<p>அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவதற்காக ப்ரோமோஷன் மூலமாக ஒருவரை கெட்டவனாக காட்டும் செயல் தேவையற்றது என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்</p>
<h2><strong>பிக்பாஸ் எப்படியான ஒரு அனுபவம்</strong></h2>
<p>”வாழ்க்கையில் நாம் கற்பனை செய்ய முடியாது சூழ்நிலைகள் இந்த ஷோவில் நமக்கு கொடுக்கப்படும் அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் விதம் நமக்குள் இருக்கும் ஒரு ஆற்றலை வெளிகொண்டு வரும் . பொதுவாக நான் அழமாட்டேன். ஆனால் மிக இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தபோது அதுவும் நடந்திருக்கிறது. வெளியே வந்த பிறகு தான் நான் பிக்பாஸ் விட்டில் சும்மா இல்லை, நானும் சில விஷயங்களை மாற்றியிருக்கிறேன் என்று புரிந்தது.”</p>
<h2><strong>ஒருவரை கெட்டவனாக காட்டுவது ப்ரோமோஷன் கிடையாது</strong></h2>
<p> பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ப்ரோமோஷன்களால் வெற்றிபெற்றார் என்கிற குற்றச்சாட்டு குறித்து அவர் பேசினார் ”பிக்பாஸில் ப்ரோமோஷன் வேலைகளை ஓரளவிற்கு எல்லாம் செய்தோம். நான் என்னுடைய நண்பர்களிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். வாக்குகளைப் பெறுவதற்காக ப்ரோமோட் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரே வீட்டிற்குள் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அதே வீட்டில் இருக்கும் நான் ஏதாவது சின்னதாக தவறு செய்துவிட்டால் ஒரு நபரை நல்லவராக காட்ட என்னை கொஞ்சம் கெட்டவனாக காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது.</p>
<p>எல்லாரும் மீடியாவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒருவரை கெட்டவனாக காட்டிதான் அதை செய்ய வேண்டியது அவசியம் இல்லை. நான் பார்த்த இன்னொரு விஷயம் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் எலிமினேட் ஆகிவிட்டேன் என்று நிறைய தவறான செய்திகள் பரவின. இதனால் என்னுடைய வாக்குகள் பாதிக்கப்படுகின்றன. அடுத்த முறை உங்களுக்கான பி.ஆர். டீம் உடன் உள்ளே போய்விடுங்கள் என்று பிக்பாஸ் வீட்டிற்குள் புது போட்டியாளர்களிடம் நான் இப்போதே அட்வைஸ் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நான் தான் எதுவும் தெரியாமல் இருந்துவிட்டேன்.”</p>
<h2><strong>பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு</strong></h2>
<p>” நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட கேமராக்கள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதவு இருக்கும் . அங்கு இருந்த போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவர் ஏதாவது தவறாக செய்யப் போகிறார் என்று தெரிந்தால் உடனே ஆட்கள் வந்துவிடுவார்கள். பிரதீப் விஷயத்தைப் பொறுத்தவை ஒருவரை வெளியே அனுப்புவதற்காக எல்லாம் சேர்ந்து போட்ட திட்டமாக தான் நான் பார்க்கிறேன். கூல் சுரேஷுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை ஆனது.</p>
<h2><strong>திட்டமிட்ட சதி:</strong></h2>
<p>அதை பேசத்தான் நான் கமல்ஹாசனிடம் உரிமைகளை பேச வேண்டும் என்று பேச்செடுத்தேன். ஆனால் அந்த பிரச்சனை கூல் சுரேஷை விட்டு பிரதீப் நோக்கி சென்றது. அவ்வளவு பேர் பார்க்கக் கூடிய நேரத்தில் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> முன் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, நான் கூட எனக்கு தெரியாமல் வேறு ஏதாவது தப்பாக நடந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் நானும் ரெட் கார்ட் கொடுத்தேன். இதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தான் நான் நினைத்தேன்.</p>
<p>ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிந்தபோது தான் நான் வருத்தப்பட்டேன். பிரதீப் தனது மனதில் எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார், அவருக்கு ஒரு நல்ல மனசு இருக்கிறது. தன மனதில் அவர் எதையும் வெளியே வைத்துக் கொள்ள மாட்டார். அது தான் ஏதோ ஒரு இடத்தில் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன் “ என்று விஷ்ணு கூறினார்.</p>
Tag: அர்ச்சனா

Bigg Boss Vishnu: "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது திட்டமிட்ட சதி" – பிக்பாஸ் விஷ்ணு பரபரப்பு பேட்டி

Bigg Boss 7 Tamil Contestant Maya Krishnan Pens A Note To Title Winner Archana
பிக்பாஸ் சீசன் 7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மொத்தம் 106 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, என்டர்டெயின்மெண்ட், சர்ச்சைகள் எனத் தொடர்ந்தது. கூடுதலாக வைல்டு கார்ட் ரவுண்டில் மேலும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
விமர்சனங்கள்
இறுதியா தினேஷ், மணி, மாயா, விஷ்ணு, அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் ஃபைனலில் வந்து சேர்ந்தார்கள். இந்த ஐந்து நபர்களில் அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. கூடுதலாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தார்.
கமல்ஹாசன் தோற்றுவிட்டதாகவும் அர்ச்சனாவை வெற்றியாளராக தேர்வு செய்தது ஒற்றைச் சார்புடைய முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மாயா கிருஷ்ணன் மாதிரியான தகுந்த போட்டியாளர்கள் இருந்தும், அவர்களை விடுத்து அர்ச்சனாவை தேர்வு செய்தது குறித்து அவர் விமர்சித்திருந்தார். பணம், மற்றும் ப்ரோமோஷன்களில் மூலமாக அர்ச்சனாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளதாக வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.
அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த மாயா கிருஷ்ணன்
இப்படியான நிலையில் அர்ச்சனாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. பிக்பாஸ் வீட்டில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி அர்ச்சனா தைரியமாகப் பேசியதே மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த ஆதரவுக்கு காரணம் என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில், மாயா கிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் அர்ச்சனாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Dear Archana, Congratulations on winning the title.Nee nenacha madhiri un vazhkai la poo pookum. Chedi vaadi pora mari irundha enna koopdu, naa vandhu thanni oothuren. Like I promised I’ll be there for you.#PooPookumNanba
— Maya S Krishnan (@maya_skrishnan) January 16, 2024தனது எக்ஸ் பக்கத்தில் மாயா கிருஷணன் ‘ டியர் அர்ச்சனா..டைட்டில் வின் பண்ணதுக்கு என்னோட வாழ்த்துகள். நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கையில பூ பூக்கும். செடி வாடிப்போற மாதிரி இருந்தா என்ன கூப்டு, நான் வந்து தண்ணி ஊத்தறேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி நான் எப்போவும் உன்கூட இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya
பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tami 7) நிகழ்ச்சி முடிந்தும் மாயா விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டு வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில்,28ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.
தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும் கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
மாயா – விஷ்ணு இடையேயான பனிப்போர்
நேற்று முன் தினம் ஜன.14ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். மணி சந்திரா ரன்னர் அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே சண்டை, சச்சரவுகள், காதல், கோபம், செண்டிமெண்ட் என பலவிதமான உணர்ச்சிகளையும் காண்பித்து லைக்ஸ் அள்ளியவர் விஷ்ணு. ஆனால் இவர் கிராண் ஃபினாலே நிகழ்ச்சியில் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விஷ்ணு முதல் ஆளாக எவிக்டாகி வெளியேறினார்.
விஷ்ணு எவிக்டாகிய காகிதம் நிகழ்ச்சியில் அவரது பரம எதிரியாக வலம் வந்த மாயாவிடம் கிடைத்து அவர் அதனை அறிவித்தது விஷ்ணுவின் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போட்டியாளரான மாயா, இறுதிவரை பயணித்தது ஏற்கெனவே பலரது அதிருப்தியையும் சம்பாதித்திருந்தது. மாயா எவிக்டாகாதது குறித்து விஜய் தொலைக்காட்சி, அவரது சக நண்பர்கள், ஏன் கமல்ஹாசனே வாராவாரம் பிக்பாஸ் ரசிகர்களார் விமர்சிக்கப்பட்டிருந்தபோதிலும் மாயா இறுதியில் இரண்டாவது ரன்னர் அப்பாக உருவெடுத்தார். இவற்றுக்கெல்லாம் மத்தியில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்று பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
குறையாத வன்மம்
வழக்கமாக நிகழ்ச்சி முடிந்து வெளியேறியதும் பரம எதிரிகளாக விளங்கிய போட்டியாளர்கள் கூட பேட்ச் அப் செய்து அதிர்ச்சி கொடுப்பது தான் வழக்கம், ஓவியா – ஜூலி – காயத்ரி ரகுராம், ஆரி – பாலா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இவற்றுக்கு மாறாக இந்த சீசனில் பிக்பாஸூக்கு வெளியேயும் போட்டியாளர்கள் வன்மம் குறையாமல் வலம் வருவது ஏற்கெனவே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே முன்னாள் போட்டியாளர்களான ஜோவிகா, அக்ஷயா, விக்ரம் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை இதனால் பெற்றனர். இந்நிலையில் அதன் உச்சமாக மாயா கிருஷ்ணன் விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கர்மா, ஃப்ரெண்ட ஏமாத்திட்ட..
விஷ்ணு மாயாவின் கையில் கிடைத்த சீட்டால் எவிக்டான நிலையில், “கர்மா அதன் வேலையை செய்துள்ளது. என் ஃப்ரெண்ட ஏமாத்திட்ட இல்ல?” என மாயா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பும் வகையிலான பதிவினை தன் இன்ஸ்டா பக்கத்தில் மாயா பகிர்ந்துள்ளார்.விஷ்ணு – பூர்ணிமா இடையே போலியான லவ் டிராக்கை கண்டெண்ட்டுக்காக மாயா பயன்படுத்தியது வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி அனைவராலும் ஏற்கெனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் குறிப்பிடும் வகையில் மாயா தற்போது பதிவிட்டுள்ளது, இணையத்தில் கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

Vanitha Vijayakumar Slam Expresses Disappointment Archana Winning Bigg Boss Title
பணத்தாலும் , பி.ஆர் செல்வாக்கை பயன்படுத்தியும் பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வென்றதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர்
பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மேலும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலுக்காக போட்டி போட்டார்கள்.
இறுதியாக நேற்று ஜனவரி 14 ஆம் தேதி மொத்தம் ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய கிரண்ட் ஃபினாலேவில் இறுதியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற சக போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன் , தினேஷ் , விஷ்ணு, மணிச்சந்திரா உள்ளிட்ட நால்வரை விட பலமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் அர்ச்சனா வெற்றிபெற்றுள்ளார். மாயா கிருஷ்ணன் 23053 வாக்குகள் பெற்றிருக்க மணிச்சந்திரா 35184 வாக்குகள் பெற்றிருந்தார். மறுபக்கம் அர்ச்சனா 109468 வாக்குகளைப் பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா.
டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட பின் அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதில் ஒரு தரப்பினார் இந்த முடிவு சார்புடையதாக இருப்பதாகவும் மறுதரப்பு அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருப்பது சரியான முடிவு தான் என்று விவாதம் செய்து வருகிறார்கள்.
அதிருப்தி தெரிவித்த வனிதா விஜய்குமார்
ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கு பாராட்டுகள் பெருகி வர மறுபக்கம் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் அர்ச்சனாவின் கையை உயர்த்தும்போது தான் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மாயா கிருஷ்ணன் இருந்தபோது அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது முற்றிலும் திட்டமிட்ட செயல் என்று அவர் கூறியுள்ளார்.
பணம் , ப்ரோமோஷன்களை பயன்படுத்தியே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் , அந்த மேடையில் ஜனநாயகம் தோற்றும் பணநாயகம் ஜெயித்ததாகவும்வனிதா பேசியிருக்கிறார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தன்னிடம் வந்து பேசியதாகவும் அவர்களுக்கும் இந்த அதிருப்தி தெரிவித்ததாகவும் வனிதா தெரிவித்தார். தனது மகள் ஜோவிகா போட்டியாளராக இருந்ததால் தான் வெளிப்படையாக சில விஷயங்களை பேச முடியாது என்று அவர் கூறினார்.
இன்ஸ்டாகிராம் , முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்களின் வழியாகவே அர்ச்சனா இந்த டைட்டிலை வென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral
எனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பமே இல்லை என டைட்டில் வென்ற அர்ச்சனாவின் அப்பா தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7:
சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, விசித்ரா, பவா செல்லத்துரை, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், சரவண விக்ரம், வினுஷா தேவி, நிக்ஸன், ஐஷூ, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன்,அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அன்னலட்சுமி, தினேஷ், அர்ச்சனா, விஜே பிராவோ, கானா பாலா என 23 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 105 நாட்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதியாக அர்ச்சனா, மணி சந்திரா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகிய 3 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இதில் மாயா 3ஆம் இடம் பிடிக்க, அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா குடும்பத்தினர் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மகளை அனுப்ப விருப்பமில்லை:
அர்ச்சனாவின் அப்பா பேசும் போது, “உலகநாயகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என் மகள் அர்ச்சனாவை அனுப்புவதில் எனக்கு விருப்பமில்லை. வெளியில் வரும்போது உன் பெயரை கெடுத்துக் கொண்டு தான் வருவாய் என சொன்னேன். ஆனால் உள்ளே சென்ற பிறகு அர்ச்சனா இப்படியெல்லாம் பேசுவார், புரிதலோடு நடந்து கொள்வார் என பார்த்து வியந்தேன். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாரம் தோறும் நீங்கள் (கமல்ஹாசன்) கொடுத்த அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது.
இங்கு அர்ச்சனாவை பாதுகாத்தது நீங்கள் மற்றும் பிக்பாஸ் குழு மட்டுமல்ல, சுற்றியுள்ள 67 கேமராக்களும் தான். உன்னுடைய மிகச்சிந்த பாதுகாப்பே அது தான். நீ பயப்படாமல் இருந்துட்டு வா என சொன்னேன். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி குழுமத்துக்கு நன்றி” என கூறினார்.
அதேசமயம் அர்ச்சனா டைட்டில் வென்ற பிறகு பேசிய அவரது அம்மா, “எனக்கு என் பொண்ணு ஜெயித்ததில் மிகவும் சந்தோசம் தான். அவளுக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் மனதளவில் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இந்த வெற்றி ரசிகர்களாகிய உங்களைத்தான் சேரும்” என தெரிவித்தார்.
BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!
<p>பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.</p>
<p>ஒரு சில வாரங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாகவும், தற்போது டைட்டில் பரிசை வென்றுள்ளதாகவும் அர்ச்சனா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இறுதிவரை கடுமையாக போட்டி போட்டு வந்த மணிசந்திரா இந்த சீசனில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்துள்ளார். </p>
Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller
கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம். மேலும் படிக்க
நேத்து “இந்தி தெரியாது போயா” இன்று இந்தி பட அப்டேட்: கீர்த்தி சுரேஷை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!
அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மேலும் படிக்க
மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!
இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க
விஜயகாந்தை நினைத்து வடிவேலு வீட்டில் அழுதிருக்கலாம் – நடிகர் சரத்குமார் கருத்து
ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு தான் விஜயகாந்துடன் நட்பை தொடர வைத்தது என நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். மேலும் படிக்க
அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார். மேலும் படிக்க
Bigg Boss 7 Tamil Season Review Maya Dinesh Mani Vishnu Archana
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நெருங்கிவிட்டது. ஒவ்வொரு சீசனும் அதற்கு முந்தைய சீசன்களை விட வித்தியாசமாக இருக்கும் என்பதை பிக்பாஸ் ரசிகர்களே கூறி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் சீசனுக்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் கடந்து மக்கள் மத்தியில் இருக்கும் அபிப்ராயங்களில் ஒன்று ”இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்டுப்பா” எனும் விமர்சனம். ஆனால் அனைத்தையும் கடந்து பிக்பாஸ் சீசன் தொடங்கும்போது பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் கூடிக்கொண்டுதான் போகின்றது.
ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடத்தினை கற்பித்துக்கொண்டுதான் உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக யாராவது தேர்வு செய்யத்தான் போகின்றார்கள். ஆனால் ரசிகர்களுக்கு இந்த சீசன் ரசிகர்களுக்கு கற்பிக்கும் பாடம் என்ன? இந்த சீசன் விஜய் டீவிக்கு டி.ஆர்.பியை அள்ளிக்கொடுத்திருந்தாலும், இந்த சீசன் பிக்பாஸ் வீட்டினைக் கடந்து பொதுவெளியிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.குறிப்பாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் மற்ற போட்டியாளர்கள் குறித்து கண்ணியக்குறைவாக பேசியதை பார்த்தோம். பிக்பாஸ் என்பது போட்டி நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது உணர்த்துவது ஒன்றுதான் அது அன்பு பாராட்டுவது. ஆனால் இந்த சீசனில் அன்பு காட்டுவது என்பது சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது என்றே கூறவேண்டும்.
ஆரி – பாலா
இதற்கு முன்னர் நடந்த சீசன்களில் போட்டி இறுதி கட்டத்தினை எட்டிவிட்டால் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருந்த பகையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, அன்பு செலுத்த, ஒருவரையொருவர் பாராட்டி வீடு முழுவதும் அன்பைப் பரப்புவார்கள். நான்கவது சீசனில் ஜென்ம விரோதிகள் போல் இருந்த ஆரியும் பாலாவுமே இறுதி கட்டத்தில் உடன் பிறந்த சகோதரர்களைப் போல் பழக ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை. முழுக்க முழுக்க நேர் எதிராக உள்ளது. இன்னும் மற்றவர்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கின்றனர். மூன்றாவது சீசனில் மிகவும் வில்லிபோல் பார்க்கப்பட்ட வனிதா விஜயகுமார் இறுதி நாட்களில் அனைவரையும் அரவணைத்து அன்பு பாராட்டினார். இப்படி இந்த சீசனில் வில்லி போல் பார்க்கப்பட்ட நபர் என யாருமே இல்லை. ஆனால் இவர்களிடத்தில் அன்பு பாராட்டுவதைப் பார்க்க முடியவில்லை. சில இடங்களில் முகம் சுழிக்கவைக்கின்றனர்.
விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் என இவர்கள் மூவரும் ஸ்மால் பாஸ் வீடே கதி என இருப்பதுடன் மாயா மற்றும் பூர்ணிமா குறித்து எதாவது கமெண்டுகள் பாஸ் செய்து கொண்டே இருந்தனர். பூர்ணிமா வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மாயாவையும் அர்ச்சனாவையும் சராமாரியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். வீட்டிற்குள் இருப்பவர்கள் இப்படி இருக்கும்போது வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து மீண்டும் பிரிவினையை வளர்த்துவிடும் விதமாகவே பேசி வருகின்றனர்.மொத்தமும் வேஸ்ட்
இதனைப் பார்க்கும்ப்போது இவர்களுக்கு கமல்ஹாசன் போன்ற கலையுலகின் பல்கலைக் கழகத்தின் மூலம் பட்டை தீட்டப்பட்டதெல்லாம் சுத்த வேஸ்ட். இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் வீட்டிற்குள் சோர்வாக இருந்தபோதெல்லாம் பிக்பாஸ் கன்ஃபர்ஷன் ரூமுக்கு அழைத்து அவர்கள் போட்டியில் சிறப்பாக கவனம் செலுத்த ஊக்கமூட்டினார். ஆனால் அது அனைத்தும் சுத்த வேஸ்ட் என்பது போல் போட்டியாளர்கள் நடந்துகொள்கின்றனர். அர்ச்சனா தனக்கு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம், அனைத்து போட்டியாளர்களையும் அட்டாக் செய்து வருகிறார்.
நீளும் மனக்கசப்பு
வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரும்போது விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் தங்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மனக் கசப்புகளை மறந்துவிட்டு அன்பாக பேசியிருந்தால் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்திருக்கும். ஆனால் அவர்களோ தங்களது அணியில் இருந்தவர்களை அனுப்புங்கள் பிக்பாஸ் என அவர்களாகவே தங்களை எல்லைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.இவர்கள் மூவருக்குமே கூட இந்த சீசன் முடிந்த பின்னர் கடைசி நாட்களின் எபிசோட்களை பார்க்கும்போது ”அன்பாக இருந்திருக்கலாமே” என யோசிக்க வைக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக விஷ்ணு டிக்கெட் டூ ஃபினாலேவை வென்ற பின்னர் அனைவரிடத்திலும் கூடுமானவரை நல்ல நினைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாததற்கு காரணம் அவருக்குத்தான் தெரியும் என்றாலும், சக போட்டியாளர்கள் யாரும் அவரின் ஜென்ம விரோதிகள் இல்லைதானே. அன்பு பாராட்டுங்க மக்கா..

Bigg Boss Season 7 Tamil Vijay Varma Shares Archana Game Play Strategy
Bigg Boss 7 Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா திட்டமிட்டு விளையாடும் கேம் ஸ்ட்ரேட்டஜி பற்றி விஜய் வர்மா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக இந்த பிக்பாஸ் இருந்தது.
பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். போட்டியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா ஆவார் என்று அவரது ஃபேன்பேஸ் டிரெண்டாக்கி வரும் நிலையில், அர்ச்சனாவின் கேம் பிளேன் ஸ்ட்ரேட்டஜி குறித்து விஜய் வர்மா புட்டு, புட்டு வைத்ததுடன், அர்ச்சனாவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டாரிடம் எடுத்துரைத்தார்.
இந்த நிலையில் அர்ச்சனா குறித்து விஜய் வர்மா பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ”அர்ச்சனா ஒரு சின்ன விஷயத்தை கூட நான் இதை செய்தேன், நான் இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நாம ஒரு நேரத்தில் ஒருமுறை தான் அந்த விஷயத்தை சொல்வோம். ஆனால், அவங்க 10 முறை அதே வார்த்தையை சொல்லி சொல்லி மத்தவங்ககிட்ட கொண்டு போய்ட்டு சேர்த்துடுவாங்க. நீ போனா உங்கிட்ட பேசுவாங்க, அவங்க போனா அவங்ககிட்ட பேசுவாங்க. யாருமே இல்லையென்றால் தனியா பேசுவாங்க.
இந்த விளையாட்டை பற்றி க்ளியரா தெரிஞ்சு வச்சி இருந்தாங்க. விஷ்ணுவுக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டை எனக்கு நல்லா தெரியும். நான் அங்க தான் இருந்தேன். ஆனால், எங்கிட்டையே அதை திரும்ப, திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இந்த விஷயத்தை அவங்ககிட்ட இருந்து பிரேக் பண்ணனும்னு நினைத்த நான், அவங்க எங்கிட்ட வந்தாலே ஆப் செய்து அனுப்பிவிட்டேன்.— Bigg Boss (@bb_biggboss) January 8, 2024
தன்னோட செயல்களை மக்களிடம் எப்படி கொண்டு போய்ட்டு சேக்கறது என்பதில் அவங்க தெளிவாக இருப்பாங்க” எனக் கூறியுள்ளார்.








