இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான எட்வர்ட் கிறிஸ்டோபர் ஷீரன், உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர்.
உலகின் பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவர், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ‘+–=÷× Mathematics Tour’ என்ற இசைக் கச்சேரியை மும்பையில் நடத்தியிருந்தார். அந்த சமயத்தில் நெட்டிசன்களும் எட் ஷீரனின் “Shape of You’, ‘Thinking Out Loud’, ‘Castle on the Hill’, ‘Photograph’, ‘Galway Girl’, ‘Perfect’ போன்ற ஹிட் பாடலைகளை வைரல் செய்திருந்தனர்.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த ஷீரன், ஷாருக் கான், ரஹ்மான் போன்ற நட்சத்திரங்களை மட்டும் பார்க்கவில்லை, பல சிறிய பள்ளிகளுக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுடன் அமர்ந்து, பாடல்கள் பாடியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன் குடும்பம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் எட் ஷீரன், “நான் என் குடும்பத்துடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவேன். அதுவும் என் குழந்தைகளுடன் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், பொதுவெளியில் சுதந்திரமாக அவர்களைக் கூட்டிச் செல்ல முடியாதது வருத்தமானது.






















