Puducherry Budget Chief Minister Rangasamy presents the interim budget for the year 2024-25

புதுச்சேரி சட்டப்பேரவை புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு..

1 minute

Read Time


புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஒரு நாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து தேதி குறிபிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்
இந்த நிலையில், நாடளுமன்ற தேர்தல் வருவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற நாளை காலை 9.45 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு
கடந்த சிலதிங்களுக்கு முன் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது…. புதுச்சேரி சட்டப்பேரவை 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான முன்னளி மானிய திட்ட முன் வரைவு பேரவையில் முதல்வர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும். கூடுதல் நிதிக்கான செலவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
நாடளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். புதுச்சேரியிலும் இடைக்கால பட்ஜெட்தான். 2023-24ம் நிதியாண்டுக்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. எத்தனை நாட்கள் பேரவை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் காண

Source link

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports