<p>கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது. </p>
<h2><strong>பில்கிஸ் பானோ வழக்கில் எஸ்சியின் முக்கிய மேற்கோள்கள்</strong></h2>
<p><strong>1.</strong>தண்டனை என்பது ஒருபோதும் பழிவாங்கலுக்கானது அல்ல, சீர்திருத்தத்திற்கானது. குற்றவாளியை சீர்திருத்துவதற்கான கோட்பாடுதான் தண்டனை. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் நோக்கம் பூர்த்தி அடைந்து அவர் தனது தவறினை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டால் அவரை விடுவிக்கவேண்டும் என்பதுதான் சீர்திருத்தக் கோட்பாட்டின் இதயம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. </p>
<p><strong>2.</strong> பாதிக்கப்பட்டவரின் உரிமைகளும் முக்கியமானது. ஒரு பெண் எப்போதும் மரியாதைக்கு தகுதியானவர். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிப்பதை அனுமதிக்க முடியுமா? இவைதான் எழும் பிரச்சினைகள். "ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவை மேற்கோள் காட்டி நீதிபதி கிருஷ்ண ஐயர், குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து ஆண்கள் வெளிவரவே இல்லை" என்று நீதிபதி நாகரத்னா கூறியதாக கூறினார். </p>
<p><strong>3.</strong> குற்றம் நடந்த இடம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட இடம் ஆகியவை பொருத்தமானவை அல்ல. குற்றவாளியை விசாரித்து தண்டனை விதிக்கப்படும் அரசை உரிய அரசாக நடத்துவதே நாடாளுமன்றத்தின் பண்பாகும். குற்றம் நடக்கும் இடத்தை விட, விசாரணை நடக்கும் இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.</p>
<p><strong>4.</strong> குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்ட மாநிலத்தினைச் சேர்ந்த அரசுதான் மன்னிப்பு வழங்குவதற்கு பொருத்தமான அரசு. குற்றம் நடந்த அரசு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவது குறித்தோ மன்னிப்பு வழங்குவது குறித்தோ முடிவினை எடுக்க குற்றம் நடந்த மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. </p>
<p><strong>5.</strong> ரிட் மனுவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உண்மைகளை மறைத்து குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்டு, அவர் தவறான அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு குறித்து குஜராத் அரசு எதுவுமே கருத்து தெரிவிக்கவில்லை . ஆனால் குற்றவாளிகளின் ரிட் மனு சாட்சியங்களை நசுக்கியது, மேலும் வழக்கினை தவறாக வழிநடத்தும் நோக்கில் பொய்யான உண்மைகளை உருவாக்கியது உள்ளிட்ட குற்றவாளிகளின் நடவடிக்கையை குஜராத் மாநில அரசு பரிசீலிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது. அதேபோல் " குஜராத் மாநில அரசு மே 13, 2022இல் வழங்கிய தீர்ப்பு தவறானது. </p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
three card poker spelen my web page … casino bennebroek (https://Avngroup.cordenbondig.nl/)
populairste krasloten app Here is my site: beste online casino s
blackjack breda Here is my site; betrouwbaar casino site nederland lage inzet – Marquis –
tips dinheiro de apostas online apostas para hoje
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports























legaal beste Casino zaandam voor belgen