்த வரவேற்பை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் விதமாக குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி, தனது முதற்படியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமான ’ஹே சண்டைக்காரி’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்தார். அதன் மூலம் பூர்ணிமா ரவிக்கு ’ப்ளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிகர் பால சரவணனின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகதான் பூர்ணிமா ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு, 16 லட்சத்துடன் வெளியேறினார். </p>
Tag: பிக் பாஸ் சீசன் 7

Poornima Ravi: அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்.. சினிமா துறையில் வலம் வர தொடங்கும் நடிகை பூர்ணிமா ரவி!

Bigg Boss Former Contestant Pradeep Anthony Asks Remuneration One Rupee Per View
ஒரு பார்வையாளர்களுக்கு ஒரு ரூபாய் என்று கொடுத்தால் தான் நேர்காணல்களுக்கு சம்மதிப்பதாக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7
கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்றுடன் முடிவடைகிறது. நேற்றைய தினம் மிகப்பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெற்றது. மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
காத்திருக்கும் யூடியூப் சானல்கள்
அதே நேரம் மறுபக்கத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களை வரிசையாக பேட்டி எடுக்க காத்திருக்கிறார்கள் யூடியூபர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த சில வாரங்கள் முழுவதும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த வெளியே பெரிதும் தெரியாது தகவல்கள் வெளிவரும் என பார்வையாளர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமில்லை ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் என அனைவரும் இந்த பட்டியலில் அடக்கம்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியப் பின்னும் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவரான நடிகர் பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில் தன்னிடம் எக்கச்சக்கமான யூடியூப் சானல்கள் பேட்டி எடுக்க அனுமதி கேட்பதாகவும் அதற்காக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Interview kettu varum social media channelgale, epdiyum neenga brands kitta laam amount vaangi, enna vikka dhan poreenga. So, vandhu vela ilama pesurathukaaga video oru view ku 1₹ kanakku vechu agreement pottu kudutheengana, I’m Game✌️ #SolvathellamUnmailaVaraVendiyavanDaNaanu pic.twitter.com/mpddQIXzT3
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 14, 2024மேலும் எப்படியும் இந்த சானல்கள் எல்லாம் விளம்பரத்திற்காக தன்னை விற்கதான் போகிறார்கள். அதனால் தான் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் ஒரு வியூக்கு ஒரு ரூபாய் வீதம் தனக்கு பணம் கொடுத்தால் தான் பேட்டி அளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு பகுதியையும் அவர் பகிர்ந்து ‘சொல்வதெல்லாம் உணமையில வரவேண்டியவன் டா நான்’ என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் ஷோ! டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார்? உடனுக்குடன் அப்டேட்ஸ்!
BigBoss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?


