<p>ஆப்கானிஸ்தானில் ஜெபக் மாவட்டத்தில் உள்ள டோப்கானா பகுதியில் உள்ள உயரமான மலைப் பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கியதாக அம்மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. கரன், மஞ்சன் மற்றும் ஜிபாக் மாவட்டங்களை ஒட்டியுள்ள மலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், நேற்று இரவு ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்துள்ளது. இந்நிலையில் தான் அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் இந்திய பயணிகள் பலர் இருந்ததாக கூறப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாக தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை எதுவும் தெரியவில்லை.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports