<p>வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை, பீகார் மாநிலம் பெட்டியா நகர் சம்பாரனில் உள்ள ராமன் மைதானத்தில் இருந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை&nbsp; தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்றும் போட்டி நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியக் கூட்டணி சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p>இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்னும் சில மாதங்களில் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>இச்சூழலில் இன்று பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் சுமார் ரூ. 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.</p>
<p>பீகாரில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பீகாரில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல பேரணிகளில் உரையாற்ற உள்ளனர். ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு பிரச்சாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு முக்கிய பேரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>
<p>மாநிலத்தில் பெகுசராய், பெட்டியா மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி மூன்று பேரணிகளில் உரையாற்ற உள்ளார். வரும் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பேரணியில் கலந்துக்கொள்ள உள்ளார்.</p>
<p>இதேபோல், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீதாமர்ஹி, மாதேபுரா மற்றும் நாலந்தா ஆகிய இடங்களில் அமித் ஷா உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேபி நட்டா பல இடங்களில் பேரணிகளை நடத்தலாம், குறிப்பாக பீகாரின் சீமாஞ்சல் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.</p>
<p>பீகார் அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜேடியு மஹாகத்பந்தன் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில் பாஜக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது.</p>
<p>பிஜேபியுடனான முந்தைய கூட்டணியில் இருந்து மாற்றத்தைக் குறிக்கும் வகையில், வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதலமைச்சர் நிதிஷ்குமார் வெற்றிகரமாக ஒன்றிணைத்துள்ளார். பீகாரில் உள்ள அனைத்து 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் போட்டி அமைக்கப்பட்டுள்ளது, அங்கு கடந்த தேர்தலில் என்.டி.ஏ 39 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றிப் பெற்றது.</p>
<p>பாஜகவின் பிரச்சாரத்தை நரேந்திர மோடி மீண்டும் முன்னெடுத்துச் செல்வதால், கட்சியின் மாநில அமைப்பை தலைவர் சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைத்துள்ளது. பீகாரில் அரசியல் சூழல், கணிசமான தேர்தல் மோதலுக்கு தயாராகி வருகிறது.</p>
<p>&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed