Author: Sanjuthra

  • 40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – ACTPnews.com

    40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – ACTPnews.com

    பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில், தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது, இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. தெஹ்ரானில் உள்ள ஜம்ஹூரி பகுதி, இஸ்ஃபஹான், கோம், கரஜ்,…

    Continue Reading

  • சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – ACTPnews.com

    சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – ACTPnews.com

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர். மாநிலம் முழுவதும், 33,133 இடங்களில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.06 லட்சம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில், 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள்…

    Continue Reading

  • இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – ACTPnews.com

    இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – ACTPnews.com

    மசூ​தி​களில் பெண்​கள் நுழைய அனு​மதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்​மின் ஜுபெர் அகமது பீர்​ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்​கல் செய்த மனு​வின் மீது  உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான 9 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த விசா​ரணை​யின் போது, ‘‘உண்​மைத் தன்​மை​யைத் தெளிவுபடுத்​திக் கொள்​ளக் கேட்​கிறோம். மசூ​திக்​குள் இஸ்லாமிய பெண்​கள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​கிறார்​களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு…

    Continue Reading

  • சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – ACTPnews.com

    சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – ACTPnews.com

    தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம், 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல்…

    Continue Reading

  • விமானத்தில் போதையில் ரகளை செய்த பிரபல நடிகை: எச்சரித்து அனுப்பிய போலீசார்  – ACTPnews.com

    விமானத்தில் போதையில் ரகளை செய்த பிரபல நடிகை: எச்சரித்து அனுப்பிய போலீசார்  – ACTPnews.com

    அமெரிக்காவின் பிரபல நடிகை நடாஷா லியோன் (47) கடந்த ஜனவரி மாதம், தான் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக உருக்கமாக தெரிவித்து இருந்தார். சுமார் 10 ஆண்டுகள் போதை பழக்கமின்றி இருந்தார். கடந்த 7ம் தேதி இரவு, ஹாலிவுட்டில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து நியூயார்க் செல்வதற்காக ‘டெல்டா’ விமானத்தில் பயணித்தார். விமானம் புறப்பட தயாரானபோது, முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த நடாஷா லியோன் சீட் பெல்ட் அணியாமல்…

    Continue Reading

  • தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாகி சாதனை  – ACTPnews.com

    தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாகி சாதனை  – ACTPnews.com

    தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள். தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திறனாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டுள்​ளன. காலை 7 மணிக்கு தொடங்கி…

    Continue Reading

  • அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – ACTPnews.com

    அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – ACTPnews.com

    நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும் சக ஊழியர், பலமுறை போன் செய்தும் ரோகித் எடுக்காததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரோகித் தனது படுக்கையிலேயே உயிரிழந்து கிடப்பதைக்…

    Continue Reading

  • தமிழகத்தில் மயோனைஸ்-க்கு மேலும் ஒராண்டு தடை நீட்டிப்பு  – ACTPnews.com

    தமிழகத்தில் மயோனைஸ்-க்கு மேலும் ஒராண்டு தடை நீட்டிப்பு  – ACTPnews.com

    முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல…

    Continue Reading

  • தன்னை இயேசுவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை  – ACTPnews.com

    தன்னை இயேசுவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை  – ACTPnews.com

    ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கிறிஸ்துவ மதத் தலைவரான 14 ஆம் போப் லியோ தொடர்ந்து கண்டித்து வருகிறார். நேற்றைய தினம் செய்தியாளர்களுடன் பேசிய  டிரம்ப், போப் லியோ குற்றச்செயல்கள் மீது விருப்பம் கொண்டவராக நான் நினைக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர்  டிரம்ப் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில், நோய்வாய்ப்பட்ட ஒருவரின் மீது இயேசுவை போல் உடை அணிந்திருக்கும் டிரம்ப் கை வைப்பதைப்…

    Continue Reading

  • What To Watch: ‘பரிமளா & கோ’ முதல் ‘பேட்ரியாட்’ வரை – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்! |parimala and co peddi patriot this week movie releases | actpnews.com

    What To Watch: ‘பரிமளா & கோ’ முதல் ‘பேட்ரியாட்’ வரை – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்! |parimala and co peddi patriot this week movie releases | actpnews.com

    பரிமளா அண்ட் கோ – தமிழ் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் சோபன், அனந்திகா சனில்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “பரிமளா அண்ட் கோ’ திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது. பெத்தி – தெலுங்கு புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த…

    Continue Reading

  • தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – ACTPnews.com

    தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – ACTPnews.com

    தமிழகம் முழுவதும் சுமார் 1,689-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.சென்னை மண்டலம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 470-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 215-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி விநியோகம் செய்யப்படும் குடிநீர் கேன்கள் சில தரமற்றவையாக இருப்பதாக…

    Continue Reading

  • பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி: 18 பேர் கவலைக்கிடம்  – ACTPnews.com

    பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி: 18 பேர் கவலைக்கிடம்  – ACTPnews.com

    ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்களில் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 6 வயது குழந்தை கிசிச்சை பலனின்றி உயிரிழ்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து  துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ் கூறுகையில், கெட்டுப்போன உணவு மற்றும் சாத்தியமான கலப்படம் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது தண்ணீர் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன.…

    Continue Reading

  • மே 4-ம் தேதி காலை  8 மணிக்கு வாக்கு எண்ணிகை தொடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – ACTPnews.com

    மே 4-ம் தேதி காலை  8 மணிக்கு வாக்கு எண்ணிகை தொடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – ACTPnews.com

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:2026- தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும்.முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள்…

    Continue Reading

  • ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை டிரம்ப்: வளைகுடா துறைமுகங்களை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை – ACTPnews.com

    ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை டிரம்ப்: வளைகுடா துறைமுகங்களை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை – ACTPnews.com

    ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை காலை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு (அமெரிக்கா முற்றுகையிட்ட நேரத்தில்) சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். “ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார். …

    Continue Reading

  • லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? – உண்மை என்ன? | actpnews.com

    லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? – உண்மை என்ன? | actpnews.com

    நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், “எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம். லதா ரஜினிகாந்த் பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள். ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும். வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த…

    Continue Reading

  • இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு – ACTPnews.com

    இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு – ACTPnews.com

    கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஒடிசா கிராமீன் வங்கி’யின் மாலிபோசி கிளையில் தியானாலி கிராமத்தை சேர்ந்த, பழங்குடியினத்தை சேர்ந்த ஜீத்து முண்டா என்பவரின் மூத்த சகோதரி கல்ரா முண்டா சுமார் 2 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வங்கி கணக்கில் சுமார் 19,300 ரூபாய் இருந்துள்ளது.இந்த நிலையில் வேறு சட்டபூர்வ வாரிசுகள் எவரும் இல்லாத நிலையில், காலமான சகோதரி கல்ரா முண்டாவின் பெயரில் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கேட்டு குறிப்பிட்ட வங்கி கிளைக்கு…

    Continue Reading

  • தேர்தல் செலவுகளை ஏற்கக்கோரிய வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – ACTPnews.com

    தேர்தல் செலவுகளை ஏற்கக்கோரிய வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – ACTPnews.com

    மதுரை மேலூரைச் சேர்ந்த மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்றம், மக்களவை தேர்தல்களில் சில வேட்பாளர்கள்  இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதனால் அரசுக்கு செலவு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என உத்தரவாத பத்திரம் பெற  வேண்டும்…

    Continue Reading

  • ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  – ACTPnews.com

    ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  – ACTPnews.com

    இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சொந்த வலைதளப் பக்கமான ட்ரூத்சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானிய அரசு கடுமையான பாதிப்பைச் சந்தித்திருப்பதாக தோன்றும் உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், ஈரானிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை முன்வைக்கும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்திவைக்க எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்க ராணுவம் முற்றுகையைத் தொடரவும், எல்லா வகையில் தயார் நிலையில்…

    Continue Reading

  • புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர எதிரான வழக்கு : தமிழக அரசு மேல் முறையீடு  – ACTPnews.com

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர எதிரான வழக்கு : தமிழக அரசு மேல் முறையீடு  – ACTPnews.com

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்தது.இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில், இந்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க கோரிய மனுவை  …

    Continue Reading

  • ” எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கை தான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன்”- விஜய் ஆண்டனி | actor vijay antony about village life in nooru samy press meet | actpnews.com

    ” எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கை தான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன்”- விஜய் ஆண்டனி | actor vijay antony about village life in nooru samy press meet | actpnews.com

    இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “நூறு சாமி’. இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன்.5) நடைபெற்றது. நூறு சாமி இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனியிடம், ”இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “எனக்கு…

    Continue Reading

  • பிரக்ஞானந்தா: ‘இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ’ – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்! | actpnews.com

    பிரக்ஞானந்தா: ‘இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ’ – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்! | actpnews.com

    நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தவர், அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், தனது தாயின் நம்பிக்கை வார்த்தைகள் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா. சறுக்கலில் தொடங்கிய பயணம்! பிரக்ஞானந்தா நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு…

    Continue Reading

  • மேற்கு வங்கம் 2-ம் கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குப்பதிவு – ACTPnews.com

    மேற்கு வங்கம் 2-ம் கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குப்பதிவு – ACTPnews.com

    294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001…

    Continue Reading

  • மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி  – ACTPnews.com

    மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி  – ACTPnews.com

    கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பணியின் அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்படும். பயிற்சியின் முக்கிய அம்சங்களில், வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு ஒழுங்காகவும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். EVM இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களை கையாளும் முறை, தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறை, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், சாத்தியமான முறைகேடுகளைத் தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு…

    Continue Reading

  • மீண்டும் போர் பதற்றம், ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு – ACTPnews.com

    மீண்டும் போர் பதற்றம், ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு – ACTPnews.com

    போர் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பட்டிருந்தாலும், இரு தரப்பும் கடல்வழி முற்றுகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. ஈரான் மீதான கடல்வழி முற்றுகை தொடங்கியதிலிருந்து இதுவரை 33 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்களின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அங்கு நுழையவோ, வெளியேறவோ முடியாது.சிறிய படகுகளாக இருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப்…

    Continue Reading

  • கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: அம்மா உணவகத்தில் இட்லி,சப்பாத்தி விற்பனை நிறுத்தம்  – ACTPnews.com

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: அம்மா உணவகத்தில் இட்லி,சப்பாத்தி விற்பனை நிறுத்தம்  – ACTPnews.com

    சென்னை மாநகராட்சியில், 383 ‘அம்மா’ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இந்த உணவகங்களில், காலையில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல்; மதியம் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம்; இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ‘அம்மா’ உணவகங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும், ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில், அம்மா உணவகங்கள்…

    Continue Reading

  • மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு – ACTPnews.com

    மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு – ACTPnews.com

    மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று வாக்குபதிவின் போது…

    Continue Reading

  • மதுப்பிரியர்களே உஷாராயிருங்க : மே 1-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை – ACTPnews.com

    மதுப்பிரியர்களே உஷாராயிருங்க : மே 1-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை – ACTPnews.com

    குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், வள்ளலார் நினைவு நாள், மஹாவீர் ஜெயந்தி, உழைப்பாளர் தினம், மிலாடி நபி, மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நாட்கள், கோவில் பண்டிகைகள், உள்ளூர் திருவிழா காலங்களில் அவ்வப்போது உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அதே போன்று  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 21,22,23 ஆகய 3 தினங்கள் ஏற்கனவே டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மே 1-ம் தேதி  தொழிலாளர் தினத்தை…

    Continue Reading

  • ஈரான் போர், ஹார்மூஸ் ஜலசந்தி மூடல்: காண்டம் விலை 30% அதிகரிப்பு – ACTPnews.com

    ஈரான் போர், ஹார்மூஸ் ஜலசந்தி மூடல்: காண்டம் விலை 30% அதிகரிப்பு – ACTPnews.com

    ஈரான் மோதல் பெரும்பாலும் எரிசக்தி சந்தைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கம் தற்போது எதிர்பாராத வழிகளில் பல்வேறு தொழில்துறைகளிலும் பரவி வருகிறது. எரிபொருள் முதல் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரை, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் விலைகளை உயர்த்தி, அவை கிடைப்பது குறித்த கவலைகளை எழுப்புகின்றன; தற்போது ஆணுறைகள் போன்ற பொருட்கள்கூட இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் ஆணுறைகளை உற்பத்தி செய்யும் மலேசியாவைச் சேர்ந்த கரெக்ஸ் நிறுவனம், தனது விலைகளை 30 சதவீதம்…

    Continue Reading

  • தனிநபர் 4.5 லிட்டர் மது வைத்து கொள்ள விலக்கு: பாண்டிச்சேரிக்கு பொருந்தது, உயர்நீதிமன்றம் உத்தரவு  – ACTPnews.com

    தனிநபர் 4.5 லிட்டர் மது வைத்து கொள்ள விலக்கு: பாண்டிச்சேரிக்கு பொருந்தது, உயர்நீதிமன்றம் உத்தரவு  – ACTPnews.com

    மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆந்திர மாநிலத்திலிருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக, எளாவூர் சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தங்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,  தமிழ்நாடு அரசாணையின் படி 4.5 லிட்டர் வரை மதுபானத்தை தனிப்பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம் என்றும், தாங்கள் கொண்டு வந்த மதுபானம் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காகவே என்றும் எனவே இந்த  வழக்கை ரத்து செய்ய வேண்டும்…

    Continue Reading

  • ஆர்சிபி உடனான தோல்வி குறித்த கேள்வி.. ப்ரஸ் மீட்டில் டென்ஷனான குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ்.. | actpnews.com

    ஆர்சிபி உடனான தோல்வி குறித்த கேள்வி.. ப்ரஸ் மீட்டில் டென்ஷனான குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ்.. | actpnews.com

    Last Updated:May 27, 2026 5:56 PM IST வெள்ளியன்று நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அல்லது ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது கிளென் பிலிப்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் ஆர்சிபி அணியிடம் குஜராத் அணி படுதோல்வியடைந்தது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ் டென்ஷனாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி முதலில்…

    Continue Reading

  • பெட்ரோல் ரூ.10, டீசல் ரூ.12.50 விலை உயர்வு? மத்திய அரசு அதிர்ச்சி தகவல் – ACTPnews.com

    பெட்ரோல் ரூ.10, டீசல் ரூ.12.50 விலை உயர்வு? மத்திய அரசு அதிர்ச்சி தகவல் – ACTPnews.com

    ஈரான் போருக்கு மத்தியில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன் இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய தினம் கூட கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சில நாடுகளில் பெட்ரோல், டீசல் கடுமையாக விலை உயர்ந்தியுள்ளன.  ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின்…

    Continue Reading

  • விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம் – ACTPnews.com

    விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம் – ACTPnews.com

    நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறி உறவில் இருந்ததாக சந்தேகித்து, மன உளைச்சல் ஏற்பட்டது என குறிப்பிட்டிருந்தார்.  கடந்த நான்கு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்தும் தனித்தனியாகவே வாழ்ந்து வரும் நிலை உள்ளது…

    Continue Reading

  • ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – ACTPnews.com

    ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – ACTPnews.com

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழுக்கள் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. …

    Continue Reading

  • தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் முடிவு  – ACTPnews.com

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் முடிவு  – ACTPnews.com

    வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்துகிறார். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு QR Code மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என…

    Continue Reading

  • பெட்ரோல் ரூ 25, டீசல் ரூ.20 விலை உயருகிறது? எண்ணெய் நிறுவனங்கள் சூசக தகவல் – ACTPnews.com

    பெட்ரோல் ரூ 25, டீசல் ரூ.20 விலை உயருகிறது? எண்ணெய் நிறுவனங்கள் சூசக தகவல் – ACTPnews.com

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு சுமார் 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, தற்போதைய போர் பதற்றம் காரணமாக ஏப்ரல் இறுதியில் சராசரியாக 114…

    Continue Reading

  • வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடும் உயர்வு: உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு – ACTPnews.com

    வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடும் உயர்வு: உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு – ACTPnews.com

    ஈரான் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில், மே மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.…

    Continue Reading

  • மீண்டும் போர் பதற்றம் : ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நோ சொன்ன டிரம்ப்  – ACTPnews.com

    மீண்டும் போர் பதற்றம் : ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நோ சொன்ன டிரம்ப்  – ACTPnews.com

    அமெரிக்கா – ஈரான் இடையிலான 10 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தார். ஆனால் அவர் பாகிஸ்தான் இருக்காமல் சனிக்கிழமை ஈரான் திரும்பினார்.  இதன் பின்னர் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவார்த்தை ஈடுபட என்று ஈரான் அறிவித்ததுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த செல்ல…

    Continue Reading

  • மதுரை சித்திரை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழு  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் – ACTPnews.com

    மதுரை சித்திரை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழு  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் – ACTPnews.com

    மதுரை சித்திரை திருவிழா முதலில் மீனாட்சிக்கும், பிறகு அழகருக்கும் என மொத்தம் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெறும். 2026ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம்19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என மீனாட்சி திருவிழா முடிந்த பிறகு அழகர் திருவிழா தொடங்கும். அப்படி அழகர் கோயிலில் இருந்து புறப்படும் அழகரை பக்தர்கள் தோளிலேயே சுமந்து சென்று மதுரைக்கு வந்து ஆடி பாடி மகிழ்வித்து மீண்டும் அழகர் மலைக்கு அழைத்து செல்வது வழக்கம். …

    Continue Reading

  • 54 ஓவர்களில் 776 ரன்கள், 72 சிக்ஸர்கள்… வைபவ் சூர்யவன்ஷியின் ‘Unbelievable’ ஐபிஎல் 2026 டேட்டா! | Vaibhav Sooryavanshi | actpnews.com

    54 ஓவர்களில் 776 ரன்கள், 72 சிக்ஸர்கள்… வைபவ் சூர்யவன்ஷியின் ‘Unbelievable’ ஐபிஎல் 2026 டேட்டா! | Vaibhav Sooryavanshi | actpnews.com

    அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் மட்டுமே சூர்யவன்ஷிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இந்த சீசனில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு ‘மெய்டன் ஓவர்’ வீசியதோடு, அந்த ஓவரின் கடைசி பந்தில் அவரை அவுட்டும் செய்தார். சூர்யவன்ஷிக்கு எதிராக 12 பந்துகள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே தந்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ஸ்டிரைக் ரேட்டில் அவரை கட்டுப்படுத்திய ஒரே பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் தான். இவரைத்…

    Continue Reading

  • கேரளம் கம்யூனிஸ்ட் பின்னடைவு: ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்! – ACTPnews.com

    கேரளம் கம்யூனிஸ்ட் பின்னடைவு: ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்! – ACTPnews.com

    கேரளம் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், மீண்டும் கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.…

    Continue Reading

  • 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ள பிரத்யேக இணையதளம் – ACTPnews.com

    5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ள பிரத்யேக இணையதளம் – ACTPnews.com

    தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் மே 4-ம் தேதி காலை 8 மணி முதல் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து கீழ்காணும் இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள https://results.eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் சுற்று வாரியான நிலவரங்களும், முடிவுகளும் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும். இது தவிர…

    Continue Reading

  • 110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது  – ACTPnews.com

    110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது  – ACTPnews.com

    நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், புத்த துறவிகளின் பைகளில் ஒரு மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பைகளில் 5 கிலோ வரை பயங்கரமான போதைப்பொருளை வைத்திருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும், இலங்கையில் உள்ள புத்த கோயில்களில் இருந்த இளம்…

    Continue Reading

  • தேர்தலில் முறைகேடு முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: அடம் பிடிக்கும்  மம்தா பானர்ஜி  – ACTPnews.com

    தேர்தலில் முறைகேடு முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: அடம் பிடிக்கும்  மம்தா பானர்ஜி  – ACTPnews.com

    மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 207 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் சதியால் மாற்றப்பட்டவை என்றும், பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என்றும், அதன் உதவியுடன்தான் பாஜக இந்த முறைகேடுகளைச் செய்துள்ளது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சுமார் 90…

    Continue Reading

  • நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்: சச்சின், காலிஸ், முரளிதரனுக்கு ‘கிரிக்இன்போ’ உயரிய விருது! | actpnews.com

    நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்: சச்சின், காலிஸ், முரளிதரனுக்கு ‘கிரிக்இன்போ’ உயரிய விருது! | actpnews.com

    Last Updated:May 31, 2026 4:15 PM IST இந்த நூற்றாண்டின் சிறந்த 25 சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 3ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். சச்சின், அனில் கும்ப்ளே, டிவில்லியர்ஸ் மும்பையில் நடைபெற்ற கிரிக்இன்போ விருதுகள் (Cricinfo Honours) விழாவில், 21ஆம் நூற்றாண்டின் (2000-2025) மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின்…

    Continue Reading

  • புதிய முப்படை தலைமை தளபதியாக தமிழர் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம் – ACTPnews.com

    புதிய முப்படை தலைமை தளபதியாக தமிழர் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம் – ACTPnews.com

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “ ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சௌகான், 2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். அதைதொடர்ந்து புதிய முப்படை தலைமை தளபதி பதவியேற்க உள்ளார்.  டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக்…

    Continue Reading

  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம் – ACTPnews.com

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று  முதல் விண்ணப்பிக்கலாம் – ACTPnews.com

    தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், 2026-27 கல்வி ஆண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கப்பட்டது. அதனையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மே 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனநகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள…

    Continue Reading

  • மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு  – ACTPnews.com

    மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு  – ACTPnews.com

    மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக தனி பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியை பிடித்தது. இதை தொடர்ந்து, பா.ஜ., தலைமையில் அங்கு ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்தன. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியை சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.  பா.ஜ., சார்பில் மேற்கு வங்கத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில் இன்று (மே 09) புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கட்டாவில் உள்ள…

    Continue Reading

  • 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவீதம் தேர்ச்சி, ஈரோடு முதலிடம்  – ACTPnews.com

    12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவீதம் தேர்ச்சி, ஈரோடு முதலிடம்  – ACTPnews.com

    தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர். பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய…

    Continue Reading

  • அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நீடிக்கிறது: ஈரான் ராணுவ அறிவிப்பால் பதற்றம் – ACTPnews.com

    அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நீடிக்கிறது: ஈரான் ராணுவ அறிவிப்பால் பதற்றம் – ACTPnews.com

    அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையான அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.  ஆனால், அமெரிக்கா இதனை ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பல வியூகங்களை வகுத்து வருகிறது. அமெரிக்காவிற்கு…

    Continue Reading

  • விகடனின் ‘லிங்கம்’ வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் – மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்! \ Vikatan Televistas Lingam webseries to be Streamed on Jio Hotsar | actpnews.com

    விகடனின் ‘லிங்கம்’ வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் – மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்! \ Vikatan Televistas Lingam webseries to be Streamed on Jio Hotsar | actpnews.com

    விகடன் டெலிவிஸ்டாஸின் “லிங்கம்’ வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த வெப்சீரிஸை லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய பாரதியும், பூர்ணிமா ரவியும் நடித்திருக்கிறார்கள். போலீஸ் ஆசையுடன் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ரௌடிசப் பாதை பக்கம் திரும்புகிறது என்பது தான் வெப்சீரிஸின் கதைக்களம். இதில் கபடி விளையாட்டு மையப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘போலீஸ் ஆகணும்ங்கிறது சின்ன வயசுல இருந்து மனசுல கிடக்கற ஆசை’…

    Continue Reading

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports