Author: Sanjuthra
-

டில்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து: 20 பேர் பலி பலர் கவலைக்கிடம் – ACTPnews.com
தெற்கு டில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.காலை 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வேகமாகப் பரவியதால் தீயை அணைக்கவும் தீயில் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதுவரை இந்த விபத்தில் 20…
-

”சேகர்பாபு நீ பாவம் பண்ணிருக்க..” – மேடையில் ஆதங்கப்பட்ட ஆ.ராசா..! – ACTPnews.com
சென்னை அம்பத்தூரில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுப் பார்த்தது. இந்த தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டதே என நினைக்கிறார்கள். ஒரு அறிவாளியிடம் தோற்றால் பரவாயில்லை. அரசியல் ஆளுமை கிட்ட தோற்றால் பரவாயில்லை. உள்ளபடியாக ஒரு மாற்றம் இருந்தால் பரவாயில்லை. இப்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது என சொல்கிறார்கள். என்ன கிழிக்கப் போகிறீர்கள்.…
-

மகளிர் உரிமை தொகை 80 லட்சம் பெண் பயனாளிகள் அதிரடி நீக்கம் – ACTPnews.com | actpnews.com
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்களில் இந்த திட்டத்தை வேறு வேறு பெயரில் தொடங்கின. கர்நாடக மாநிலத்தில் ‘Gruha Lakshmi Scheme’ என்கிற பெயரில் மாதம் ரூ. 2000 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி மாநிலத்தில் ‘Mahila Samriddhi Yojana’ என்கிற பெயரில் மாதம் ரூ. 2500 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதுவே அசாம் மாநிலத்தில்…
-

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா – ACTPnews.com | actpnews.com
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) தலைமை மதகுரு பொறுப்பேற்றாா். இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மோஜ்தபா கமேனி படுகாயமடைந்தாக கூறப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் ஈரான் அரசு இதனை உறுதி செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், கமேனி உயிருடன்…
-

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா – ACTPnews.com | actpnews.com
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) தலைமை மதகுரு பொறுப்பேற்றாா். இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மோஜ்தபா கமேனி படுகாயமடைந்தாக கூறப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் ஈரான் அரசு இதனை உறுதி செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், கமேனி உயிருடன்…
-

மிகக் கனமழை எச்சரிக்கை – தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் – மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன? | actpnews.com
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு…
-

ஸ்டைல் இளவரசியான கிம் ஜாங் உன்னின் மகள்.. வியக்கும் Gen-Z கொரியன்ஸ்..! – Kumudam | actpnews.com
வடகொரியாவில் சமீப காலமாக அதிபர் ‘கிம் ஜாங் உன்’ எங்கு சென்றாலும், அவருடன் கூடவே ஒரு சிறுமியும் காணப்படுகிறார். அந்தச் சிறுமி வேறு யாருமல்ல… கிம் ஜாங் உன்னின் மூத்த மகள் ‘ஜூ ஏ’தான்! வயது வெறும் 13 மட்டுமே! வடகொரியாவை வழிநடத்தப் போகும் அடுத்த தலைவராக, அதிபரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் ‘ஜூ ஏ’, சர்வதேச அளவிலும் ஃபேஷன் விஷயத்தில் கவனத்தை ஈர்க்கிறார். ஜூ ஏவின் நடை, உடை, அலங்காரம், ஹேர் ஸ்டைல் ஆகியவை ஃபேஷன்…
-

காங்கிரஸிற்கு ஒரு ராஜ்யசபா சீட்… Confirm செய்த விஜய்..! – Kumudam
நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றதால், அவர் தனது ராஜ்யசபா…
-

RCB – குஜராத் அணிகள் மோதும் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி.. மழையால் ஆட்டம் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 6:09 PM IST லீக் சுற்றில் இதே அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபியை வீழ்த்திய அனுபவம் குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி ஐபிஎல் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு…
-

ஆப்கன் ODI கிரிக்கெட் தொடர்… விராட் கோலி விலகல்? – என்ன காரணம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 05, 2026 7:41 AM IST ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. News18 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 31ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அந்தப் போட்டியில்…
-

”தமிழண்டா இயக்கத்தின் நோக்கம் இதுதான்!” – ‘பொருநை’ ஆவணப்பட இயக்குநர் |”This is the objective of the ‘Tamilanda’ movement!” — Director of the ‘Porunai’ documentary
ஹிப் ஹாப் ஆதியின் ‘தமிழண்டா இயக்கம்’ சார்பாக நாங்களும் எங்களுடைய குழுவினரும் சுமார் ஓராண்டு காலம் பொருநை நதிக்கரையோரப் பகுதிகளில் தங்கி இந்த ஆவணப் படத்திற்கான பணிகளை மேற்கொண்டோம். ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று முக்கிய வரலாற்றுத் தளங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வுகள் அனைத்தையும் இந்த பொருநை ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். அகழ்வாய்வுக் குழிகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அவை எத்தனை அடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்படுகின்றன, தொல்லியல் அறிவியலின்…
-

மைதானத்திற்குள் நுழைந்த ஷேக், ரத்து செய்யப்பட்ட கோல் | Sheikh Fahad 1982 World Cup France vs Kuwait Controversy
கால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப்படியொரு நம்பமுடியாத சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையில் அரங்கேறியது. குழப்பத்தை ஏற்படுத்திய விசில் சத்தம்! அது பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான லீக் போட்டி. ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஏற்கனவே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பிரான்ஸ்…
-

‘தமிழன்’ ஷூட்டிங்கில் இயக்குநரிடம் விஜய் சார் சொன்ன விஷயம் மறக்க முடியாதது- நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர் | actor m.s.bhaskar shares his experience about vijay combination incidents exclusively
முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யுடன் “திருப்பாச்சி’, ‘சிவகாசி’ உள்பட பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். நேற்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து எம்.எஸ்.பாஸ்கரிடம் பேசினால்… நெகிழ்கிறார் மனிதர். எம்.எஸ்.பாஸ்கர் “ அவரோடு (விஜய்) பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கேன். அதனால மரியாதை நிமித்தமாகச் சந்திச்சேன். அவங்க அம்மாவை (ஷோபா சந்திரசேகர்) நான் ‘அக்கா..’ என்றும்.. அப்பாவை (எஸ்.ஏ.சந்திரசேகர்)’மாமா..’ என்றும்தான் அன்போடு கூப்பிடுவேன். ‘சட்டம்…
-

SPB 80: "SPB பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!" – உருகும் இளையராஜா
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80-ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணி என்பது தமிழ்த் திரையிசையில் முக்கியமான வெற்றிக் கூட்டணி. இளையராஜா இசையில் அதிக ஹிட் பாடல்களைப் பாடியவரும் எஸ்.பி.பி-தான். எஸ்.பி.பி-யின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான நட்பு, தமிழ்த் திரையிசைக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றி உருக்கமாகப் பேசி ஒரு காணொளியை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இளையராஜா. SPB – Ilaiyaraaja அந்தப் பதிவில் இளையராஜா, “பாலா இல்லாதது என் மனதில்…
-

“ஜோதிகா பற்றி நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது!” – சூர்யா |”What I have always known about Jyothika, the whole world is seeing now!” — Suriya
அந்தப் பதிவில் அவர், “தாமதமான பதிவுதான், இருந்தாலும் இதைச் சொல்ல வேண்டும். ‘சிஸ்டம்’ திரைப்படம் சுவாரஸ்யமான மற்றும் நம்மை கட்டிப்போடும் திரைப்படம். அழுத்தமான நடிப்போடும், பல அடுக்குக் கதைக் களத்தோடும் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள். சோனாக்ஷி சின்ஹா, நேஹாவாக நடித்திருந்தது மிகவும் பவர்ஃபுல்லாக இருந்தது. ஜோதிகா அவர் நடித்த கதாபாத்திரமாகவே முற்றிலும் மாறிவிட்டதை பார்த்தேன். நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது. உங்களது மௌனம் வார்த்தைகளை விட சத்தமாகப்…
-

Rajinikanth: உழைப்பாளி டு ஜெயிலர்- 2, 30 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டிக்கு என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!- actor rajinikanth visit ooty after 30 years.
நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக ஊட்டிக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமாக ஊட்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார். ரஜினிகாந்த்தின் இந்தத் திடீர் வருகை குறித்து நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இவரைச் சந்தித்துள்ளனர்.…
-

1974 உலகக்கோப்பையின் விநோத நொடி: பிரேசில் ஃப்ரீகிக்கை உதைத்த ஜாயிர் வீரர்! | zaire mwepu ilunga 1974 world cup free kick
உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு நிகழ்வுதான் 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் ஜாயிர் (Zaire) அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரங்கேறியது. திடுக்கிட வைத்த அந்தத் தருணம்! போட்டி பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்தது. ஜாயிர் அணி ஏற்கனவே 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. அப்போது பிரேசில் அணிக்கு…
-

Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி… இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 03, 2026 1:17 PM IST Team India | இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. முல்லன்பூரில் வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காணவுள்ளது. News18 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் காணவுள்ள இந்திய அணி வீரர்கள், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சென்றடைந்தனர். ஐபிஎல் போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் வழக்கமான சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பியுள்ள இந்திய அணி,…
-

கத்தார் ஜெர்சியில் களம்காணும் நம் மண்ணின் மைந்தன்! | Tahsin Mohammed Jamshid Qatar Football World Cup
கண்ணூரிலிருந்து கத்தார் வரை… தஹ்சினின் குடும்ப வேர்கள் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளன. தோஹாவில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை ஜம்ஷித், கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி்யைச் சேர்ந்தவர். தாய் ஷைமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். 1996-ல் கத்தாருக்குக் குடிபெயர்ந்த இந்த குடும்பத்தில் பிறந்த தஹ்சின், அந்நாட்டின் கால்பந்து கலாச்சாரத்திலேயே வளர்ந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்காக கால்பந்து விளையாடிய திறமையான வீரரான அவரது தந்தை, மகனின் பயணத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். கத்தாரின் குடியுரிமை பெற்ற தஹ்சின், அந்நாட்டின் பல…
-

“விஜய் சார் முதல்வராக வந்துடுவார்னு எங்களுக்கு முன்னரே தெரியும். இது மிகப்பெரிய மேஜிக்” – லிங்குசாமி director lingusamy intiated haiku book release function in chennai
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 2ம் ஹைக்கூ கவிதைப் போட்டியினை நடத்தி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று அதன் ஐந்தாம் ஆண்டுக்கான விழா தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், உமறுப்புலவர் வாரிசுகள் இலக்கிய அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் பி.ருமைதீன் ஃபைஜி, வேடியப்பன், கவிஞர் அ.வெண்ணிலா, பிருந்தாசாரதி எனப் பலரும்…
-

அந்த குழந்தை நட்சத்திரமா இவர்?!; ஆச்சரியப்பட்ட ஜெயராம் – நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பரத்! |panchathanthiram-child-actor-bharath-reunion-with-jayaram
பரத் பேசுகையில், “குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் திரைப்படமான ‘நைனா’ படத்துல நான் ஜெயராம் சார்கூட நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒரு காட்சியில யானை வச்சு ஒரு சீன் எடுக்கணும். ‘ஹீரோ ஜெயராம் சார் படப்பிடிப்புக்கு அவருடைய யானையைக் கொண்டு வர்றேன்’னு சொன்னதாக சொன்னாங்க. அப்போ நான் ‘யானையை ஒருத்தர் வளர்ப்பாங்களா’னு ஆச்சர்யமாக பார்த்தேன். பிறகு, ஜெயராம் சாருக்கும், ஊர்வசி ஆன்ட்டிக்கும் மகனாக நான் நடிச்சிருக்கேன். ஜெயராம் சார் இன்னும் நிறைய படங்கள்ல ஹீரோவாக நடிக்கணும்.…
-

“ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்!” – சந்தீப் கிஷன் |”Jason Sanjay is a very hard worker!” — Sundeep Kishan
அந்தப் பேட்டியில் அவர், “சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். அவரும் அவருடைய குழுவும் நீண்ட காலமாக இந்தப் படத்திற்காக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இதன் ஆரம்பகட்ட வேலைகளையும் எடிட்டிங் வேலைகளையும் மிக விரிவாகச் செய்தார்கள். சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரின் அந்தப் பொறுமை என்னைப் பிரமிக்க வைத்தது. 25 வயதே ஆன ஒரு நபர், ஒரு படத்தை இயக்கும்போது பொறுமையாகவும், அமைதியாகவும், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. Jason…
-

அந்தரன்: “பிரஜின் உடைஞ்சு அழுகிறதைப் பார்த்திருக்கேன், ரொம்ப வருஷ கனவு இது”-சாண்ட்ரா எமோஷனல் | sandra speech at Prajin Andharan Press Meet
பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’. சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா, “ரொம்ப வருஷதுக்கு அப்புறம் ஒரு மேடைக்கு வந்திருக்கேன். இது மிகச்சிறந்த ஒரு தருணம். நாங்க எவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியும். நிறைய மேடையில பிரஜினைப் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் நடிக்கும்போது…
-

“லிங்குசாமியிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் சிலருக்கு மட்டுமே தெரியும்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”The noble humanity possessed by Lingusamy is clearly visible to only a select few!” — A.R. Murugadoss
என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார். சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும். கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று…
-

“விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார்!” – லிங்குசாமி |”Vijay Sir is very much in sync with the times!” — Lingusamy
அவர் ‘போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்’ என்று சொன்னார். பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்கிட்ட தவெக-வுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னாங்க. ‘எல்லோரும் தவெக-வுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே’னு அப்போவே என்னமோ நடக்கப் போகுது என்று தோணுச்சு. இன்னைக்கு இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கு. அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு…
-

எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம் – என்ன நடந்தது? |On the set of a film starring S. J. Suryah, a tragic accident occurred during shooting
எஸ்.ஜே. சூர்யாவின் “கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார். வெடி விபத்து | represental images இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரம்பூர் பின்னி மில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்று (ஜூன்.3) அதிகாலை…
-

IPL 2026 Final : பவுலிங்கில் மிரட்டிய ஆர்சிபி.. இறுதிப் போட்டியில் 155 ரன்கள் சேர்த்தது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 9:37 PM IST குஜராத் அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜாஸ் பட்லர் அவுட் ஆன காட்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 156 ரன்கள் …
-

Vaibhav Sooryavanshi | பள்ளியில் படிக்கும் வயதில்… ஆராய்ச்சி பாடமாய் மாறிய கிரிக்கெட் உலகின் ‘அதிசயப் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி…! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 03, 2026 7:44 AM IST 15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. News18 15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனின் அதிக…
-

உலகக் கோப்பையின் மர்மப் பக்கங்கள்: திருட்டு, மீட்பு, சேதம்! | FIFA World Cup Trophy Mysterious History Theft
இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார். ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும்…
-

கருப்பு: “அதே அன்பு, அரவணைப்பு, கனிவு” – முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வெளியான…
-

“மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் ‘மஞ்சணத்தி’”- மாரிசெல்வராஜ் | mariselvaraj about ilayaraja and manchanathi movie
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “பைசன் காளமாடன்’. தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘பைசன் காளமாடன்’ படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். Manjanathi – Mari Selvaraj- ilayaraja இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது…
-

Vaibhav Sooryavanshi : கெயில், சாய் சுதர்சன் சாதனைகள் காலி! ஐபிஎல் 2026 தொடரில் ஆரஞ்ச் கேப்பை தட்டிப்பறித்த இளம் புயல்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 10:33 PM IST நடப்பு ஐபிஎல் தொடரில் 237.31 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்துள்ள வைபவ், ஒட்டுமொத்தமாக 72 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 776…
-

1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை! | 1950 FIFA World Cup Indian football mystery
இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது. ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை…
-

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் – யார் இவர்?
ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையே சேரும். தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பைகளை வென்று, ஆர்சிபி அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆண்டி பிளவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். Rcb அவர் உள்ளே வந்த உடனே, ஆர்சிபி-யின் பழைய சிந்தனை முறையை முழுமையாக மாற்றியமைத்தார்.…
-

“சத்யேந்திரா போன்ற கலைஞர்களின் வீட்டு வாடகையை ஆறு மாதங்களுக்கு நாங்களே செலுத்தினோம்!” – பகு |”We ourselves paid the house rent for artists like Satyendran for six months!” — Bagu
இது தொடர்பாக நம்மிடையே பேசியவர், “இந்தச் சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழும் மனிதர்களை நாம் எந்தளவுக்கு மதிக்கிறோம் என்ற பெரிய கேள்வி எனக்குள் இருக்கிறது. அவர்களைப் பார்த்ததும் நலம் விசாரிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் இவரைப் போன்றவர்களின் பரந்த சிந்தனையையும் அறிவையும் பார்த்து ஈர்க்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக இவருக்கு நல்ல ஆதரவைத் தந்தார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு, எங்களது அமைப்பு சார்பாக மறைந்த இயக்குநர் அருள்மொழி நினைவாக இவருக்கு…
-

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையராஜா – மாரி செல்வராஜ் கூட்டணி – வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!
மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தபோதே, தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மிகுந்த பொருட்செலவில் பெரிய திரைப்படமாக அது உருவாகும் எனக் கூறப்பட்டது. Manjanathi – Mari Selvaraj…
-

“அன்றைய காலகட்ட அரசியலால் ‘பருத்திவீரன்’ படத்துக்காக எனக்கு விருது கிடைக்கல” – இயக்குநர் அமீர் | director ameer speech at book event about paruthiveeran movie
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள `ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு விழா நேற்று (மே.31) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியபோது, “என்னுடைய சினிமா ஆர்வத்துக்கு எனது குடும்பம் ஆதரவு தரவில்லை என்றாலும், தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள். மேலும் அவர்கள் யாருமே எதாவது நடிகரைப் பார்க்க வேண்டும் என்று இதுவரை கேட்டதே இல்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் நடக்காமல் போனதில் வருத்தம் உண்டு. ‘Cyprus’ விழாவில் ராம் படத்துக்காக நான் விருது வாங்கினேன்.…
-

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்! |Abhishan Jeevinth to act alongside Kannada Superstar Shivarajkumar!
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தோடு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஹார்ட் பீட்’ போன்ற திரைப்படம் மற்றும் சீரிஸ்களில் நடித்துப் பலருக்கும் பரிச்சயமான யோகலக்ஷ்மி, பிக் பாஸ் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். Abishan Jeevinth – Shiva Rajkumar Movie இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகராக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே கன்னட சினிமாவின் உச்ச நடிகரான…
-

“‘LIK’ படத்தை எடுப்பது கடினமாக இருந்தது, ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது!” – விக்னேஷ் சிவன் |”Making film ‘LIK’ was difficult; releasing it was even harder!” — Vignesh Shivan
இதுபோன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைப் பலர் பார்ப்பதில்லை. இதை எடுப்பது கடினமாக இருந்தது. அதை ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது. அத்தனை சவால்களையும் தாண்டி வந்த பிறகு, இது இப்படி முடிவடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதலில் வெளியானபோது ஏற்றுக்கொள்ளப்படாமல், பின்னாளில் கொண்டாடப்பட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் மட்டுமே இப்போது எனக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது. நேற்று, ஒரு இயக்குநர் என்னிடம் ஒரு…
-

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" – தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைய பிள்ளைகளுக்கு படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர்மரணத்துக்கு ஒரே காரணம், காதல்…
-

தோல்வி குறித்து குஜராத் கேப்டன் கில் பேசியவை | Gujarat Captain Gill Speech
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், “180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும்…
-

GT vs RCB: ‘நான் கனவிலும் இதை நினைக்கவில்லை, இந்த கோப்பை.!’ -ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி |Rajat patidar post match speech after GT vs RCB final
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரஜத் பட்டிதர்,” இந்த வெற்றி மிகவும் அற்புதம் வாய்ந்தது. நாங்கள் இந்த மைதானத்திற்கு வந்தபோதே கடந்த ஆண்டின் பல நினைவுகள் மனக்கண்ணில் வந்து போயின. இப்போது என் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை, அவ்வளவு நன்றாக உணர்கிறேன். எங்களிடம் மிகத் தெளிவான திட்டமிடல் இருந்தது. ஆர்சிபி அணியின் கேப்டனாகி, கோப்பையை உயர்த்துவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது என் தலையெழுத்தில் எழுதப்பட்ட ஒன்று என்றுதான் நினைக்கிறேன், இதற்கு நான்…
-

IPL 2026 : குஜராத்தை அணியை தொடர்ந்து 2ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி.. ரசிகர்கள் உற்சாகம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 11:52 PM IST 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணியில் கோலி 75 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனான ஆர்சிபி தொடர்ந்து 2 ஆவது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 155…
-

‘பென்ஸ்’ படத்தில் இணைந்த முன்னணி நடிகர்: லோகேஷின் புதிய அப்டேட்! | Lokesh Kanagaraj has announced that actor Ravi Mohan has joined his LCU.
லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் “பென்ஸ்’. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். கடந்த ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் அளித்த பேட்டி ஒன்றில், ‘பென்ஸ்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து மற்றொரு முன்னணி நட்சத்திரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது யார்…
-

Vaibhav Sooryavanshi : சிறுவனுக்கு எதிராக ‘பாடி-லைன்’ பந்துவீச்சா? – குஜராத் அணி மீது இர்பான் பதான் கடும் விமர்சனம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 30, 2026 2:34 PM IST இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 5 சீசன்களில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 (IPL 2026) கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 2) குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் நேற்று மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…
-

‘அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!’ – சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL
கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்! போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார். “இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை…
-

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' – இறுதிப்போட்டி குறித்து கில்
ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத்…
-

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!
ராஜேஸ்வரி “‘திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல முரளி ராமசாமி அணியில தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன். பொதுக்காசை எடுத்து மீட்டிங்னு மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான்.…
-

“இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில்..” – அஜித் |”At this moment, as we attempt to come to terms with this immense loss…” — Ajith
அவர்கள், “எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85-வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/