பிரதமர் நரேந்திர மோடி ரோம் சென்றிருந்தபோது, ​​இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் பாக்கெட்டை பரிசாக வழங்கினார். இதையடுத்து, மெலோனி அவருக்கு நன்றி தெரிவித்து பகிர்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. மெலோனி வெளியிட்ட வீடியோ தனது சமூக வலைதளத்தில் அந்த தருணத்தை பகிர்ந்துகொண்ட இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, “பரிசுக்கு நன்றி,” என்று பதிவிட்டதோடு, “பிரதமர் மோடி பரிசாக மிகவும், மிகவும் சுவையான டாஃபியான மெலோடியை கொண்டு வந்தார்,” என்றும் பாராட்டியுள்ளார். Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA — Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026 இந்த கலகலப்பான உரையாடல் இணையத்தளத்தில் வைரலாக பரவியது. பல சமூக ஊடகப் பயனர்கள் இந்த எதிர்பாராத ராஜதந்திரப் பரிசுக்கு எதிர்வினையாற்றியதோடு, இந்தியாவில் மெலோடி டாஃபிக்கு இருந்த பழைய கால பிரபலத்தையும் நினைவு கூர்ந்து வருகின்றனர். ரோமில் இரவு விருந்தின்போது மோடியும், மெலோனியும் சந்திப்பு ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்ட தனது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, பிரதமர் மோடி நேற்று இத்தாலிக்கு வந்தடைந்தார். முறைசார்ந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, மெலோனி மோடிக்கு இரவு விருந்து அளித்ததுடன், ரோமின் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றும், உலகின் மிகப்பெரிய பண்டைய அரங்கு அரங்கமுமான, புகழ்பெற்ற கொலோசியத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். சந்திப்பிற்குப் பிறகு பேசிய மோடி, இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும், புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள முறைசார்ந்த பேச்சுவார்த்தைகள் இந்தியா-இத்தாலி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறினார். இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பு ரோம் வந்தடைந்தபோது தமக்கு அன்பான வரவேற்பு அளித்த இத்தாலியில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கும் மோடி நன்றி தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்திய சமூக உறுப்பினர்களும் இத்தாலிய கலைஞர்களும் இணைந்து, கதக், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய நடன வடிவங்களைக் கொண்ட வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். இத்தாலிய இசைக்கலைஞர்கள் சந்தூர், தபலா, புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தி இந்திய பாரம்பரிய இசையையும் நிகழ்த்தினர். இந்தியாவால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய ஓவியரை சந்தித்த மோடி இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி இத்தாலிய ஓவியரான ஜியாம்போலோ டொமாசெட்டியுடனும் கலந்துரையாடினார். அப்போது, டொமாசெட்டி, வாரணாசியை மையமாகக் கொண்ட தனது கலைப்படைப்பை மோடிக்கு டொமாசெட்டி பரிசளித்தார். டொமாசெட்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கலாச்சாரத்துடன் தொடர்புடையவர் என்றும், மகாபாரதம் மற்றும் வேதக் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்ட ஓவியங்களில் விரிவாக பணியாற்றியுள்ளார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இத்தாலியில் இந்திய இசையின் வளர்ந்து வரும் பிரபலத்தையும் மோடி சுட்டிக்காட்டினார். மேலும், ரோமில் நடைபெற்ற சமூக வரவேற்பு நிகழ்ச்சியின் போது, ‘ஹம்சத்வனி’ என்ற செவ்வியல் இசைப் படைப்பை நிகழ்த்திய இத்தாலிய கலைஞர்களையும் பிரதமர் மோடி பாராட்டினார்.   இதையும் படிக்க மேலும் படிக்கவும்

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports