Childrens Missing: சட்டவிரோதமான காப்பகம்! மாயமான 26 சிறுமிகள் – மீட்கப்பட்டார்களா? மத்திய பிரதேசத்தில் பகீர்!


<p><strong>Madhya Pradesh:</strong> மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
<h2><strong>காணாமல் போன 26 சிறுமிகள்:</strong></h2>
<p>மத்திய பிரதேச மாநிலம் போபால் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குழந்கைள் காப்பகம் நடத்தப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (NCPCR) தகவல் கிடைத்துள்ளது.&nbsp; குழந்தைகள் காணாமல் போனதாக தகவல் வந்ததை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கனுங்கோ, பர்வாலியா பகுதியில் உள்ள காப்பகத்துக்கு சென்று சோதனையிட்டார்.</p>
<p>அந்த சோதனையில், சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்து 8 முதல் 18 வயதுக்குள் இருக்கும் 26 குந்தைகள் காணாமல் &nbsp;போனதும் தெரியவந்தது.&nbsp; மேலும், 68 சிறுமிகள் அங்கு இருந்ததாகவும், அதில் 28 சிறுமிகள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்துள்ளது.</p>
<p>காணாமல் போன சிறுமிகள் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருக்கும் சிறுமிகளுக்கு &nbsp;கிறிஸ்தவ மதத்தை கடைபிடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.&nbsp;</p>
<h2><strong>மீட்கப்பட்ட 26 சிறுமிகள்:</strong></h2>
<p>வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் 2 பேர் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக கூறி, பிரிஜேந்திர பிரதாப் சிங் மற்றும் கோமல் உபாத்யாய் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சுனில் சோலங்கி மற்றும் அத்துறையின் உதவி இயக்குநர் ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>இதுகுறித்து NCPCR தலைவர் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் குழந்தைகள் காப்பகத்தை இயக்க அனுமதித்துள்ளனர்.</p>
<p>குழந்தைகள் காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. இரண்டு பெண் பாதுகாவல்களும், இரவில் இரு ஆண் காவலர்கள் தங்கி இருக்கின்றனர். காணாமல் போன அனைத்து சிறுமிகளும் குழந்தைகள் நலக் குழுவின் உத்தரவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p>காணாமல் போன 26 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அடம்பூர் சாவ்னி பகுதியில் 10 சிறுமிகளும், சேரிகளில் 13 பேரும், டாப் நகரில் இரண்டு பேரும், ரைசனில் ஒரு சிறுமியும் மீட்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.</p>
<p>இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விக்ரம்சிங் கூறுகையில், "சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்த 41 சிறுமிகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அனைத்து சிறுமிகளும் பத்திரமாக உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.</p>
<hr />
<div class="dottedimg">மேலும் படிக்க</div>
<div class="dottedimg">
<p class="article-title "><a title="GIM 2024: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தொழில்துறைக்கு சாதகமான சூழலில் தமிழ்நாடு : முகேஷ் அம்பானி பேச்சு" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-global-investors-meet-2024-reliance-mukesh-ambani-speech-160272" target="_self">GIM 2024: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தொழில்துறைக்கு சாதகமான சூழலில் தமிழ்நாடு : முகேஷ் அம்பானி பேச்சு</a></p>
<p class="article-title "><a title="Global Investor Meet: இத்தனை துறைகளில் தமிழ்நாடு முதலிடமா?!- முதலீட்டாளர்கள் மாநாட்டில் பட்டியலிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-number-one-in-all-these-fields-minister-trb-raja-listed-in-the-global-investors-meet-160254" target="_self">Global Investor Meet: இத்தனை துறைகளில் தமிழ்நாடு முதலிடமா?!- முதலீட்டாளர்கள் மாநாட்டில் பட்டியலிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா!</a></p>
</div>
<p class="edpara">&nbsp;</p>

Source link