சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி.29) எபிசோடில் வீட்டுக்கு வந்த ரேணுகாவை விசாலாட்சி அம்மா நக்கலாக விசாரிக்கிறார். ஆச்சி ரேணுகாவின் அம்மாவை பயங்கரமாக திட்ட ரேணுகா ஆச்சிக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள்.
ஞானத்தை பார்க்கச் சென்ற ரேணுகாவிடம் ஞானம் கோபத்தைக் காட்டுகிறான். ரேணுகாவுக்கு எதுவுமே புரியவில்லை. நந்தினி பேசியது பற்றி சொல்கிறான். மிகவும் வருத்தப்பட்டு “அடுத்த குணசேகரன் போல மாறிடுவ” என நந்தினி சொன்னதாக சொல்லி அழுகிறான். அவனை ஐஸ்வர்யாவும் ரேணுகாவும் சமாதானம் செய்கிறார்கள்.
 

கல்யாணத்தைப் பற்றி ஜான்சியும் கரிகாலனும் குணசேகரனிடம் போய் கேட்க அவர் கோபத்தில் கையில் கிடப்பதை எல்லாம் தூக்கி விசிறடிக்கிறார். மறுபக்கம் பலத்த காயங்களுடன் மயக்கத்தில் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் தர்ஷினி.
அப்போது குணசேகரன் வீரசங்கிலிக்கு போன் செய்கிறார். போன் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தர்ஷினி போனை எடுக்க குணசேகரன் அவர் தான் தர்ஷினியை கடத்தி வைக்க சொன்னதை சொல்லி விடுகிறார். மேலும் அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்வதாகவும், இரண்டு நாளில் வந்து கூட்டிட்டு போறேன் என சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் தர்ஷினி.ஞானம் பேசியதைக் கேட்டு நந்தினியை தப்பாகப் புரிந்து கொண்டு அவளை பேச விடாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள் ரேணுகா. நந்தினிக்கும் ரேணுகாவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் விசாலாட்சி அம்மாவும் ஆச்சியும். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.நந்தினி மனது பொறுக்காமல் ரேணுகாவை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அந்த நேரத்தில் ஞானம் அங்கே வர “எதுக்கு மாமா இல்லாத விஷயத்தை எல்லாம் இப்ப அக்காகிட்ட சொல்லி சண்டையை மூட்டி விட்டீங்க. தெரியாம தான் கேக்குறேன்” என சத்தம் போடுகிறாள் நந்தினி. அவள் சத்தத்தை கேட்டு கதிர் அங்கே வருகிறான். விசாலாட்சி அம்மாவும் இதை வேடிக்கை பார்க்கிறார்.

ஸ்பெஷல் அதிகாரி ஒரு இடத்தில் நின்று தர்ஷினி கேஸ் குறித்து அடுத்து என்ன செய்வது எனப் பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது அந்த வழியாக தர்ஷினியைத் தேடி பன்றி மலைக்கு சென்ற சமயத்தில் ஒரு ஆள் வந்து ஜீவானந்தத்திடம் ஒரு பேப்பரைக் காட்டி விசாரித்தான். அவன் அந்த வழியாக வந்ததைப் பார்த்த ஜனனி, ஆபீஸரிடம் “ஜீவானந்தம் சாரும், நாங்களும் தர்ஷினியை தேடி வந்த போது இந்த ஆளை பார்த்தோம்” என சொல்கிறாள்.  
 

குணசேகரன், வீர சங்கிலிக்கு போன் செய்து பேசுகிறார். “ஜீவானந்தம் என்னோட பொண்ணை தேடி கண்டிப்பா வருவான். அப்படி வந்தான்னா” என சொல்லி ஏதோ பிளான் பற்றி சொல்கிறார். தர்ஷினி எழுந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள் ஆனால் அவளால் முடியவில்லை. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.  

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed