Tag: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

  • Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்… முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!

    Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்… முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!


    <p><span>உலக கிரிக்கெட் வரலாற்றில் பல வேகப்பந்து வீச்சாளர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் மற்றும் ஷோயப் அக்தர் போன்ற தலைச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உருவாக்கி எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்துள்ளது. அந்த வரிசையில் இருக்க கூடியவர், இருந்திருக்க வேண்டியவர் முகமது அமீர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அமீர் கான்தான். அன்றைய போட்டியில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எனவே முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை எப்படி அமைந்தது, சரிந்தது மற்றும் எப்படி மீண்டு வந்தார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.&nbsp;</span></p>
    <h2><strong>17 வயதில் அறிமுகம்:</strong></h2>
    <p><span>இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி 2009 டி20 உலகக் கோப்பையில் அமைந்தது. குரூப் ஸ்டேஜ் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி, அனைவரையும் கவர்ந்தார். அப்போது அவருக்கு 17 வயதுதான். அந்த போட்டியில் அமீர் அதிக ரன்களை கொடுத்திருந்தாலும், தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரவி போபாராவை அவுட் செய்து தனது பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டார். அமிர் தனது வேகமான மற்றும் ஸ்விங் பந்துவீச்சினால் சர்வதேச கிரிக்கெட்டில் படிப்படியாக உயர தொடங்கிய நிலையில்தான், அடுத்த வருடத்தில் அவரது வாழ்க்கை ஒரு புதிய திருப்பத்தை எடுக்கப் போகிறது என்று தெரியாமல் சுழன்றது.&nbsp;</span></p>
    <h2><strong>5 ஆண்டுகள் தடை:&nbsp;</strong></h2>
    <p><span>அறிமுகத்திற்கு பின் அடுத்த ஆண்டு, அதாவது 2010ல், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில் கடைசி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் பிக்சிங் செய்ததாக முகமது அமிர், முகமது ஆசிப் மற்றும் சல்மான் பட் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். மிக இளம் வயதான 18 வயதில் அமீருக்கு ஐசிசி 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஒருவேளை அமீர் வாழ்க்கையில் இந்த மோசமான காலம் அமையாமல் இருந்திருந்தால், உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கலாம். ஆனால் இந்த தடை காரணமாக, அவரது கேரியர் முற்றிலும் மாறியது.&nbsp;</span></p>
    <h2><strong>2015ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்:&nbsp;</strong></h2>
    <p><span>தடை முடிந்த பிறகு 2015ம் ஆண்டு மீண்டும் லீக் போட்டிகளில் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி, சிறப்பாக செயல்பட்டார். இதன்பிறகு, 2016ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார் முகமது அமீர். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அமீர் மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதே வேகம்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இறுதிப்போட்டியில் அவரது சிறப்பான பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தியது. சுமார் 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அமீர், நிர்வாகம் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டி, டிசம்பர் 17, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.</span></p>
    <h2><strong>மீண்டும் பாகிஸ்தான் அணியில் தேர்வு:</strong></h2>
    <p><span>சுமார் மூன்றரை வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த அமீர் தற்போது ஓய்வில் இருந்து தனது பெயரை ரிடர்ன் செய்துள்ளார். கடந்த மார்ச் 24ம் தேதி தனது ஓய்வை திரும்ப பெற்று கொண்டார். முகமது அமீருக்கு தற்போது 32 வயதாகிறது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமீரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம், எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதை கடந்து போராடி வெற்றிபெற்று ஒரு உண்மையான வீரராக உருவெடுத்துள்ளார்.&nbsp;</span></p>

    Source link

  • Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!

    Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!


    <p>பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.&nbsp;</p>
    <p>இந்தநிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மொஹ்சின் நக்வி என்ற புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பதவியேற்றவுடன் மற்றொரு பெரிய நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. &nbsp;அதன்படி, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>ஏன் இந்த முடிவு..?&nbsp;</strong></h2>
    <p>பாகிஸ்தான் அணியின் அனுபவ பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக்க பரிசீலிக்கப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், புதிய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, பாபர் அசாமை மீண்டும் அணியின் கேப்டனாக பார்க்க விரும்புகிறார். இப்படியான சூழ்நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p>
    <h2><strong>உலகக் கோப்பையில் மோசமான ஆட்டம்:</strong></h2>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாம் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், கேப்டனாக &nbsp;ஐசிசி போட்டிகளில் அவர் சிறப்பாக எதையும் செயல்படவில்லை. உதாரணத்திற்கு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. மேலும், இதே உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.&nbsp;</p>
    <h2><strong>ஷான் மசூத், ஹாஹீனின் கேப்டன் பதவி என்ன ஆகும்..?&nbsp;</strong></h2>
    <p>பாபர் அசாம் விலகியதற்கு பிறகு பாகிஸ்தான் அணி புதிய கேப்டன்களாக ஷான் மசூத் மற்றும் ஹாஹீன் அப்ரிடி &nbsp;நியமிக்கப்பட்டனர். இருவரும் சமீபகாலமாக கேப்டனாக பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், ஒரே ஒரு தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பல கேள்விகள் வாரியத்தின் முன் எழும்.</p>
    <p>மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதன் பிறகு, பாகிஸ்தான் அணி ஷாஹீன் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது, அதில் அவர்கள் 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.&nbsp;</p>
    <p>2019 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்பராஸ் கானுக்கு பதிலாக பாபர் அசாம் பாகிஸ்தானின் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதன் பிறகு, கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியும் பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. 2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>

    Source link

  • Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!

    Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!


    <p>2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், அணிக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.&nbsp;</p>
    <p>உலகமே உற்றுபார்க்கும் உலகக் கோப்பை போட்டியில் லீக் போட்டிகளுடன் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் இயக்குனர்களும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தநிலையில், தற்போது மற்றொரு விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பூதாகரமாக வெடித்துள்ளது.&nbsp;</p>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து பல அனுபவமிக்க வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடனான மத்திய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு என்.ஓ.சி ( நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்) வழங்க வாரியம் மறுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில், சில வீரர்கள் தேசிய அணியில் விளையாடாத நிலையிலும், வெளிநாட்டு டி20 லீக்களில் விளையாட அனுமதிக்கப்படாததால், வாரியத்தின் மீது கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>யார் அந்த வீரர்கள்..?</strong></h2>
    <p>வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஜமான் கான், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ஹரி உள்ளிட்ட சில வீரர்களுக்கு NOC வழங்க வாரியம் மறுத்துள்ளது. தற்போதைய பிசிபி தலைவரான ஜகா அஷ்ரஃப் காலத்தில் முடிவு செய்யப்பட்ட தற்போதைய கொள்கையின்படி, மத்திய ஒப்பந்த வீரர்கள் பிஎஸ்எல் தவிர இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடாத வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்களில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கபடாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடரும் மாற்றங்கள்:&nbsp;</strong></h2>
    <p>2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அணியின் மோசமான செயல்பாடுகள் காரணமாக பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் அணி இயக்குனர் பதவிகளும் மாற்றப்பட்டது. இதன்பின், சமீபத்தில் ஓய்வுபெற்ற முகமது ஹபீஸ் இயக்குனர் மற்றும் பயிற்சியாளராகவும், வஹாப் ரியாஸ் தலைமை தேர்வாளராகவும் நியமிக்கப்பட்டனர்.&nbsp;</p>
    <h2><strong>பாகிஸ்தானின் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கு தனித்தனி கேப்டன்கள்:&nbsp;</strong></h2>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இரண்டு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும், ஷஹீன் ஷா அப்ரிடி டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் தனது தலைமையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதேபோல், டி20 கேப்டனாக ஷஹீன் ஷா அப்ரிடி நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து நான்கு டி20 போட்டிகளில் தோல்வியடைந்து, அதன்பின் ஒரு வெற்றியை பாகிஸ்தான் அணிக்காக பெற்று தந்தார். இப்படியான சூழ்நிலையில், தலா ஒருமுறை ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.&nbsp;</p>

    Source link