இந்திய பிரதமர் ரோம் சென்றிருந்தபோது, ​​அவர் பரிசளித்த ‘மெலோடி’ சாக்லெட்டுகள் குறித்து இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நகைச்சுவையாக பேசும் விடியோ ஒன்று வைரலானது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், அந்த நகைச்சுவையான தருணத்தை, அரசின் பொருளாதாரக் கையாளுதல் குறித்த தனது விமர்சனத்துடன் தொடர்புபடுத்தி, சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து பிரதமர் விலகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “நாட்டின் மீது ஒரு பொருளாதாரப் புயல் சூழ்ந்துள்ளது, ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் டாஃபிக்களை விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.” என்று கூறியுள்ளார். பொருளாதாரம் தொடர்பாக பிரதமரை சாடிய ராகுல் காந்தி தனது விமர்சனத்தை தொடர்ந்த காந்தி, அரசாங்கம் வெளித்தோற்றத்தில் கவனம் செலுத்தி வரும் வேளையில், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் போராடி வருவதாகக் குற்றம் சாட்டினார். “விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என அனைவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள், பிரதமர் சிரித்துக்கொண்டே ரீல்ஸ் உருவாக்கிக்கொண்டிருக்கிறார், பாஜக தலைவர்களோ கைதட்டுகிறார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார். “இது தலைமைத்துவம் அல்ல, இது ஒரு நாடகம்,” என்று ராகுல் காந்தி தனது கடுமையாக விமர்சித்துள்ளார். ரோமில் மோடிக்கும் மெலோனிக்கும் இடையேயான உரையாடல் இணையத்தில் வைரலான சிறிது நேரத்திலேயே, ராகுலின் இந்த பதிவு வெளியானது. आर्थिक तूफ़ान सर पर है, और हमारे प्रधानमंत्री इटली में टॉफ़ी बाँट रहे हैं!किसान, युवा, महिलाएँ, मज़दूर और छोटे व्यापारी सब रो रहे हैं – PM हंसकर रील बना रहे हैं, और BJP वाले ताली बजा रहे हैं।यह नेतृत्व नहीं, नौटंकी है। — Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2026 வைரலாகும் மெலோனியின் ‘மெலடி’ வீடியோ ஜார்ஜியா மெலோனி சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில், “மெலோடி, எனக்கு மிகவும், மிகவும் நல்ல டாஃபி ஒன்றை பரிசளித்ததற்காக” மோடிக்கு நன்றி என புன்னகையுடன் தெரிவித்துள்ளார். “பரிசுக்கு நன்றி,” என்று அந்த வீடியோவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில், மெலோனியுடன் தோன்றிய பிரதமர் மோடி, இத்தாலிய தலைவர் அந்த டாஃபி பரிசை விளையாட்டுத்தனமாக காட்டியபோது வாய்விட்டுச் சிரித்தார். சமூக வலைதளங்களில் ‘மெலோடி’யின் வார்த்தை விளையாட்டு இந்த உரையாடல், 2023-ல் துபாயில் நடந்த COP28 உச்சி மாநாட்டின் போது முதன்முதலில் பிரபலமடைந்த, மோடி மற்றும் மெலோனியின் பெயர்களின் கலவையான, பரவலாகப் பிரபலமான “மெலோடி” ஹேஷ்டேக்கிற்கு மீண்டும் புத்துயிர் அளித்தது. மோடியுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “COP28-ல் நல்ல நண்பர்கள்” என்று தலைப்பிட்டு, அதனுடன் “மெலோடி” என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்த பிறகு, மெலோனியே இந்த சொற்றொடரை முதலில் உருவாக்கினார். அதுமுதல், சர்வதேச நிகழ்வுகளின்போது இரு தலைவர்களும் சுமூகமாக உரையாடிய போதெல்லாம், இந்தச் சொல் இணையத்தில் அடிக்கடி பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது, அதே பெயருடைய சாக்லெட்டை பிரதமர் மோடி பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்க மேலும் படிக்கவும்

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports