சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 13) எபிசோடில் நந்தினியை போலீஸ் உள்ளே மீண்டும் அழைத்து செல்ல கதிர் அவளை அழுது கொண்டே ஆறுதல் சொல்லி அனுப்புகிறான். அவர்கள் நால்வரையும் எப்படி வெளியே எடுப்பது என்பது குறித்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆதிரை போன் செய்து ஒரு இடத்திற்கு வரச்சொல்கிறாள். சாரு பாலாவை சந்தித்து பேசுகிறார்கள். அவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறுகிறார். இருப்பினும் குணசேகரனை சமாதானம் செய்து கேஸை வாபஸ் வாங்க வைக்க சொல்கிறார்.

நந்தினி கதிர் தன் மீது காட்டிய அன்பை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறாள். அவர்களோடு இருக்கும் போது வெறுப்பை கொட்டிவிட்டு இப்போது எதற்கு இத்தனை பாசம் காட்ட வேண்டும். இந்த சமயத்தில் அவர்களோடு இருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டு பேசுகிறாள். அவள் பேசியதை கேட்டு ஜனனி, ஈஸ்வரி மற்றும் ரேணுகா வருத்தப்படுகிறார்கள். தர்ஷினியை கடத்தி வைத்திருந்த ரவுடிக்கு ஒருவர் போன் செய்து தர்ஷினி தப்பித்ததை பற்றி விசாரித்து திட்டுகிறார். அவள் உயிருடன் திரும்ப கூடாது என ரவுடிக்கு ஆர்டர் போடுகிறார். கதிர், சக்தி மற்றும் ஞானம் வீட்டுக்கு சென்று குணசேகரனை சந்தித்து கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்க அவர் வீம்பாக என்னுடைய மகளை காணவில்லை அதற்காக தான் நான் கேஸ் போட்டேன் என சொல்லி வாபஸ் வாங்க மறுக்கிறார். மேலும் நாளைக்கு அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என சொல்லி சஸ்பென்ஸ் ஒன்றை வைக்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜீவானந்தம், ஈஸ்வரிடம் நான் சொல்லும் விஷயங்களை மட்டும் கோர்ட்டுல சொல்லுங்க என சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
 
வீட்டில் குணசேகரனிடம் வந்து வாபஸ் வாங்குவது பற்றி சக்தியும் கதிரும் கேட்க “காலையிலேயே பிரச்சினை பண்ண வேணாம் என சொல்லு” என குணசேகரன் விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறார். “தேவையில்லாமல் வீட்டு பொம்பிளைகளை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பீட்டு, எல்லாம் வேலையையும் நீங்க பார்த்துப்பிட்டு இப்போ எங்களை வந்து பிரச்சினை பண்றோம்னு சொல்றீங்களா நீங்க?” என சக்தி கேட்டதும் அவனை பார்த்து குணசேகரன் முறைக்கிறார்.  
 

குணசேகரனுக்கு ஆதரவாக விசாலாட்சி அம்மா பேச “இவரை நியாயப்படுத்துறதுக்காக இல்லாத காரணத்தை எல்லாம் தேடிகிட்டு இருக்க. இப்போ உடைச்சு சொல்றேன் கேட்டுட்டு நல்லா சந்தோஷபட்டுக்கோ” என சொல்லி நந்தினியையும் மற்றவர்களையும் நடக்க கூட முடியாத அளவுக்கு அடித்து போலீஸ் சித்தரவதை செய்வதை பற்றி விசாலாட்சி அம்மாவிடம் கதிர் சொல்ல அதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். அழுது கொண்டே கதிர் வெளியே சென்றுவிடுகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ.

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Компания [url=https://i-tec.ru/]ай-тек[/url] российский интегратор мультимедиа­решений для бизнеса, органов власти и образования. Ай-тек влияет на ряд аспектов, включая коммерцию и повседневное…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed