<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்</strong></span></div>
<h2 dir="auto" style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சி</h2>
<div dir="auto" style="text-align: justify;">
<div dir="auto" style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த, மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வப்பொழுது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் செயல்பாட்டிற்கு எதிராக போர் கொடி தூக்குவது அதேபோன்று எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்பது தொடர்கதை ஆகியுள்ளது.</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong> 21 தீர்மானங்கள் ரத்து </strong></h2>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;">இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் முருகன் நியமிக்கப்பட்டார். செந்தில் முருகன் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என எதிர்கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று திமுக கவுன்சிலர்களையும் அவர் மதிப்பதில்லை என இன்று நடந்த மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், இன்று நிறைவேற்றப்பட இருந்த 21 தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படுவதாக மேயர் மகாலட்சுமி அறிவித்து கூட்டத்தை பாதியிலேயே முடித்தார்.</div>
<div dir="auto" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/12/fc46a5e5f478b57336ac6bc37839de3b1710234351980113_original.jpg" /></div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>பாதாள சாக்கடை திட்டம்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">கூட்டம் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வெளியேறாமல் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், வார்டுகளுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இது போன்று வீடு கட்ட அனுமதி தருதல் , புதிய வீட்டுமனைகள் உருவாக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நேற்று புதிதாக 250 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம், அவசர அவசரமாக நேற்று பூமி பூஜை செய்யப்பட்டதாகவும், இவற்றுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தரப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>துணை மேயர் குமரகுருநாதன்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">இந்தப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மூன்று மண்டல தலைவர்களும் அவர்களுடன் 20 திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக அதிமுக , பாமக மற்றும் பாஜகவை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டுள்ளனர் . இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது.</div>
<div class="yj6qo" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/12/dd8ae5c1057e0f953de5bf3efb7a21651710234370796113_original.jpg" /></div>
<div class="adL" dir="auto" style="text-align: justify;">
<h2 style="text-align: justify;"> தொடரும் பிரச்சினைக்கு காரணம் என்ன ?</h2>
<p style="text-align: justify;">கடந்த சில மாதங்களாகவே, மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கவுன்சிலர்கள் மெய்யருக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால், சில மாதங்களுக்கு முன்பு கூட கவுன்சிலர்கள் மற்றும் மேயர் ஆதரவாளர்களுக்கு இடையே சமாதானம் ஏற்படுத்த அதிகாரப்பூர்வமற்ற சமாதான பேச்சு வார்த்தையும் நடந்தேறியது. இதன் பிறகு பிரச்சினை தீரும் என நினைத்த நிலையில் மீண்டும் பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஒருபுறம் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, உரிய மரியாதை கொடுப்பதில்லை, தங்கள் வார்டுகளுக்கு எந்தவித அரசு நல திட்ட பணிகளையும் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராடும் நிலையில், தற்பொழுது திமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேயர் தரப்புக்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இன்று நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் கூட, அதிமுக கவுன்சிலர்கள் முறைகேடுகளை தடுக்க வேண்டுமென பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.</p>
</div>
</div>
Tag: காஞ்சிபுரம் செய்தி

திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?

Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities
7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தண்டலம் அனுகிரகா அவென்யூ விரிவில் சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
File Photoஇந்த மனுவில் பகுதிவாசிகள் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள அனுகிரகா அவென்யூ விரிவு என்ற நகரில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பாலாஜி தெரு, பத்மாவதி தெரு, அலமேலு தெரு மற்றும் பேசில் கோல்ட் தெரு ஆகிய 4 தெருக்களை உள்ளடக்கி உள்ள இந்த நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையும் 5 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களாலும், வாகன போக்குவரத்தினாலும் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் நீரானது சாலைகளின் நடுவே தேங்குகிறது.
இதனால் சாலை சேதமடைவது மட்டுமின்றி கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
File Photoஇதனைத் தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே பொது கால்வாய் உள்ளதால் அந்த கால்வாய் நீரானது குடிநீரில் கலந்து குடிநீர் மாசுபடும் சூழலும் உருவாவுதாகவும் தெரிவிக்கின்றனர். சாலை, குடிநீர் மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்போர் நல சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக சரி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.மேலும் காண

