Tag: இலங்கை கடற்படை

  • Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

    Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..


    <p>இலங்கைக்கு பீடி இலை&nbsp; கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்&nbsp; லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ ,காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்&nbsp; விசாரணைக்காக வைத்துள்ளனர்.</p>
    <p>தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. &nbsp;</p>
    <p>இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.&nbsp;எல்லை தாண்டி மீன்பிடிப்பது, கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், &nbsp;இலங்கைக்கு பீடி இலை&nbsp; கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்&nbsp; லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்&nbsp; விசாரணைக்காக வைத்துள்ளனர்.</p>
    <p>நெல்லை மாவட்டம் கூந்தங்குழி கடற் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சுமார் 2 டன் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்ற பைபர் படகை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p>
    <p>தற்போது இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் பிடி இலை கடத்திய மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன் ,மரிய அந்தோணி மற்றும் லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த காட்வே சிலுவைப் பட்டியை சேர்ந்த டிஜோ என்பது தெரியவந்தது.&nbsp; இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டதாக மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.</p>

    Source link

  • 13 Indian Fishermen Were Repatriated From Sri Lanka To Chennai Earlier Today

    13 Indian Fishermen Were Repatriated From Sri Lanka To Chennai Earlier Today

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
    தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. ஆழ்கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழக மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்வது வழக்கம். அந்த பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக அடிக்கடி இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் கொடுமையும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தீர்வு காண நெடுங்காலமாக  கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் அது முடிவுக்கு வருவதாக இல்லை. 
    இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் கூட இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 138 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். 
    அதில், மீனவர்கள் கைது குறித்து கவலைப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையிலான இது போன்ற செயல்களால் மீனவர்கள் அச்சப்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    Chennai, Tamil Nadu: 13 Indian fishermen were repatriated from Sri Lanka to Chennai earlier today. pic.twitter.com/dM9lFMSLAH
    — ANI (@ANI) January 9, 2024

    நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் அதிகாரி இந்திய மீனவர்களைச் சந்தித்து இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருவதாகவும் தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று காலை 13 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    Source link