Tag: அருண் யோகிராஜ்

  • Sculptor Arun Yogiraj Said Ram Lalla Statue Transformed After Pran Prathishta Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’

    Sculptor Arun Yogiraj Said Ram Lalla Statue Transformed After Pran Prathishta Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    இப்படி பல்வேறு அம்சங்கள் கொண்ட அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர் யார் என்ற ஆர்வம் மக்களிடையே பற்றிக்கொண்டது. அயோத்தியில் நிறுவப்படும் சிலையை செதுக்க மூன்று சிற்பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சிற்பிகளில் ஒருவர்தான் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ். இவர் வடிவமைத்த குழந்தை ராமர் சிலையை தான் தற்போது அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ், தான் செய்த சிலையில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை முற்றிலும் மாறுப்பட்டு உள்ளது என  கூறியுள்ளார். மேலும், கடவுள் ராமர் என்ன சொன்னரோ அதை தான் நான் வடிவமைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ கடந்த 7 மாதங்கள் மிகவும் சவாலானதாக இருந்தது. இந்த சிலையை செய்வதில் நிறைய நுட்பங்கள் இருந்தது. 5  வயது குழந்தையின் வெகுளித்தனம் அந்த முகத்தில் இருக்க வேண்டும். சிலையில் முகபாவனைகள் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல முறை குழந்தை ராமர் சிலையை பற்றி என் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். புன்சிரிப்பு, தெய்வக்கடாக்‌ஷம், 5 வயது குழந்தையின் முகம், ராஜா போன்ற தோற்றம் ஆகியவை அனைத்தும் பிரதிபளிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை நான் வடிவமைத்தவுடன் ஒரு தோற்றம் இருந்தது, ஆனால் பிரான பிரதிஷ்டை செய்தவுடன் குழந்தை ராமர் முற்றிலுமாக உருமாறியுள்ளார். இந்த சிலை நான் செய்தது அல்ல என தோன்றும் அளவு இருந்தது” என தெரிவித்துள்ளார். 
    யார் இந்த அருண் யோகிராஜ்…?
    கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் வசிப்பவர் அருண் யோகிராஜ். அவர் பிரபலமான சிற்பிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் 5 ஆம் தலைமுறை சிற்பி. நவீன காலத்தில்  இந்திய நாட்டின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார். உண்மையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அருணின் சிலைகளுக்கு கிராக்கி என்றே சொல்லலாம். இதற்கு முன்பு கூட சிற்பி அருணின் திறமையை பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். இந்தியா கேட்டில் சமீபத்தில் நிறுவப்பட்ட 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸின் சிலை இவரால் செதுக்கப்பட்டது. 
    அருண் யோகிராஜ்தான் கேதார்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் செய்துள்ளார். மைசூர் மாவட்டத்தில் உள்ள சுஞ்சன்கட்டேயில் 21 அடி உயர அனுமன் சிலை, 15 அடி உயர அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை, மைசூரில் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் வெள்ளை அமிர்தசிலை சிலை, 6 அடி உயர நந்தி சிலை, 6 அடி உயரத்தில் பனசங்கரி தேவி சிலை, 14.5 அடி உயரம் கொண்ட ஜெயச்சாமராஜேந்திர உடையாரின் வெள்ளை நிற அமிர்தசிலை சிலை என பல சிலைகள் அருண் யோகிராஜால் செதுக்கப்பட்டவை ஆகும். 
     

    Source link

  • Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு 

    Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு 


    <p>Ram Temple : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. &nbsp;இந்த நிகழ்வில் பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்ய உள்ள நிலையில் ஏராளமான வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.&nbsp;</p>
    <h2><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/e143b8a71eb2ae62f9b581ff1aaab0191705749953744224_original.jpg" alt="" width="720" height="540" /><br />கங்கனாவின் பாராட்டு :</h2>
    <p>மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தான் 300 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லில் ராமரின் சிலையை செதுக்கி வடிவமைத்துள்ளார். ராமரின் சிலையின் புகைப்படத்தை பார்த்த நடிகை கங்கனா ரனாவத் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதுமே சிறு வயதில் ராமர் இப்படித்தான் இருப்பார் என கற்பனை செய்துள்ளேன். என்னுடைய கற்பனை அப்படியே உயிர்ப்பித்துள்ளது" என குறிப்பிட்டதுடன் ராமரின் திருவுருவ சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜை டேக் செய்து பாராட்டியுள்ளார்.</p>
    <p>"மயங்க வைக்கும் அளவுக்கு எவ்வளவு அழகாக ராமரின் சிலையை நீங்கள் வடிவமைத்துள்ளீர்கள். இதுவும் பகவான் ராமரின் ஆசீர்வாதம். அவர் உங்களுக்கு தெய்வீக தரிசனம் தந்து ஆசீர்வதிப்பார்" என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/83dd8037ccbd57858e3ae8baf821dccd1705750081966224_original.jpg" alt="" width="720" height="540" /><br />அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரனாவத்திற்கும் அழைப்பு வந்துள்ளது. அதையும் அவர் ஏற்கனவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.&nbsp;</p>
    <h2>கங்கனாவின் அறிமுகம் :</h2>
    <p>ஒரு மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட கங்கனா பின்னர் நடிப்பை தேர்ந்து எடுத்து 2006ம் ஆண்டு வெளியான ‘கேங்க்ஸ்டர்’ படம் மூலம் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/1110902dd5fda8fbf8d4a79f5eb337141705749967685224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><br />மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளார் நடிகை கங்கனா. இந்தியாவில் அவசர கால நிகழ்வுகளை ஆராயும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் மாதவனுடன் இணைந்து சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கங்கனா ரனாவத்.&nbsp;</p>
    <h2>சந்திரமுகி 2 :</h2>
    <p>’தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கங்கனா, &nbsp;கடந்த செப்டம்பர் மாதம் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.</p>

    Source link