<p style="text-align: justify;"><strong>கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/805d28098d7b69d8f7a3c42b3df8e8501714376533997113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;">கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/8497033fdb46158bcdff029151c036281714376594056113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாம வழிகள் கூறிய ஆலயத்தின் சிவாச்சாரியார் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு மகா தீபாராதனை காட்டினார். அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><strong>தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/27c9f06c8200660c85ddacdc5cd86fb21714377172077113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் இன்று தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாதம் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு உற்சவர் கணபதிக்கும் எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்ப அபிஷேகம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/d48652c6a6a4e4dbadb282d9dfae5ed41714377208820113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">அதை தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலை அணிவித்த பிறகு சாமிக்கு துப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்து சர்மா சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
Tag: அபிஷேகம்
கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சங்கடஹரா சதுர்த்தி விழா

பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா

<p style="text-align: justify;"><strong>பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/e6ea17f40eb8c27bff1dbb047a8237c11712912881812113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் ஆறுமுக சுவாமி, வள்ளி ,தெய்வானைக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக உற்சவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/071f1aecb3d7f3cb9448166dfff073ed1712912914616113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">மேலும், சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு வெள்ளி மயில் வாகனத்தில் ஆறுமுகம் சாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/069fa5a9b519bf3421f2b48d7eb17fa91712912938618113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்த ஆறுமுகம் சுவாமி வள்ளி தெய்வானைக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற ஆறுமுகசாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா

<p style="text-align: justify;"><strong>கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/26959e0beffb3e75896bced75caccdad1712733255131113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;">கரூர் மாவட்டம் , தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில், முத்துமாரியம்மன் வேம்பு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/00c2a67caa976a24e9dae3337d8d4ee91712733270098113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வேம்பு வாகன அலங்காரத்தில் சுவாமி மேள தாளங்கள் முழங்க திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது .</p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/6268ae270450f57137672ade0ae941ef1712733286609113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

<p style="text-align: justify;"><strong>கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/1af71d610ef50e32b92dad28127c3dd61711358198541113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் , தேர் வீதி பகுதியில் வெளிவந்து அருள் பாலித்து அருள்மிகு ஸ்ரீ கற்பக விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/30161b2748d486af90475965706f277b1711358246436113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">அது தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் ராஜ அலங்காரத்தில் பால முருகனை அலங்காரம் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திரச் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து பாலமுருகனை மனம் உருகி வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டில் ஆலய நிர்வாகி சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/2c0d6504b4e7943babd822839201ce7c1711358263483113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற ஒரு நிலையில் கரூர் நகரப் பகுதியில் உள்ள அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் சுவாமிக்கு நாமாவளிகள் கூறினார்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/7367a80f173cb17b0ad0adbc48179ef21711358280457113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">அதை தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகன் பங்குனி உத்தர சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>Shivratri 2024 Karur Sri Kashi Vishwanath Temple First time special abhishekam ccasion of Shivratri – TNN

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு முதல் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவராத்திரி முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இரவு முதல் காலை வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்பிகைக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் அம்பிகைக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிகளுக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியும் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் பெரிய ஆண்டாங் கோவில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி முதல் கால சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
மாசி மாத மகா சிவராத்திரி முன்னிட்டு உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழி மங்கை உடனுறை அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலயத்தில் மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.
சிவராத்திரி முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், அருள்பாளித்து வரும் அருள்மிகு கிளிசேர் மொழி மங்கை உடனுறை அருள்மிகு அடியாருக்கு எளியர் சிவாலயத்தில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
மேலும் காண





