Tag: காஞ்சிபுரம் காஞ்சிபுரம் செய்திகள்

  • lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram

    lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram


    மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024: (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும்.
    செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
    சரிபார்ப்பு:
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-னை முன்னிட்டு ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் EVM  (ம)  வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் VVPAT ஆகியவை வழங்கும் பொருட்டு  காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள வாக்குபதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

    சரிபார்த்தலின்போது (First Randomization) காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்,  தொடர்பு அலுவலர் / சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை கன்னியாகுமரி தொழிற்திட்டம், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    அதனை தொடர்ந்து மேற்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு  இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரம் கீழ்கண்ட எண்ணிக்கையில்  பிரித்து அளிக்கப்பட்டது.




    வ.எண்


    தொகுதி எண் மற்றும் பெயர்


    Ballot Unit


    Control Unit Count


    VVPAT Unit Count




    1


    28. ஆலந்தூர்


    481


    481


    521




    2


    29. திருப்பெரும்புதூர்


    438


    438


    474




    3


    36. உத்திரமேரூர்


    362


    362


    392




    4


    37. காஞ்சிபுரம்


    396


    396


    429


    மேற்படி சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் AJS Nidhi பள்ளி, சென்னையிலும் ஆகிய இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் காப்பு அறையில் (Strong room) வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் அக்காப்பு அறையானது 24 x 7 என்ற நிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். அனைத்து பாதுகாப்பு அறையிலும் CCTV Camera பொருத்தப்பட்டு 24×7 பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    தயாராகும் தேர்தல் அலுவலர்கள்
    தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்தல் பயிற்சியும் துவங்கியுள்ளது.  ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்த அனுபவம் உள்ள அலுவலர்களைக் கொண்டு,  கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று  தொடர்ந்து தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்களுக்கு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்  அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது

    மேலும் காண

    Source link

  • மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? –  போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?

    மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? – போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?


    <p style="text-align: justify;">நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.</p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக, அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறாததும் , ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை மற்றும் பென்ஷன் வழங்காததை கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/f1c080a5ab3c137dbfd96255d603b6341707211673690739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, பாமக, புரட்சி பாரதம், விசிக, பாஜக ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/c3f0d399a04a9b43329fefe9a342bb3d1707211694383739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது: கடந்த முறை போராட்டம் நடைபெற்ற பொழுது <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a> முன்னிட்டு நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். எங்களின் கோரிக்கையை நியாயமானது என்று நீதிமன்றமும் தெரிவித்து இருந்தது. அதன் பிறகு நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வது கிடையாது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/1609b61f1f6b5750758465e24830cad21707211715775739_original.jpg" /><br />கலந்து கொள்ளும் அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை கூறினால் அதை மேல் இடத்தில் கூறுகிறார்கள். ஒரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால், ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதே போன்று அமைச்சரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது கிடையாது. நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் கலந்து கொள்ளாததால், முடிவுகள் எட்டப்படுவது சந்தேகம். நாங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை கேட்கிறோம் நாங்கள் எதுவும் கூடுதலாக கேட்கவில்லை. புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கக் கூறுகிறோம். இதை கூட இந்த அரசு செவி சாய்க்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. நாளை தினம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்</p>

    Source link