Tag: நடிகை ஷகீலா

  • actress shakila shared her worst moments of life | Actress Shakila: ”வீடியோவில் அக்கா”.. நண்பர்களுடன் ஷகீலாவின் கவர்ச்சி படம் பார்த்த தம்பி

    actress shakila shared her worst moments of life | Actress Shakila: ”வீடியோவில் அக்கா”.. நண்பர்களுடன் ஷகீலாவின் கவர்ச்சி படம் பார்த்த தம்பி


    சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை எச்சரிக்கும் விதமாக நடிகை ஷகீலா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். 
    தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் தன் மீதான அந்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளும் அளவுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு காமெடி காட்சிகளில் நடித்து வந்த ஷகீலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றார். மேலும் தற்போது தனியார் யூட்யூப் சேனலில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும் நேர்காணலை ஷகீலா தொகுத்து வழங்கி வருகிறார். 
    இப்படியான நிலையில், நேர்காணல் ஒன்றிய பேசிய அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. நான் மலையாளத்தில் கவர்ச்சி படம் பண்ணிக்கொண்டிருந்த நேரம் என்னுடைய தம்பி நண்பர்களுடன் வெளியே போகிறேன் என்று பாண்டிச்சேரி சென்றிருந்தான். சென்ற இடத்தில் சிடி வாங்கிக்கொண்டு வந்து ஆபாச படம் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். படம் பார்க்க தொடங்கினால் அதில் நான் வந்துள்ளேன். என் தம்பி அதை பார்த்தவுடன் அழுதுக்கொண்டே பைக்கில் திரும்பி வந்துவிட்டான்.
    3 நாட்களாக அவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. என்னடா ஆச்சுன்னு நான் கேட்டேன். நீ இந்த மாதிரி படம் பண்ணிருக்கன்னு அவன் சொல்ல, நான் இந்த மாதிரி படம் தான் பண்றேன்னு நான் திரும்ப சொன்னேன். இதுதான் எனக்கு தெரிஞ்ச வழின்னும் தம்பியிடம்  கூறினேன். நான் கிளாமராக தான் நடிக்கிறேன் என புரிய வைத்தேன். இதை விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் கூட ஒரு காட்சி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு காட்சி என் வாழ்க்கையில் நடந்தது உண்மை தான்.  என்னுடைய தம்பியின் உணர்வுகளை அன்று தான் புரிந்து கொண்டேன். 
    அதனால் தான் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு திருமணமாகி நாளை குழந்தைகள் வந்து உங்களுடைய இந்த வீடியோக்களை  பார்த்து என்னவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?. எல்லாம் பண்ணிட்டு வந்து ஷகீலா பேசலாமா என நினைக்கலாம். நான் என்னுடைய குடும்பத்தின் சூழலுக்காக பண்ணினேன். ஆனால் அதன்பிறகு அந்த பெயரை மாற்றி எல்லாரும் என்னை அம்மான்னு அழைக்க நான் படாதபாடுபட்டு விட்டேன். தயவு செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பெரிதாக சம்பாதிக்க எல்லாம் முடியாது. ஒரு அம்மாவின் அறிவுரையாக இதை எடுத்துக்கொள்ளுங்கள் என அந்த நேர்காணலில் ஷகீலா கூறியுள்ளார். 

    மேலும் காண

    Source link

  • Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!

    Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!


    <p>நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
    <p>1980,90 காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் கடந்த 20 வருடங்களாக தன் மீதான அந்த எண்ணத்தை அவர் படிப்படியாக மாற்றி வருகிறார். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். உண்மையில் அந்த நிகழ்ச்சியில் ஷகீலாவின் கடந்த கால எண்ணங்களை எல்லாம் மாற்றி போட்டு விட்டது.&nbsp;</p>
    <p>இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். அதில் பங்கேற்பவர்களின் அறியப்படாத பக்கங்களையும், அவர்கள் செய்த தவறுகளையும் கேள்வி கேட்கும் அந்த நிகழ்ச்சியும் ஷகீலாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவர் மீது, வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் ஷகீலா, தனது சகோதரர் மறைந்து விட்ட காரணத்தால் அவரது மகள் ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.&nbsp;</p>
    <p>இதனிடையே நேற்று மாலை ஷகீலாவுக்கும், ஷீத்தலுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஷீத்தல் ஷகீலாவை தாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது வழக்கறிஞர் சௌந்தர்யாவுக்கு போன் செய்து விவரத்தை ஷகீலா கூறியதும், சமாதானம் பேச வழக்கறிஞர் வந்துள்ளார். முதலில் ஷீத்தலிடம் சமாதனமாக செல்லலாம் என போனில் பேசிய வழக்கறிஞர் சௌந்தர்யா அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.&nbsp;</p>
    <p>இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு தனது தாய் சசி, சகோதரி ஜமீலாவுடன் வந்த ஷீத்தல் ஆகியோரிடம் வழக்கறிஞர் சௌந்தர்யா சமாதானம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிகரெட் அணைக்கும் ட்ரேவை எடுத்து வழக்கறிஞர் தலையில் ஷீத்தல் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் தாயார் சசி சௌந்தர்யாவின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஷகீலாவுக்கு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டலும் விடுத்ததாக தகவல் வெளியானது.&nbsp;</p>
    <p>இதனையடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யா கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தன் மீதான தாக்குதல் குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஷகீலா மற்றும் ஷீத்தல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

    Source link