Tag: டி20

  • ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..

    ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..

    உலக‍க்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

    பார்படாஸ் நாட்டில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில், உலக‍க் கோப்பை டி20 தொடரின் 43ஆவது போட்டியும், சூப்பர் 8 சுற்று போட்டியும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த‍து.

    அதன்படியே, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த‍து. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று நிதானமாக ஆடியது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் மற்றும் ஃபரூக்கியின் சிறப்பான பந்து வீச்சால், அடுத்த‍டுத்து இந்திய வீர‍ர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்த‍து.

    இந்திய வீர‍ர்களின் ரன் விவரம்

    ரோகித் சர்மா – 8 (13)

    விராத் கோலி – 21 (24)

    ரிஷப் பண்ட் – 20 (11)

    சூர்யகுமார் யாதவ் – 53 (28)

    ஷிவம் துபே – 10 (7)

    ஹர்திக் பாண்டியா – 32 (24)

    ரவீந்தர ஜடேஜா – 7 (7)

    அக்ஷர் படேல் -12 (6)

    அர்ஷ்தீப் சிங் – 2 (2) நாட் அவுட்

    ஆப்கன் வீர‍ர்கள் பந்துவீச்சு விவரம்

    ஃபரூக்கி – 33/3

    நபி – 24/0

    நவீன் உல் ஹக் – 40/1

    ரஷித் கான் – 26/3

    நூர் அகமது – 30/0

    அஷ்மத்துல்லா – 23/0

    பின்னர் 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கன் வீர‍ர்கள், 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

    ஆப்கன் வீர‍ர்கள் ரன் விவரம்

    குர்பாஸ் – 11(8)

    ஹஸ்ரதுல்லா – 2(4)

    ஷாத்ரான் – 8(11)

    குல்பாதின் – 17(21)

    ஒமர்சை – 26(20)

    நிஜிபுல்லா – 19(17)

    நபி – 14(14)

    ரஷித் கான் – 2(6)

    நூர் அகமது – 12(18)

    நவீன் உல் ஹக் – 0(1)

    ஃபரூக்கி – 4 (1) நாட் அவுட்

    இந்திய வீர‍ர்கள் பந்து வீச்சு விவரம்

    அர்ஷ்தீப் சிங் – 36/3

    பும்ரா – 7/3

    அக்ஷர் படேல் – 15/1

    ஹர்திக் பாண்டியா – 13/ 0

    குல்தீப் யாதவ் – 32/2

    ஜடேஜா – 20/1

    இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. 3 சிக்சர்கள், 5 ஃபோர்களுடன் 53 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்ப்பட்டார்.

    இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தையும், இந்திய வீர‍ர்களின் சிறப்பான பந்துவீச்சையும் வாழ்த்தி வருகின்றனர்.

  • ICC Rankings: ”அலப்பறை கிளப்புறோம்” மூன்று வகை கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்த இந்தியா

    ICC Rankings: ”அலப்பறை கிளப்புறோம்” மூன்று வகை கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்த இந்தியா


    <p>இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற பின்னர், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.&nbsp;</p>
    <p>இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 122 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 266 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.&nbsp;</p>
    <h2><strong>டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்</strong></h2>
    <ol>
    <li>இந்தியா – 38 போட்டிகளில் விளையாடி 122 புள்ளிகளைப் பெற்றுள்ளது.&nbsp;</li>
    <li>ஆஸ்திரேலியா – 37 போட்டிகளில் விளையாடி 117 புள்ளிகளைப் பெற்றுள்ளது.&nbsp;</li>
    <li>இங்கிலாந்து – 49 போட்டிகளில் விளையாடி 111 புள்ளிகளைப் பெற்றுள்ளது.&nbsp;</li>
    <li>நியூசிலாந்து – 29 போட்டிகளில் விளையாடி 101 புள்ளிகளை எட்டியுள்ளது.&nbsp;</li>
    <li>தென்னாப்பிரிக்கா – 27 போட்டிகளில் விளையாடி 97 புள்ளிகளைப் பெற்றுள்ளது.&nbsp;</li>
    </ol>
    <h2><strong>ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்&nbsp;</strong></h2>
    <ol>
    <li>இந்தியா – 58 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>ஆஸ்திரேலியா – 45 போட்டிகளில் விளையாடி 118 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>தென்னாப்பிரிக்கா – 37 போட்டிகளில் விளையாடி 110 புள்ளிகளுடன் விளையாடி மூன்றாவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>பாகிஸ்தான் – 36 போட்டிகளில் விளையாடி 109 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>நியூசிலாந்து – 46 போட்டிகளில் விளையாடி 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    </ol>
    <h2><strong>டி20 கிரிக்கெட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள்</strong></h2>
    <ol>
    <li>இந்தியா – 71 போட்டிகளில் விளையாடி 266 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>இங்கிலாந்து – 48 போட்டிகளில் விளையாடி 256 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>ஆஸ்திரேலியா – 45 போட்டிகளில் விளையாடி 255 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>நியூசிலாந்து – 63 போட்டிகளில் விளையாடி 254 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    <li>பாகிஸ்தான் – 48 போட்டிகளில் விளையாடி 249 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.&nbsp;</li>
    </ol>
    <h2><strong>டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள்</strong></h2>
    <p>டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் இருவர் டாப் 10 இடத்தில் உள்ளனர். அவர்களில்&nbsp; விராட் கோலி 8வது இடத்தில் 744 புள்ளிகளுடன் உள்ளார். ஜெய்ஸ்வால் 727 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 7வது இடத்தில் உள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள்</strong></h2>
    <p>ஒருநாள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரையில் சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் ரோகித் சர்மா நான்காவது இடத்திலும் உள்ளனர். பவுலிங்கில் சிராஜ் 4வது இடத்திலும் பும்ரா 5வது இடத்திலும் உள்ளார். குல்தீப் யாதவ் 9வது இடத்தில் உள்ளார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <h2><strong>டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள்</strong></h2>
    <p>டி20 கிரிக்கெட் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்திலும் ஜெய்ஸ்வால் 6வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சினைப் பொறுத்தவரையில், அக்&zwnj;ஷர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் ஐந்தாவது மற்றும் 6வது இடத்தில் உள்ளனர்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • ICC Women’s T20I Team Of The Year For 2023 Announced Deepti Sharma Features As Lone Indian | 2023ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி! இந்திய வீராங்கனை ஒருவருக்குத்தான் இடம்

    ICC Women’s T20I Team Of The Year For 2023 Announced Deepti Sharma Features As Lone Indian | 2023ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி! இந்திய வீராங்கனை ஒருவருக்குத்தான் இடம்

    ஐ.சி.சி. ஆண்டுதோறும் சிறந்த டி20 அணி, சிறந்த ஒருநாள் போட்டி, சிறந்த டெஸ்ட் அணியை அறிவிப்பார்கள். மகளிர் அணி, ஆடவர் அணி இரண்டு அணிகளும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்தாண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிறந்த மகளிர் டி20 அணி:
    ஐ.சி.சி. அறிவித்துள்ள சிறந்த மகளிர் டி20 அணியின் விவரம்: சமரி அதபத்து (கேப்டன்) பெத் மூனி ( விக்கெட் கீப்பர்), லாரா வோல்வார்ட், ஹேலி மேத்யூஸ், நாத் ஸ்சிவியர் ப்ரூன்ட், அமெலியா கெர், எல்லீஸ் பெர்ரி, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன், மேகன் ஸ்கட்.
    ஐ.சி.சி. அறிவித்துள்ள சிறந்த மகளிர் அணியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 1997ம் ஆண்டு உத்தரபிரதேசம் ஆக்ராவில் பிறந்த தீப்தி சர்மா இடது கை பேட்டிங் மற்றும் இடது கை பந்துவீச்சாளரும் ஆவார். அவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டியில் ஆடி 4 அரைசதங்களுடன் 317 ரன்களும், 86 ஒருநாள் போட்டியில் ஆடி 1 சதம், 12 அரைசதங்களுடன் 1982 ரன்களும், 104 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 1015 ரன்கள் எடுத்துள்ளார்.
    தீப்தி சர்மா:
    பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தும் தீப்தி சர்மா டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 113 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. அறிவித்த சிறந்த மகளிர் டி20 அணியில் வேறு எந்த முன்னணி வீராங்கனைகளுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
    கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமரி அதபத்து மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 50 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அசத்தினார். அவர் 2023ம் ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 470 ரன்கள் விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 130.91 ஆக வைத்துள்ளார்.
    வீராங்கனைகள்:
    ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையான பெத் மூனிக்கும் சிறந்த அணியில் இடம்கிடைத்துள்ளது. அவர் உலகக்கோப்பை டி20யில் மட்டும் 410 ரன்கள் விளாசியுள்ளார். அணியில் இடம்பிடித்துள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லாரா வோல்வார்ட்த் கடந்த டி20 உலகக்கோப்பையில் 586 ரன்களை விளாசினார். கடந்த  ஆண்டு டி20 உலகக்கோப்பையில் 700 ரன்களை ஹேலி மேத்யூஸ், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
    சிறந்த சுழற்பந்துவீச்சு வீராங்கனையான அமெலியா கெர் 2023ம் ஆண்டில் அற்புதமாக ஆடியுள்ளார். மேலும், சோபி எக்லெஸ்டன் மற்றும்  ஆஷ் கார்ட்னர் ஆகியோரும் தத்தம் நாட்டு அணிகளுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. அறிவித்த சிறந்த மகளிர் டி20 அணியில் இடம்பிடித்த ஒரே இந்திய வீராங்கனையான தீப்தி சர்மாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
    மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!

    Source link

  • IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

    IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்


    <p>இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.&nbsp;</p>
    <p>இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.&nbsp;</p>
    <p>முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 11வது ஓவரின் கடைசி பந்தில் இழந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 93 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 107 ரன்னில் ஆஃப்கான் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆஃப்கான் அணியின் பேட்டிங்கைப் பார்த்தபோது இந்த போட்டியில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19வது ஓவரில் விராட் கோலி நீண்ட தூரம் ஓடிவந்து சிறப்பாக கேட்ச் பிடித்ததால் போட்டியில் நமக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் வீசினார். முதல் பந்து வைய்டாகப் போனது. இதனால் இலக்கு 18ஆக குறைந்தது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை குல்பைதின் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை மிஸ் செய்ய, மூன்றாவது பந்தை மீண்டும் வைய்டாக வீசினார் முகேஷ். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் குல்பைதின். இதனால் இலக்கு 2 பந்துகளுக்கு 5 ரன்களாக குறைந்தது. 5வது பந்தில் 2 ரன்களும் 6வது பந்தில் இரண்டு ரன்களும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.&nbsp;</p>
    <h2><strong>இரண்டு சூப்பர் ஓவர்</strong></h2>
    <p>இதனால் போட்டியின் வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அதில் ஒரு விக்கெட்டினை இழந்தது மட்டும் இல்லாமல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி மொத்தம் 16 ரன்கள் சேர்த்தது. 17 ரன்களை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 16 ரன்கள் எடுக்க போட்டி மீண்டும் டிரா ஆனாது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணி 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளில்&nbsp; இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • IND Vs AFG T20I Second T20 Match Afghanistan Tour Of India 2024 Holkar Cricket Stadium, Indore | IND Vs AFG T20I: வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி.. நாளை இந்தியா

    IND Vs AFG T20I Second T20 Match Afghanistan Tour Of India 2024 Holkar Cricket Stadium, Indore | IND Vs AFG T20I: வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி.. நாளை இந்தியா

    ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 14 மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச டி20 போட்டிக்கு திரும்பினர். இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காராணமாக இருந்தார். 
    இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது பந்தில் தனது விக்கெட்டினை இழக்க, ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மட்டும் இல்லாமல் ப்ளேயிங் லெவனில் விராட் கோலி இடம் பிடிக்காதது இந்திய ரசிகர்களுக்கு ஏற்கனவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 
    இந்நிலையில் இந்திய அணி நாளை அதாவது ஜனவரி 14ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.  இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்களும் தொடரை வெல்ல வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. 

    King Kohli on his way to Indore.- The GOAT returns tomorrow…!!! 🐐pic.twitter.com/CQFQvpp5i8
    — Mufaddal Vohra (@mufaddal_vohra) January 13, 2024

    முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் விராட் கோலியும் இரண்டாவது போட்டியில் களமிறங்குவார் என இந்திய அணி ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர். விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி
    ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்., அவேஷ் கான், முகேஷ் குமார்.
    ஆப்கானிஸ்தான்: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், ரசீப் உர்ஹா , ஃபரீத் அஹ்மத், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப்

    Source link

  • டி20 இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள்… தொடரை கைப்பற்றி அபாரம்…

    டி20 இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள்… தொடரை கைப்பற்றி அபாரம்…

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது.

    இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த‌து.

    இதில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்த‌து. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களை குவித்தார். திலக் வர்மா 27 ரன்களை எடுத்தார்.

    ஹர்திக் பாண்டியா 14 ரன்களையும், அக்சர் மற்றும் சாம்சன் ஆகியோர் தலா 13 ரன்களையும், சுப்மன் கில் 9 ரன்களையும், அர்ஸ்தீப் சிங் 8 ரன்களையும், ஜெய்ஸ்வால் 5 ரன்களையும், முகேஷ் குமார் 4 ரன்களையும் எடுத்தனர். குல்தீப் யாத்வ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்ன ஆனார். சாஹல் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஷெப்பர்ட் 4 விக்கெட்டுகளையும், ஹோசைன் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    இதையடுத்து 166 ரன்கள் வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கியது.

    ஓபனிங் பேட்ஸ்மேன் கைல் மேயர் 10 ரன்களில் அவுட் ஆன நிலையில், பிராண்டன் கிங் மற்றும் நிகோலஸ் பூரான் ஆகியோர் ஜோடி சேர்ந்து பந்துகளை சிதரடித்தனர். எனினும் இடையில் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

    பின்னர், போட்டி தொடங்கியதும், 47 ரன்களுக்கு பூரான் அவுட்ன ஆனார். பிராண்டன் கிங் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் ஹோப் அதிரடியாக ஆடி 22 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் 18ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மெற்கிந்திய தீவுகள் அணி 171 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற புள்ளி கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.

    இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

  • டி20 போட்டியில் இந்தியா அடுத்த தோல்வி

    டி20 போட்டியில் இந்தியா அடுத்த தோல்வி

    மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகின்றன. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வரமா 51 ரன்களை குவித்தார். இசான் கிசான் 27 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 24 ரன்களையும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், ஹொசைன், ஜோசப், செப்பர்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    பின்னர், 153 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 18.3ஆவது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் நிக்கலஸ் பூரன் 4 சிக்சர்கள் 6 ஃபோர்களை விளாசி 67 ரன்களை குவித்தார். இதனால், அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்திந அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், மீதமுள்ள 3 போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.