Tag: ஜி.வி. பிரகாஷ் குமார்

  • g v prakash kumar aishwarya rajesh starrer dear movie trailer out now watch here

    g v prakash kumar aishwarya rajesh starrer dear movie trailer out now watch here


    குட்நைட் படத்தில் நாயகி குறட்டை விடுவதுபோல் நாயகி குறட்டை விடுவதை மையமாக வைத்து டியர் படம் உருவாகியுள்ளது
    டியர்
    ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படியான நிலையில் ஜி.வி  நடித்து இதே ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் மற்றொரு படம் டியர். ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் டியர்.
    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், மற்றும் நந்தினி உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
    டியர் டிரைலர்
    கணவன் மனைவிக்கு இடையில் குறட்டை பிரச்சனை எவ்வளவு தீவிரமான பிரச்சனையாக இருக்கிறது என்பதை குறட்டையை வைத்து வெளியாகும் படங்களை வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம் .
    கடந்த ஆண்டும் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் ஒரு குறட்டையால் ஒரு குடும்பத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை காட்டியது. அதுவும் ஒரு சமூகத்தில் ஒரு ஆண் குறட்டை விடுவதும் அதே சமூகத்தில் ஒரு பெண் குறட்டை விடுவதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
    ஆண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் காட்டிலும் இந்த விஷயத்தில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

    Here is #DearTrailer for all of u https://t.co/lGqrn4RORc @aishu_dil @NutmegProd @Anand_RChandran in the stunning @ashwinravi99 ‘s voice over here it is
    — G.V.Prakash Kumar (@gvprakash) April 5, 2024

    அப்படியான ஒரு பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் டியர். இஞ்சினியரிங் படித்து செய்தி வாசிப்பாளராக இருக்கும் நாயகன் ஜி.வி பிரகாஷ் அவரது குடும்பம். மறுபக்கம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். லைட்டாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் நாயகன், சிங்க கர்ஜனைபோல் குறட்டை விடுபவர் நாயகி.. இந்த இருவருக்கும் திருமணம் நடந்து முதலிரவில் தொடங்குகிறது இந்த குறட்டை பிரச்சனை.
    இதனால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம் அதனால் வெடிக்கும் பிரச்சனைகள் என காமெடியும் எமோஷனும் கலந்து படமாக டியர் படம் இருக்கும் என்பதற்கு இந்த டிரைலர் சான்று. 
    இப்படியான ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்வது என்பது மிக சிக்கலானது. ஆனால் குட் நைட் படத்தில் மிக கவித்துவமான ஒரு தீர்வை சமாளிப்பாக இல்லாமல் எதார்த்தமாக சொல்லியிருந்தார்கள். இந்த முறை இந்த பிரச்சனைக்கு டியர் படக்குழு என்ன மாதிரியான தீர்வை சொல்லப் போகிறது என்பதை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

    மேலும் காண

    Source link

  • aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar

    aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar


    சென்ற வாரம் வெளியான ஜி.வி. பிரகாஷின் கள்வன் திரைப்படத்துக்குப் பிறகு வரும் ஏப்ரல்.11-ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
    ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ரோஹிணி, கீதா கைலாசம், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    டியர் ட்ரெய்லர் ரிலீஸ்
    இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. குறட்டை விடும் மணப்பெண்ணை மணக்கும் நாயகன், இதனால் இவர்களின் மண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
     

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக நடைபெற்றது. அப்போது வாராவாரம் தன் படங்கள் ரிலீசாவது குறித்த விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் விளக்கமளித்தார். தன் ரெபெல், கள்வன், டியர் என தொடர்ச்சியாக வெளியான 3 படங்களுமே கடும் உழைப்பில் வெளியானது என்றும், அனைத்து வேலைகளும் முடிந்து, வெவ்வேறு கட்டத்தில் படம்பிடிக்கப்பட்டு, தேதி முடிவாகி தற்போது வரிசையாக வெளியாவதாகப் பேசினார்.
    ‘என்னையும் இப்படி பேசுனாங்க..’
    அவரைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) பேசியதாவது: “இந்த ஆண்டில் என்னுடைய முதல் படம். இப்போ ஜி.விக்கு நடந்தது மாதிரி எனக்கும் போன வருஷம் நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகினு கூப்பிட்டு இருக்காங்க. அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். அது நம்ம கையில் இல்லை.  கள்வன் படத்திற்காக ஜி.விக்கு வாழ்த்துகள்.
    டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் எல்லாருக்குமே தனித்துவமான கதாபாத்திரம். இளவரசு, ரோகிணி மேடம், கீதா மேடம் எல்லாருக்குமே நல்ல கதாபாத்திரம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை மிகவும் அழகாக அவர் காட்டியுள்ளார்.
    ‘ஜி.வி – பவானியின் அண்ணன் – தங்கை பாசம்’
    இந்தப்படத்தின் ஷூட்டிங்கே கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதை ரசித்துக் கேட்பேன். அவர் அவ்வளவு புத்திசாலியான ஒருவர். இளவரசு சாரும் அப்படி தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப் படத்துக்காக 3 ஆண்டுகளாக ட்ராவல் செய்துள்ளேன். இந்தப்படம் மூலம் இயக்குநர் ஆனந்த் முக்கியமான நண்பராகக் கிடைத்துள்ளார். ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். உங்கள் ரைட்டிங் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. அடுத்த படம் கண்டிப்பாக நாம் பண்ணலாம். வருண்! தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.
    எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தை எங்கள் அனைவருக்கும் டியராக மாற்றியுள்ளார். அவரது இசைக்கு நான் பெரிய ஃபேன்.  நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. ஜி.வி தவிர வேறு ஒருவர் நடித்தால் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஜி.வியின் தங்கை பவானி, நான் அவருடன் இணைந்து க.பெ.ரணசிங்கம் படத்தில் நடிக்கும்போது ஜி.வி பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். அவர்கள் அன்பைப் பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
     

    மேலும் காண

    Source link

  • Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!

    Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!


    <p style="text-align: justify;">டில்லி பாபு தயாரித்து சக்தி பிலிம் ஃபேக்ட்ரி வெளியிட்டுள்ள கள்வன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். சமகால வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இவானா,KPY தீனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&nbsp;</p>
    <h2 style="text-align: justify;"><strong>கதை</strong></h2>
    <p style="text-align: justify;">ஊருக்குள் திருட்டுத்தனம் செய்துகொண்டு இருக்கும் இளைஞர்களாக ஜி.வி. பிரகாஷ்குமாரும் தீனாவும் உள்ளனர். திருடச் சென்ற இடத்தில் கதாநாயகி இவானாவைச் சந்திக்கும்&nbsp; ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கதாநாயகி&nbsp; மீது காதல் வரவே, திருடுவதை விட்டுவிட்டு இவானா மனதில் இடம் பிடிக்க ஸ்கெட்ச் போட்டு காதல் வலையை விரிக்கின்றார். இவானாவுக்கு தன்மீது காதல் வரவைப்பது மட்டும் இல்லாமல் மற்றொரு உள்நோக்கத்துடன், முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்து எடுக்கின்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்.&nbsp; இவானாவுக்கு காதல் வந்ததா இல்லையா? பாரதிராஜாவை தத்துஎடுத்ததற்கான நோக்கம் என்ன? அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது மீதி கதை.&nbsp;</p>
    <h2 style="text-align: justify;"><strong>படம் எப்படி இருக்கு?&nbsp;</strong></h2>
    <p style="text-align: justify;">படம் முழுக்க முழுக்க ஈரோடு மாவட்டத்தின் ஒரு எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரே ஒளிப்பதிவும் செய்துள்ளதால் கடம்பூர் வனப்பகுதியையும், கடம்பூரில் உள்ள வீடுகளின் அமைப்பையும் கூடுமானவரை அழகாகக் காட்டியுள்ளார். படம் முழுக்க வரும் நக்கல் மிகுந்த கொங்கு மண்டல பேச்சு மொழி ரசிக்கும்படியாக உள்ளது.</p>
    <p style="text-align: justify;">தள்ளாத வயதிலும் தன்னை தமிழ் சினிமாவின் இமயம் என தனது நடிப்பின் மூலமும் நிரூபித்துள்ளார் பாரதி ராஜா.&nbsp; களவானி கூட்டாளிகளாக வரும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் தீனாவின் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஜி.வி-யின் இசை கைகொடுத்துள்ளது. யானைகள் வரும் காட்சிகள் மிகச் சிறப்பாகவே காட்சிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளைமேக்ளில் வரும் யானை காட்சிக்காகவே படக்குழுவுக்கு தனி பாராட்டுகள். பாரதிராஜாவின் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் கைதட்டல்கள் அள்ளியது.&nbsp;</p>
    <h2 style="text-align: justify;"><strong>படத்தின் மைனஸ்</strong></h2>
    <p style="text-align: justify;">படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் படம் முழுக்க மந்தமாகவே நகர்கின்றது. இதனால் கதையோட்டத்தில் சுவார்ஸ்யம் இல்லை.&nbsp; எப்பதான் மெயின் ஸ்டோரிக்குள்ள போவீங்க என யோசிக்க வைக்கும் அளவிற்கு படத்தின் முதல் பாதியை இழுவையாக இழுத்துள்ளார் இயக்குநர். ஜி.வி. பிரகாஷின் நடிப்பும் மனதில் நிற்கும்படியாக இல்லை. மலைவாழ் மக்களின் வாழ்வியலைப் பேசிய பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் பல காட்சிகளை நிறுத்தியுள்ளது. அப்படி இந்த படத்தில் க்ளைமேக்ஸில் வரும் யானை காட்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை.&nbsp;</p>
    <p style="text-align: justify;">மொத்தத்தில் வெள்ளிக்கிழமை நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன் திரைப்படம் ஓ.கே ரகம்தான்.&nbsp;</p>

    Source link

  • G V Prakash Kumar : 18 வருஷத்துல, முதல் தடவையா பாராட்டியிருக்கிறார்.. ஜி.வி பிரகாஷை பாராட்டிய ரஹ்மான்

    G V Prakash Kumar : 18 வருஷத்துல, முதல் தடவையா பாராட்டியிருக்கிறார்.. ஜி.வி பிரகாஷை பாராட்டிய ரஹ்மான்


    <p><strong>கேப்டன் மில்லர் படத்தின் பின்னணி இசைக்காக ரஹ்மான் தனக்கு ஃபோன் செய்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.</strong></p>
    <h2><strong>ஜி.வி பிரகாஷ் குமார்</strong></h2>
    <p>இசைப்புயல் ஏ.ஆர்&nbsp; ரஹ்மானிடம் உதவியாளராக இருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் ஜி.வி பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். மயக்கம் என்ன. ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம் , அசுரன் , சூரரைப் போற்று என தனது இசையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியான படம் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்.</p>
    <h2><strong>17 வருஷத்தில் முதல் முறையாக பாராட்டிய ரஹ்மான்</strong></h2>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">When <a href="https://twitter.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> recieved massive appreciation from ARR for his BGM in <a href="https://twitter.com/hashtag/CaptainMiller?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CaptainMiller</a> 👏👌<a href="https://t.co/5YcVW2XurP">pic.twitter.com/5YcVW2XurP</a></p>
    &mdash; Siddarth Srinivas (@sidhuwrites) <a href="https://twitter.com/sidhuwrites/status/1766883799345123706?ref_src=twsrc%5Etfw">March 10, 2024</a></blockquote>
    <p><strong>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </strong></p>
    <p>தனது ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற வேண்டும் என்பது தான் எந்த ஒரு மாணவனுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா போல், மாரி செல்வராஜூக்கு ராம் போல் , ஜி. வி பிரகாஷுக்கு ஏ ஆர் ரஹ்மான். அப்படியான ரஹ்மான் தன்னை இந்த 17 ஆண்டுகளில் ஒருமுறை கூட பாராட்டியது இல்லை என்றும் கேப்டன் மில்லர் படத்திற்கான தனக்கு ஃபோன் செய்து ரஹ்மான் பாராட்டியதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p>
    <p>இதுகுறித்து ஜி.வி பிரகாஷ் தெரிவித்தபோது &ldquo;நீலம் ப்ரோடக்&zwnj;ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது ரஹ்மானிடம் இருந்து எனக்கு கால் வந்தது. உடனே வெளியே வந்து ஃபோனை எடுத்து பேசினேன். கேப்டன் மில்லர் படம் பார்த்தேன் செமையா பண்ணியிருக்க. பி.ஜி.எம் எல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னு அவர் என்னிடம் சொன்னார். இந்த 17 ஆண்டுகளில் ரஹ்மான் எனக்கு எத்தனையோ முறை கால் செய்து பேசியிருக்கிறார், ஏதாவது நிகழ்ச்சி பற்றி பேசுவார் இல்லை என்றால் மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவார். ஆனால் ஒருமுறை கூட கால் பண்ணி மியூசிக் நல்லா இருக்குனு அவர் என்கிட்ட சொன்னது இல்ல. அவர் அப்டி சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.&rdquo; என்று அவர் கூறியுள்ளார்.</p>
    <h2><strong>ரிபெல்</strong></h2>
    <p>ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் ரிபெல்.&nbsp; இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். ரிபெல் படத்தை இயக்கியுள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி பிரகாஷே இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். நேற்று&nbsp; ( மார்ச் 11 ) ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வரும் மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.</p>

    Source link

  • vanangaan team shares news poster ahead of teaser release arun vijay resembles suriya | Vanangaan: வணங்கான் கெட்

    vanangaan team shares news poster ahead of teaser release arun vijay resembles suriya | Vanangaan: வணங்கான் கெட்


    வணங்கான் (Vanangaan) படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்யின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
    பாலா இயக்கத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து, பின் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவர் விலக, நடிகர் அருண் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் வணங்கான்.
    பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
    முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு கையில் பகுத்தறிவு பேசிய பெரியார், மற்றொரு கையில் கடவுள் பிள்ளையார் என நாயகன் அருண் விஜய் வைத்திருக்கும் வகையிலான போஸ்டர் ஆதரவு, விமர்சனங்கள் இரண்டையும் இணையத்தில் பெற்றது. மேலும், சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையை பாலா இப்படத்தில் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 
    இந்நிலையில் நாளை வணங்கான் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. இறுதியாக பாலாவின் இயக்கத்தில் வெளியான வர்மா திரைப்படம் பல சர்ச்சைகளைக் கடந்து வெளியாகி பெரிய அளவில் எடுபடாத நிலையில், வணங்கான் திரைப்படத்தினை பாலாவின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
    இந்நிலையில், நாளை டீசர் வெளியாவதற்கு முன்னதாக தற்போது அருண் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அருண் விஜய்யின் கூர்மையான பார்வையுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் நாலை மாலை 5 மணிக்கு வணங்கான் டீசர் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    இந்நிலையில், இந்த போஸ்டரில் அருண் விஜய் பார்ப்பதற்கு அப்படியே ரோலக்ஸ் சூர்யா போல் தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் களமாடி வருகின்றனர்.

    மேலும் சூர்யா நடிக்க இருந்து அருண் விஜய் நடித்து முடித்துள்ள இப்படத்தில் அருண் விஜய் அவரைப் போலவே கனக்கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • music composer G V Prakash kumar praises tribe woman sripathi

    music composer G V Prakash kumar praises tribe woman sripathi


    திருவள்ளுவர் எழுதிய குறளைப் பகிர்ந்து இளம்பெண் ஸ்ரீபதிக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
    தமிழ்நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி
    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த  புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22).  ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்த ஸ்ரீபதிக்கு படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என். பி.எஸ் .சி சிவில் நீதிபதி தேர்வு எழுத ஆயத்தமாகி வந்த அதே சமயத்தில் அவர் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். அதன் பிறகு  தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். தனது கணவர் மற்றும் நண்பர்கள்  உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதினார்.  டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி.  இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்னறனர்.
    முதலமைச்சர் வாழ்த்து
    தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 
    ” சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன் னேறவேண்டும்வைய மேலே!” என பாரதிதாசனின் வரிகளைப் பகிர்ந்து  அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    ஜி.வி பிரகாஷ் பாராட்டு

    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – திருவள்ளுவர்👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/VQokp7S7bJ
    — G.V.Prakash Kumar (@gvprakash) February 13, 2024

    இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதியை பாராட்டி பதிவிட்டுள்ளார். 
    “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை ’ 
    என்கிற குறளை அவர் பதிவிட்டு ஸ்ரீபதிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்விச் செல்வமே. மற்றைய செல்வமான பொன், பொருள், மண் ஆகியவை ஒருவனுக்கு சிறந்த செல்வம் ஆகாது. என்பதே இந்த குரலின் விளக்கம்.

    மேலும் காண

    Source link

  • Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!

    Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!


    <p>மறைந்த பாடகர் பவதாரிணி கடைசியாக இசையமைத்த &lsquo;புயலில் ஒரு தோணி&rsquo; படத்தின் இயக்குநர் ஈசன் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p>
    <h2><strong>பவதாரிணி</strong></h2>
    <p>பாடகர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரது உடல் தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
    <p>ஒரு பாடகராக தனது குழந்தை போன்ற குரலால் அனைவரையும் வசீகரித்தவர் பவதாரிணி. பவதாரிணி பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது வெகுஜன பரப்பில் பரவலாக அறியப்படாத ஒரு தகவல். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தமிழில் அமிர்தம், இலக்கணம் உள்ளிட்ட பவதாரிணி இசையமைத்தப் படங்கள் வெளியாகி இருக்கின்றன.</p>
    <p>மேலும் போரிடப் பழகு, கள்வர்கள், மாயநதி உள்ளிட்ட அவர் இசையமைத்த பாடல்கள் வெளியாகவில்லை. பவதாரிணி இறப்பதற்கு முன் கடைசியாக இசையமைத்த படம் புயலில் ஒரு தோணி. இந்தப் படத்தின் இயக்குநர் ஈசன் பவதாரிணியின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம்</strong></h2>
    <p>புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் புயலில் ஒரு தோணி படத்தில் நடித்துள்ளார்கள். பவதாரிணி குறித்து படத்தின் இயக்குநர் ஈசன் இப்படி கூறியுள்ளார்.</p>
    <p>&rdquo;பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையைத் தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். நான் முழு படத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன்.</p>
    <p>அவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்குக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை &nbsp;ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர்.</p>
    <p>நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார். மேலும், பின்னணி இசையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைத்துள்ளார். படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியளவும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்&rdquo; என்று பேசியுள்ளார்.</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க : <a title="Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை’" href="https://tamil.abplive.com/entertainment/vetrimaaran-viduthalai-part-1-part-2-received-standing-ovation-rotterdam-film-festival-screening-164599" target="_self" rel="dofollow">Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் ‘விடுதலை'</a></strong></p>
    <p><strong><a title="Pa Ranjith: &ldquo;நீலம் ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்&rdquo; – பா.ரஞ்சித் ஆதங்கம்!" href="https://tamil.abplive.com/entertainment/pa-ranjith-fiercy-speech-about-tamil-film-censor-board-issues-at-blue-star-success-meet-164942" target="_self" rel="dofollow">Pa Ranjith: &ldquo;நீலம் ப்ரொடக்&zwnj;ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்&rdquo; – பா.ரஞ்சித் ஆதங்கம்!</a></strong></p>

    Source link

  • Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

    Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!


    Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

    Source link