தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி கல்யாணம் ஆகிப்போனது மறந்து “இசைக்கு காபி கொண்டு வா” என்று கூப்பிட, பரணி காபியைக் கொண்டு வந்து கொடுக்க, “நீ கொடுக்கிற காப்பியை குடிக்க மாட்டேன்” என்று தட்டி விடுகிறான். 
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் இசக்கி முத்துப்பாண்டிக்கு காபி எடுத்துக் கொண்டு வைக்க, “ரத்னா இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்க, நீ எல்லாம் எனக்கு காபி கொண்டு வரியா” என்று திட்டி அனுப்புகிறான். பிறகு பாக்கியம் “என்ன ஆச்சு, என்ன சொன்னான்?” என்று கேட்க இசக்கி நடந்த விஷயத்தை சொல்கிறாள். 
“என்ன பண்றது பொம்பளைங்க வாழ்க்கையே இப்படித்தான் எனக்கும் பிடிக்காமல் தான் இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது. அதே மாதிரி தான் போகப் போக எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதல் சொல்கிறாள். “என் புருஷனை விட உன் புருஷன் நல்லவன் தான். அவனை எப்படியாவது அவங்க அப்பாக்கிட்ட இருந்து பிரிச்சுடு, அப்புறம் எல்லாம் நல்லபடியா மாறும்” என்று அட்வைஸ் கொடுக்க, இதை பாண்டியம்மா பார்த்து விடுகிறாள். 
இந்த விஷயத்தை சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டியிடம் சொல்ல, “அவர் அப்படித்தான் என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு” என்று ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறார். அப்படியே மறுபக்கம் சண்முகம் சூடாமணியை வந்து ஜெயிலில் சந்தித்து இசக்கிக்கு கல்யாணமான விஷயம், பஞ்சாயத்தில் நடந்தது என அனைத்தையும் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.
“உன்னை நம்பி என் பொண்ணுங்கள விட்டுட்டு வந்தேனே! என் முகத்திலேயே முழிக்காத போடா!” என்று கோபப்பட்டு கிட்டி அனுப்பி விடுகிறார். இதனால் சண்முகம் மனம் உடைந்து போகிறான். வீட்டில் சண்முகத்தை காணாததால் எல்லோரும் பதறி போய் தேடத் தொடங்குகின்றனர். பரணிக்கும் தகவல் கொடுக்க அவளும் அதிர்ச்சியாகி சண்முகத்தைத் தேடி அலைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Raayan: தனுஷின் 50 ஆவது படம் ‘ராயன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!
Vanangaan Teaser: சர்ச்சையை கிளப்ப தயாரான பாலா.. அருண் விஜய்யின் “வணங்கான்” டீசர் இதோ!

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed