<p>மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரமே இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<h2><strong>கேள்வி கேட்ட பெண்ணை அடித்த பா.ஜ.க.வினர்:</strong></h2>
<p>திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் தொகுதியில் உள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் பா.ஜ.க.வினர் நேற்று அவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் கடை வைத்துள்ள பெண் வியாபாரி சங்கீதா என்பவர், நாப்கினுக்கு கூட ஜி.எஸ்.டி. வரி போடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இந்த சூழலில், அவரது கடைக்கு நேற்று இரவு பா.ஜ.க.வினர் கும்பலாக சென்று தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரை தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
<h2><strong>ஆபாச வார்த்தைகளால் மிரட்டல்:</strong></h2>
<p>அந்த வீடியோவில், அந்த பெண்மணியின் கடைக்குள் புகுந்த பா.ஜ.க.வினர் ஏன் வண்டியை மறித்து ஜி.எஸ்.டி. பற்றி கேட்கிறாய்? என்று ஒருவர் கேட்கிறார். அப்போது, பா.ஜ,க.வைச் சேர்ந்த வயதான ஒருவர் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை தாக்க முயற்சிக்கின்றனர். இந்த விவகாரத்தை அந்த பெண் வீடியோவாக எடுத்தார். மேலும், அப்போது அந்த பெண் ஆத்துப்பாளையம் பகுதியில் ஜி.எஸ்.டி. பற்றி கேள்வி கேட்டதற்காக கை வைக்கிறார்கள் என வேதனையுடன் பேசியுள்ளார்.</p>
<p>மேலும், அந்த பெண் வீடியோ எடுக்கும்போது வீடியோ எல்லாம் எடுக்காதீங்க என்று மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணை பா.ஜ,க.வினர் பலரும் தாக்க முயற்சிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p>
<h2><strong>நடந்தது என்ன?</strong></h2>
<p>இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பா.ஜ.க.வில் ஓட்டு கேட்டு வந்தனர். இரண்டே பேர்தான் வந்தார்கள். டிரைவருடன் ஒரு அண்ணா மைக்கில் பேசிக் கொண்டு வந்தார். பெண் உரிமைகள் பற்றி பேசினார்கள். அப்போது, நான் பெண்களின் உரிமைக்காக பேசுகிறீர்கள். ஆனால், பெண்களுக்கான நாப்கினுக்கு கூட ஜி.எஸ்.டி. போட்ருக்கீங்க. பெண்கள் சமைக்கும் எல்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. போட்ருக்கீங்க என்று கேட்டேன்.</p>
<p>அதற்கு அவர்கள் பணம் நிறைய வந்தா நீங்க எல்லாம் வாங்கிக்கலாம் என்றனர். அதன்பின்பு, அங்கிருந்த மக்கள் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டனர். நான் முதலில் கேட்டபிறகு ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர். பிறகு நான் கடைக்கு வந்துவிட்டேன்.</p>
<p>நான் வந்த பிறகு, கடைக்குள் 10 பேர் நுழைந்தனர். அதில் 2 பேர் என்னை அடித்தனர். சின்னசாமி என்ற பெரியவர் என்னை அடித்தார். நான் பேசியதை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை அடிக்க வந்தனர். இதுதான் பெண்களுக்கான உரிமையை தருவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>பா.ஜ.க ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p>
<p><iframe src="//www.youtube.com/embed/VvuB9SUp1MM?si=qTTYsG_OCOKkKr1t" width="560" height="314" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
Tag: பா.ஜ.க.

நாப்கினுக்கு ஜி.எஸ்.டியா? கேள்விகேட்ட பெண்ணை கடைக்குள் புகுந்து அடித்த பாஜக தொண்டர்கள்

actor prakash raj says bjp were not ideologically rich enough to buy me
தன்னை விலைபேசும் அளவிற்கு பா.ஜ.க. சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
பிரகாஷ் ராஜ்
நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருபவர். துணிச்சலாக தனது அரசியல் கருத்துக்களை பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்திய காரணத்திற்காக பிரகாஷ் பாஜக ஆதரவாளர்களால் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப் பட்டும் வருகிறார். சமீபத்தில் நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என தெரிவித்திருந்ததை பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்திருந்தார்.
“420 செய்தவர்கள் தான் 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என பேசுவார்கள். இப்படி பேசுபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அது அவர்களின் ஆணவத்தை தான் பிரதிபலிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் நினைத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். ” என்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.
பாஜகவில் இணைகிறாரா பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக வில் இணைய இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் வெளியாகின. இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். ”பாஜக என்னை விலை பேச முயன்றார்கள். ஆனால் என்னை விலை பேசும் அளவுக்கு அவர்களுக்கு பாஜக சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
I guess they tried 😂😂😂 must have realised they were not rich enough (ideologically) to buy me.. 😝😝😝.. what do you think friends #justasking pic.twitter.com/CCwz5J6pOU
— Prakash Raj (@prakashraaj) April 4, 2024மேலும் காண

Watch Video: பட்டப்பகலில் பா.ஜ.க. தலைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! உத்தரபிரதேசத்தில் நடந்தது என்ன?
<p>நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியும் தீவிர பரபப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<h2><strong>பா.ஜ.க. சங்கல்ப் யாத்ரா:</strong></h2>
<p>மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜ.க. சார்பில் சங்கல்ப் விகாஸ் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது மொரதாபாத். இந்த நகரில் உள்ளது தேவபூர் கிராமம். இந்த கிராமத்தில் பா.ஜ.க.வின் சங்கல்ப் யாத்ரா விகாஸ் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இதில், உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் உள்பட பலரும் இடம்பெற்றிருந்தனர்.</p>
<p>இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் விழா மேடையின் மீது போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து முறையாக முன்னறிவிப்பு விடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினருக்கும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p>
<p>இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி தகராறாக மாறியது. இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="hi">UP : मुरादाबाद में BJP की ‘विकसित भारत संकल्प यात्रा’ में फायरिंग -<br /><br />मंच पर बैठने को लेकर BJP के जिला पंचायत सदस्य जेपी उर्फ जगत सिंह और प्रधान पिता हाजी यासीन में कहासुनी हुई। जगत सिंह पिस्टल से फायरिंग की। ‘मोदी गारंटी वैन’ का एंकर भगदड़ में घायल हुआ। <a href="https://t.co/tpdtreo34o">pic.twitter.com/tpdtreo34o</a></p>
— Sachin Gupta (@SachinGuptaUP) <a href="https://twitter.com/SachinGuptaUP/status/1746189933885231149?ref_src=twsrc%5Etfw">January 13, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2>
<p>அப்போது, இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் பா.ஜ.க. தலைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக பா.ஜ.க. தலைவர் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பினார். மேலும், அவர் துப்பாக்கியால் சுட்டதில் கூட்டத்தில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.</p>
<p>இதனால், கூட்டத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.</p>
<p>தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் வைத்திருந்த துப்பாக்கிக்கு அவரிடம் முறையான அனுமதி இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பா.ஜ.க. நடத்திய நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>மேலும் படிக்க: <a title="Milind Deora: காங்கிரசில் இருந்து வெளியேறிய முக்கியப் புள்ளி! தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் தந்த ஷாக்!" href="https://tamil.abplive.com/news/india/former-union-minister-milind-deora-quits-congress-ahead-of-polls-2024-161631" target="_blank" rel="dofollow noopener">Milind Deora: காங்கிரசில் இருந்து வெளியேறிய முக்கியப் புள்ளி! தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் தந்த ஷாக்!</a></p>
<p>மேலும் படிக்க: <a title="Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி.." href="https://tamil.abplive.com/spiritual/sabarimala-ayyappan-tempel-magara-jothi-held-tomorrow-15-jan-2024-161632" target="_blank" rel="dofollow noopener">Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..</a></p>


