<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முடிவுக்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.&nbsp;</p>
<h2 style="text-align: justify;">மக்களவைத் தேர்தலும் தமிழ்நாடும்</h2>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி திமுக தலைமையில் அமைந்து இருந்தது.&nbsp; அதிமுக – தேமுதிக கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த கூட்டணி போட்டியிட்டது. இதுபோக நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. தேர்தலை பொருத்தவரை, நான்கு முனை போட்டி நிலவியது.&nbsp;</p>
<h2 style="text-align: justify;">"தண்ணியாக செலவான பணம் "</h2>
<p style="text-align: justify;">முதற்கட்ட வாக்குப்பதிவில்லையே தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடைபெற்றது என்பதால் பிரச்சாரம் மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு, மிகவும் குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களுக்கு வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்குகளை சேகரிக்க முடியவில்லை. அதேபோன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனிக்க முடியாத சூழலும் அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டது.&zwnj; இதனால் பல தொகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு, குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து வழிக்கு கொண்டு வந்தனர். &nbsp; M -பவர் சரியாக சென்ற தொகுதிகளில், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் &nbsp;தீயாய் சுட்டெரிக்கும் கைகளில் வேலை செய்தனர். M – POWER சரியாக சென்று சேராத இடங்களில் தேர்தல் நடைபெற்றதற்கு அறிகுறியே இல்லாமல் இருந்தது. வேட்பாளர்கள் போட்டிக்கொண்டு பணத்தை தண்ணியாக செலவு செய்தனர்.</p>
<h2 style="text-align: justify;">வாக்காளர்களுக்கு பணம்</h2>
<p style="text-align: justify;">பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகள் சார்பில், வாக்காளர்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விஐபிகள் &nbsp;தொகுதிகளில் ஆயிரம் ரூபாய் வரை சில இடங்களில் &nbsp;கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் டோக்கன் கொடுத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.&nbsp;</p>
<h2 style="text-align: justify;">டோக்கன் தொகுதி&nbsp;</h2>
<p style="text-align: justify;">அந்த வகையில் ஆரணி தொகுதியில் போட்டியிட்ட , பிரதான கட்சியை சேர்ந்த புதுமுக வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார். இறுதிக்கட்டத்தில் சரியாக அவர் எதிர்பார்த்த பணம் அவர் &nbsp;கைக்கு வந்து சேராததால், வாக்காளர்களுக்கு பணத்திற்கு பதில் விசிட்டிங் கார்டு போன்ற ஒரு டோக்கன் கொடுத்து வாக்குகளை சேகரித்திருக்கிறார். பிரதான கட்சியை சேர்ந்த உலகத்தைப் பெயராகக் கொண்ட அவர் டோக்கன் கொடுப்பதை பார்த்து எதிர்க்கட்சினரும் உஷார் ஆகி உள்ளனர்.&nbsp;</p>
<h2 style="text-align: justify;">காசா பணமா டோக்கன் தானே ?</h2>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் தங்கள் பங்கிற்கு டோக்கன்களை வாரி வழங்கி உள்ளனர். ஆர்.கே. &nbsp;நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றபொழுது, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் வழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே ஃபார்முலாவை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களும் தங்களுக்கு வர வேண்டியதை கொடுக்காமல் டோக்கன் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என புலம்பல் சத்தமும் தொகுதி முழுக்க ஒலிக்க துவங்கி இருக்கிறது. &nbsp;</p>
<h2 style="text-align: justify;">ஆயிரம் தான் இருந்தாலும் ..</h2>
<p style="text-align: justify;">நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம், அவர்கள் இப்படிப்பட்டவர்கள் இவர்கள் அப்படிப்பட்டவர்கள் என அடுக்கு மொழி வசனம் பேசினாலும், தேர்தல் அறிக்கை மூலம் மக்களை கவர்ந்தாலும், வித்தியாசமான பிரச்சாரத்தை கையில் எடுத்தாலும், வேட்பாளர்களின் கடைசி நேர நம்பிக்கை ஏன் பணத்தின் மீது செல்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. பணத்தை தருபவர்கள் எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தால் போதும் மாற்றம் தானாக பிறந்துவிடும்.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed