Tag: டியர் திரைப்படம்

  • g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh

    g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh


    நடிகர் ஜி. வி.பிரகாஷ் குமார் (G V Prakash), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இளவரசு, ரோஹினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நட்மெக் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.
    டியர் திரைப்படம்
    சென்ற ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து, குறட்டை விடும் புதுமணப் பெண், அதனால் திருமண வாழ்வில் எழும் சிக்கல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இக்கதையும் அமைந்துள்ளது. வரும் ஏப்.11ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:
    ‘வாராவாரம் என் பட ரிலீஸ்’
    “வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இந்த மூன்று படங்களுமே (ரெபெல், கள்வன், டியர்) 4 ஆண்டுகள் உழைப்பில் உருவான படங்கள். கள்வன் படமும் அப்படி உழைத்தது. ஆனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது தேதி முடிவாகி இப்படி வருகிறது. கடைசியாக வந்த என் மூன்று படங்களிலுமே ஒரு உழைப்பு இருந்தது.
     டியர் திரைப்படம் ஐஷூ ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். ஐஷூ எனக்குப் பிடித்த நடிகை. ஆனால், இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், கதை கேட்கும்போது படம் பண்ணும் ஐடியா இல்லை. ஆனால் கேட்டவுடன் அழுது விட்டேன். கதை மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். ஒரு தம்பதிக்குள் இருக்கும் அழகான டிராமா.
    விமர்சனங்களுக்கு பதிலடி
    அவங்க இருவருக்கு தான் உள்ளே நடக்கும் பிரச்னை தெரியும், அதை இயக்குநர் அழகாக சொல்லி உள்ளார். இந்தப் படம் லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பாடல் வரிகளுக்கும் நன்றாக படத்தில் அமைந்துள்ளன.  இளவரசு சாருக்கு மிக அழகான சீன் இந்தப் படத்தில் உண்மையாகவே உள்ளது. படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என ஜி. வி.பிரகாஷ் பேசியுள்ளார்.
    முன்னதாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இந்த வார ரிலீஸாக கள்வன் திரைப்படமும், சென்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி ரெபல் திரைப்படமும் வெளியாகின. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், ஜி.வி.பிரகாஷ் கதையை கவனிக்காமல் வெள்ளிக்கிழமை தோறும் படம் ரிலீஸ் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் பேசியுள்ளார்.

    மேலும் காண

    Source link

  • aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar

    aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar


    சென்ற வாரம் வெளியான ஜி.வி. பிரகாஷின் கள்வன் திரைப்படத்துக்குப் பிறகு வரும் ஏப்ரல்.11-ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
    ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ரோஹிணி, கீதா கைலாசம், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    டியர் ட்ரெய்லர் ரிலீஸ்
    இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. குறட்டை விடும் மணப்பெண்ணை மணக்கும் நாயகன், இதனால் இவர்களின் மண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
     

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக நடைபெற்றது. அப்போது வாராவாரம் தன் படங்கள் ரிலீசாவது குறித்த விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் விளக்கமளித்தார். தன் ரெபெல், கள்வன், டியர் என தொடர்ச்சியாக வெளியான 3 படங்களுமே கடும் உழைப்பில் வெளியானது என்றும், அனைத்து வேலைகளும் முடிந்து, வெவ்வேறு கட்டத்தில் படம்பிடிக்கப்பட்டு, தேதி முடிவாகி தற்போது வரிசையாக வெளியாவதாகப் பேசினார்.
    ‘என்னையும் இப்படி பேசுனாங்க..’
    அவரைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) பேசியதாவது: “இந்த ஆண்டில் என்னுடைய முதல் படம். இப்போ ஜி.விக்கு நடந்தது மாதிரி எனக்கும் போன வருஷம் நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகினு கூப்பிட்டு இருக்காங்க. அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். அது நம்ம கையில் இல்லை.  கள்வன் படத்திற்காக ஜி.விக்கு வாழ்த்துகள்.
    டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் எல்லாருக்குமே தனித்துவமான கதாபாத்திரம். இளவரசு, ரோகிணி மேடம், கீதா மேடம் எல்லாருக்குமே நல்ல கதாபாத்திரம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை மிகவும் அழகாக அவர் காட்டியுள்ளார்.
    ‘ஜி.வி – பவானியின் அண்ணன் – தங்கை பாசம்’
    இந்தப்படத்தின் ஷூட்டிங்கே கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதை ரசித்துக் கேட்பேன். அவர் அவ்வளவு புத்திசாலியான ஒருவர். இளவரசு சாரும் அப்படி தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப் படத்துக்காக 3 ஆண்டுகளாக ட்ராவல் செய்துள்ளேன். இந்தப்படம் மூலம் இயக்குநர் ஆனந்த் முக்கியமான நண்பராகக் கிடைத்துள்ளார். ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். உங்கள் ரைட்டிங் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. அடுத்த படம் கண்டிப்பாக நாம் பண்ணலாம். வருண்! தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.
    எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தை எங்கள் அனைவருக்கும் டியராக மாற்றியுள்ளார். அவரது இசைக்கு நான் பெரிய ஃபேன்.  நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. ஜி.வி தவிர வேறு ஒருவர் நடித்தால் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஜி.வியின் தங்கை பவானி, நான் அவருடன் இணைந்து க.பெ.ரணசிங்கம் படத்தில் நடிக்கும்போது ஜி.வி பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். அவர்கள் அன்பைப் பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
     

    மேலும் காண

    Source link