Tag: கிருஷ்ணகிரி

  • Lok sabha Election 2024 A 101-year-old woman from Krishnagiri casts her postal vote
    Lok sabha Election 2024 A 101-year-old woman from Krishnagiri casts her postal vote


    Lok sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குகளும் சேகரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தபால் வாக்குகள் இன்று தொடங்கியது. 
    101 வயதிலும் வாக்களித்த மூதாட்டி: 
    இந்நிலையில் தான் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 101 வயதான, ராமக்காள் தள்ளாத வயதிலும் தபால் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை பூர்த்தி செய்துள்ளார்.காவேரிப்பட்டினம் அப்பாசாமி நாயுடு தெருவைச் சேர்ந்த , இவரது கணவர் சென்னப்ப நாயுடு கடந்த 1993ம் அண்டு இறந்துவிட்டார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் ஒன்றின் பூசாரியாக இருந்தார். இந்த தம்பதிக்கு தவமணி என்ற மகள் இருக்கிறார். அவர் வழியாக ராமக்காள் பேரன், பேத்தி மற்றும் கொள்ளு பேரன், பேத்திகளையும் பெற்றுள்ளார்.
    இந்த சூழலலில் தான் 12D படிவத்தை பூர்த்தி செய்து தந்த ராமக்காளின் வீட்டிற்கு, தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குப் பெட்டியுடன் சென்றனர். அப்போது வாக்குச் சீட்டை பெற்று தனது வாக்கை பதிவு செய்து, ராக்காம்மாள் வாக்குச் சீட்டை அந்த பெட்டியில் போட்டார். ஜனநாயக கடமையை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையிலான ராமக்காளின் செயல்பாட்டை, தேர்தல் அலுவலர் முரளி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    யார் யாருக்கு தபால் வாக்கு?
    வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான 12-டி படிவம் கடந்த மாதம் 25-ம்தேதி வரை தேர்தல் அலுவலர்களால் வீடு விடாக சென்று வழங்கப்பட்டது.

    அதன்படி, தமிழகத்தில் உள்ள 6 லட்சத்து 8 ஆயிரம்  மூத்த குடிமக்களில் விருப்ப அடிப்படையில் 4 லட்சத்து 30  ஆயிரம் பேருக்கு 12-டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 77 ஆயிரத்து 445 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர்.  4 லட்சத்து 51 ஆயிரம்  மாற்றுத் திறனாளிகளில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டது. இதில் 50 அயிரத்து 676 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். இதுதவிர, 16 செய்தியாளர்களும் 12-டி படிவத்தை பூர்த்தி செய்து தந்தனர்.  படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளித்தார். வாக்குப்பதிவு முதன்மை அலுவலர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல் துறையினர் என 4 பேர் அடங்கிய ஒரு குழு, தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை!
    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை!


    <p>அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓசூரில் தமிழக – கர்நாடகா – ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப்பகுதியில் போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>பரபரக்கும் தேர்தல் களம்:</strong></h2>
    <p>கர்நாடகா ஆந்திரா ஆகிய இருமாநில எல்லையாக கொண்ட சிறப்பை கொண்டது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் புறநகர், கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், ராம் குப்பம் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாநில &nbsp;மாவட்டங்களாக உள்ளது.</p>
    <p>கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று வர வேண்டும் என்கிற நிலையில், விரைவில் &nbsp;நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி ஒசூர் தனியார் ஓட்டலில் சேலம் சரக டிஐஜி உமா அவர்களின் தலைமையில் தமிழக – ஆந்திரா – &nbsp;கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை ஒருங்கிணைப்பு போலிசாரின் காவல் உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.</p>
    <p>கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணகிரி மாவட்ட &nbsp;எஸ்பி தங்கதுரை, "நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா மாநிலங்களின் எல்லையோர போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.</p>
    <h2><strong>போலிஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை:</strong></h2>
    <p>கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மது, பரிசு பொருட்கள் கடத்தல் பணம் கொண்டு செல்வதை தடுப்பது. குற்ற சம்பவங்கள், சதி திட்டங்களை கூட்டாக தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்றார்.</p>
    <p>அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கணிசமான தொகுதிகள் உள்ளன.</p>
    <p>கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளும் கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே ஆட்சியில் உள்ளன. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது.</p>
    <p>தென் மாநிலங்களில் பலவீனமாக இருக்கும் பாஜக, வரும் தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.&nbsp;</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-has-banned-the-sale-of-cotton-candy-in-tamil-nadu-from-today-168007" target="_blank" rel="noopener">Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு</a></strong></p>

    Source link

  • Krishnagiri: ஓசூர் அருகே நில அதிர்வு! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்
    Krishnagiri: ஓசூர் அருகே நில அதிர்வு! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்


    <p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்த அஞ்செட்டி பகுதியில் இன்று இலேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் அம்மாவட்டத்தில் உள்ள மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியிலும் நண்பகல் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோயில் உள்ளது. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p>
    <p>உடனடியாக அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட அறிவிப்பில், &lsquo;கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆகவும், பூமிக்கடியில் 5 கி.மீ., நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்&rsquo; என கூறினார்.&nbsp;</p>
    <p>மேலும் தமிழ்நாட்டில் நில அதிர்வுகள் அரிது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்செட்டி துணை வட்டாச்சியரான பன்னீர் செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள அறிக்கையில், &lsquo;அஞ்செட்டி கிராமத்தில் 2.9 ரிக்டர் அளவுகோலில் பிற்பகல் 12.48 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வால் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படவில்லை&rsquo; என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க: <a title="CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு" href="https://tamil.abplive.com/news/india/tamil-nadu-chief-minister-m-k-stalin-said-that-the-central-government-is-taking-away-the-financial-rights-of-the-states-166376" target="_self">CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு</a></strong></p>

    Source link

  • கிருஷ்ணகிரி வெடி விபத்துக்கு உண்மை காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்
    கிருஷ்ணகிரி வெடி விபத்துக்கு உண்மை காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்

    கிருஷ்ணகிரி வெடி கடை வெடித்து சிதறி 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிலிண்டர் கசிவுதான் காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் வெடி கடை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவராண வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, நிவாரண தொகையை அமைச்சர் சக்கரபாணி பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

    தடவியல் வல்லுநர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, மாவட்டத்தில் அனைத்து வெடி கடை உரிமையாளர்களையும் மாவட்ட நிர்வாகம் அழைத்து, எந்தெந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

    மேலும், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர பகுதிகளில் தான் அனைத்து வெடி கடைகள் இயங்கி வருவதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.