Vijayadharani: காங்கிரஸால் கிடைத்த எதுவும் வேண்டாம்.. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற விஜயதரணி செயல்பட்டு வந்தார். இதனிடையே கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவரை காங்கிரஸ் கட்சி பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் பேச முடியவில்லை என கூறப்பட்டது.  மேலும் விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாகவே கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது. மேலும் படிக்க

Train Cancelled: சென்னை மக்களே கவனிங்க.. 44 மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து!

சென்னையில் முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் மின்சார ரயில்களின் பங்கு என்பது அளப்பறியது. குறைவான கட்டணத்தில் சிரமமின்றி எளிதாக பயணம் செய்யும் வகையில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குறைந்த கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் – சென்னை கடற்கரை, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை, திருமால்பூர் – சென்னை கடற்கரை, திருவள்ளூர், ஆவடி, வேளச்சேரி என பல வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் – தமிழகத்தை குறிவைக்கும் பாஜக – மார்ச் 4 பிரதமர் மோடி சென்னை வருகிறார்..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தமிழகத்தை குறிவத்து தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக, மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதே நேரத்தில் அன்றைய தினம் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பரப்புரை கூட்டத்தை நடத்த தமிழக பாஜவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் படிக்க

Rain Alert: தென் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…நாளைய நிலவரம் என்ன? … வானிலை தகவல்!

இன்று ( பிப்ரவரி 25) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

TN Govt: தென்மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி – வெள்ள நிவாரணமாக ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும். மேலும் படிக்க

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed