Tag: அக்ஷய் குமார்

  • Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one

    Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one


    ‘படே மியான் சோட் மியான்’ த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
    அக்‌ஷய் குமார் – டைகர் ஷெராஃப்:
    பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘படே மியான் சோட் மியான்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ‘மேக்கிங் ஆஃப் ரியல் ஆக்‌ஷன் ஃபிலிம்’ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  
    பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தில், பாலிவுட்டின் இரண்டு பெரிய ஆக்‌ஷன் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த வீடியோ சுவாரஸ்யமான ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டது என்பது போன்றான காட்சிகளால் நிறைந்துள்ளது. மேலும், இந்தப் படம் தயாரிப்பிற்கு பின் எவ்வளவு பேரின் உழைப்பு உள்ளது என்பதை புரிய வைக்கிறது.  
    இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் கூறுகையில், “பெரிய ஆக்ஷன் படங்களை எடுப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வம் குறித்து மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கின்றனர். அதற்கு என்னிடம் பதில் இல்லை. சாத்தியமற்ற ஒன்றை காட்சிப்படுத்தும் உள்ளுணர்வு இருக்கிறது என்னிடம். அதையே செய்கிறேன். இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளோம். மேலும் படத்தில் நிறைய சர்பிரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. இது ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
    ஆக்‌ஷன் படம்:
    இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி கூறுகையில், “படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு பெரிய ஆக்ஷன் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஆக்‌ஷன் காட்சிகள் பார்ப்பதற்கு ரியல் ஆக இருக்க வேண்டும் நோக்கத்தில் படமாக்கியிருக்கிறோம். இது உண்மையிலேயே நம்பக்கூடியதாக தெரிகிறது,” என்று கூறினார்.

     தயாரிப்பாளர் வாசு பாக்னானி கூறுகையில், “இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லியிருக்கார். குறைந்தபட்சம் வி.எஃப்.எக்ஸ். எல்லாம் நிஜமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினோம். ரொம்ப பதட்டமாக இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய ஆக்ஷன் படத்தை எப்படி எடுப்பது என்று நினைத்தோம்” என்று கூறினார்.

    மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை நினைவூட்டும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கிறது. இந்த பான்-இந்தியா திரைப்படம் அதன் பெரிய அளவிலான மற்றும் ஹாலிவுட் பாணி சினிமா காட்சிகளுக்காக சலசலப்பை உருவாக்குகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘படே மியான் சோட் மியான்’ படம் வெளியாக உள்ளது.  இப்படம் நிச்சயம் அனைத்து வயது ரசிகர்களையும் ஈர்க்கும். பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

     

    மேலும் காண

    Source link

  • Prithviraja Villan In Full On Action Hindi Movie Bade Miyan Chote Miyan Teaser Released Watch Here | Bade Miyan Chote Miyan: அக்‌ஷய் குமாரின் ஆக்ஷன் த்ரில்லர்!

    Prithviraja Villan In Full On Action Hindi Movie Bade Miyan Chote Miyan Teaser Released Watch Here | Bade Miyan Chote Miyan: அக்‌ஷய் குமாரின் ஆக்ஷன் த்ரில்லர்!

    அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ராணுவ வீரர்களாக நடிக்கும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் அதிரடி டீஸர் வெளியாகி உள்ளது.
    இந்த ஜனவரியில் ரசிகர்கள் பலரும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் டீஸரை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். படத்தின் கவர்ச்சியான போஸ்டர்கள் மற்றும் கிலிம்ப்ஸை தொடர்ந்து தற்போது படக்குழு டீசரை நேற்று வெளியிட்டுள்ளனர்.  அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு அதிரடி ஹீரோக்கள் நடித்துள்ளனர்.
    இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர்.  வசீகரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தேசபக்தி உணர்வுடன் கூடிய இந்த டீஸர் ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தை உருவாக்கியுள்ளது.மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சினிமா காட்சிகளை கொண்டுள்ளது.
    இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈத் 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    இந்த படத்தின் டீஸரைப் பற்றி இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் பேசுகையில், “உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகவும் திறமையான குழுவினரைக் கொண்டு பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை படே மியான் சோட் மியான் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.  அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் சவாலான காட்சிகளை மிகவும் சிரமமின்றி நடித்துள்ளனர்.  ஈத் ஏப்ரல் 2024 அன்று இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக பெரிய திரைகளில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

    படம் குறித்து தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறுகையில், “டீஸர் ஒரு உண்மை கதையை பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகியோரை வைத்து சொல்லப்பட்டுள்ளது.  கூடுதலாக, பிருத்விராஜ் ஒரு ஆச்சரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தகைய ஆக்‌ஷன் ஹீரோக்களை எங்கள் படத்தில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அலியின் மேஜிக் மீண்டும் ஒருமுறை நன்றாக வந்துள்ளது.  ரசிகர்கள் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பையும், இந்த படத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
    படே மியான் சோட் மியான் படத்தின் டீஸர் படம் என்ன கதையை சொல்ல வருகிறது என்பதை புரிய வைக்கிறது, ஆனாலும் படத்தில் இன்னும் நிறைய ஆக்சன், காமெடி, பாடல்கள் மற்றும் தேச பக்தி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை ஆஸ் படங்களுடன் இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

    Source link

  • Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா  ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!

    Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!


    <h2><strong>ரோஹித் ஷெட்டி</strong></h2>
    <p>பாலிவுட் இயக்குநர்களில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோலமான், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரோஹித் ஷெட்டி தனது இளமைக் காலத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுவதில் இருந்து தொடங்கினார். ரோஹித் ஷெட்டியின் தந்தை எம்.பி ஷெட்டி மற்றும் தாயார் ரத்னா ஷெட்டி ஆகிய இருவரும் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடும் கலைஞர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரோஹித் ஷெட்டி தனது பெற்றோர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.</p>
    <h2><strong>ரத்தக் காயங்களுட திரும்பி வருவார்!</strong></h2>
    <p>ஒரு ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்த தனது தந்தையை சிறிய வயதில் தனது உடன் படிக்கும் குழந்தைகள் எல்லாரும் பார்த்து பயப்படுவார்கள் என்று ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். தனது தந்தையின் உயரம் மற்றும் அவரது கூர்மையான கண்கள் எல்லாம் தான் இதற்கு காரணம் என்றும், ஆனால் உண்மையில் தனது தந்தை மிகப் பணிவாகவும் மிக அன்பாகவும் பழகக்கூடியவர் என்று அவர் தெரிவித்தார்.</p>
    <p>பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு தனது தந்தை டூம் போட்டுள்ளதாகவும் அவரது திறமையைப்&nbsp; பார்த்த நாஸிர் ஹுஸைன் தனது படத்தில் அவருக்கு ஸ்டண்ட் டைரக்டராக வாய்ப்பு கொடுத்ததையும் அவர் விவரித்தார். <span class="Y2IQFc" lang="ta">தீவார், யாதோன் கி பராத், கிரேட் காம்ப்லர், டான்,&nbsp; மற்றும் திரிசூல் போன்ற படங்களுக்கு தனது தந்தை சண்டைக் காட்சிகள் இயக்கியுள்ளார் என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">சினிமாவில் தனது தந்தை தான் முதல் முறையாக கண்ணாடியை உடைக்கும் ஸ்டண்ட் காட்சியை பயன்படுத்தியதாகவும் இதனால் பல&nbsp; நாட்களில் அவர் வீட்டிற்கு ரத்த காயங்களுடனும் தையல்களுடனும் திரும்பியதை தான் பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.&nbsp;</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">தனது தந்தையைப் போல் தனது தாயும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு ஸ்டண்ட் காட்டிகளில் டூப் கொடுத்துள்ளார் என்று அவர் தெரித்தார். அன்றைய புகழ்பெற்ற நடிகைகளாக இருந்த ஹேமா மாலினி மற்றும் வைஜயந்தி மாலா உள்ளிட்டவர்களின் புகழ்பெற்ற சண்டைக் காட்சிகளில் தனது அம்மா நடித்துள்ளதாக அவர் கூறினார்.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">தனது பெற்றோரைப் போலவே தானும் தனது சினிமா பயணத்தை ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக தொடங்கினார் ரோஹித் ஷெட்டி . தனித்துவமான அவரது சண்டைக் காட்சிகள் பரவலான கவனம் பெற்றிருக்கின்றன, இதனால் பலமுறை தனது எலும்புகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறார் அவர். இது தன்னுடைய குடும்ப வழக்கமாகிவிட்டது என்று அவர் நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">சிங்கம் அகெயின்</span></strong></h2>
    <p><span class="Y2IQFc" lang="ta">தற்போது ரோஹித் ஷெட்டி அக்&zwnj;ஷய் குமார், ரன்பீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய மூவரை வைத்து சிங்கம் அகெயின் படத்தை இயக்கி வருகிறார், இந்த மூன்று நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. </span></p>

    Source link

  • Why Should We Tolerate Hate Says Celebs Join Hands For Lakshadweep Pm Visit Controversy | Boycott Maldives : ‘மாலத்தீவு போகாதீங்க’

    Why Should We Tolerate Hate Says Celebs Join Hands For Lakshadweep Pm Visit Controversy | Boycott Maldives : ‘மாலத்தீவு போகாதீங்க’

    Boycott Maldives : கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தன்னடைய பயணத்தின் அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.  
    சர்ச்சையான மோடியின் லட்சத்தீவு பயணம்:
    லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்பாக எனது லட்சத்தீவு பயணம் அமைந்தது.  அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
    லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு பலரும் லட்சத்தீவை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட லட்சத்தீவு சிறந்தது என்று பதிவிட்டு வந்தனர்.  
    இதனை அடுத்து, மாலத்தீவு அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியர்களை கேலி செய்தும்,  தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர். இதனால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறினர். Boycott Maldives எனும் ஹேஷ்டேக்கையும்  இணையத்தில் பதிவிட்டனர். 
    மோடிக்கு ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்:
    இந்த நிலையில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை ஆதரிக்கும் வகையில், பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சல்மான் கான், ஷ்ரத்தா கபூர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் அக்ஷய் குமார் கூறியதாவது, “இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் கூறியிருக்கின்றனர்.

    அதிகபடியான  எண்ணிக்கையில் சுற்றலா பயணிகளை அனுப்பும் இந்தியாவுக்கு  அவர்கள் இதை செய்வது ஆச்சரியமாக உள்ளது. நாம் அண்டை நாடுகளுக்கு நல்லவர்கள் தான். ஆனால், ஏன் இப்படி ஒரு வெறுப்பை நாம் சகித்துக் கொள்ள வேண்டும்? நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.
    ஆனால் கண்ணியம்தான் முதன்மையானது. இந்திய தீவுகளுக்கு சென்று நம் சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்” என்றார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் கூறுகையில், “”எங்கள் பிரதமர் மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரையில் பார்ப்பது மிகவும் அருமையாக இருந்தது. இதில், சிறந்த அம்சம் என்னவென்றால், அது எங்கள் இந்தியாவில் உள்ளது” என்றார். 

    நடிகை ஷ்ரத்தா கபூர் கூறுகையில், “இந்த படங்கள் மற்றும் மீம்ஸ்கள் அனைத்தும்  பார்ப்பதன் மூலம் நான் மிஸ்ஸிக் அவுட் செய்ததாக நினைக்கிறேன். லட்சத்தீவு அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளது” என்றார். மேலும், சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, “சிந்துதுர்க்கில் எனது 50வது பிறந்தநாள்  கொண்டாட்டம்.
    இந்த கடற்கரை நாங்கள் நாம் விரும்பும் அனைத்தையும் வழங்கியது. மேலும் பல அற்புதமான விருந்தோம்பலுடன் கூடிய நினைவுகளின் பொக்கிஷத்தை எங்களிடம் விட்டுச் சென்றன. இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது  அதிதி தேவோ பவ தத்துவத்தின் மூலம், நாம் ஆராய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. பல நினைவுகள் உருவாக்க காத்திருக்கின்றன” என்றார். 
     

    Source link