வரும் 28 ஆம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர் பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக குழுவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports