Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' - ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஈரான் மீது இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்களால் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.விரக்தி

ஈரான் போர்

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிக் நகரில், திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீடு ஒன்றின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததில், ஒரு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திருமண விழாவை குறிவைத்து அப்பாவி பொதுமக்களை கொல்வது, மனித உரிமைகளின் போலி பாதுகாவலர்களின் விரக்தியை காட்டுகிறது” என்று ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், “அமெரிக்க இராணுவம் ஒருபோதும் பொதுமக்களை குறிவைப்பதில்லை, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) போலல்லாமல்” என்று குறிப்பிட்டார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் மீதும் ஈரானின் புரட்சிகரப் படை நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகளை வைக்க ஈரான் தவறிய முயற்சி மற்றும் ஜோர்டானில் உள்ள எங்கள் இராணுவத் தளம் மீது அவர்கள் சுட்ட எட்டு ஏவுகணைகளுக்கு பதிலடியாகவே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு “கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை” இருக்கும் என எச்சரித்த ஈரான், அதன்படி பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தளம் மீது “தீவிர பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்” நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை அறிவித்துள்ளது. இருப்பினும், ஜோர்டான் இராணுவம், ஈரான் ஏவிய குறைந்தது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், அமெரிக்க பயிற்சி முகாமில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜாத்பா காமெனி, வாஷிங்டனுக்கு “மறக்க முடியாத பாடங்கள்” காத்திருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், ஈரானிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “அமெரிக்கர்கள் தங்கள் குற்றங்களுக்கு வருந்தும் வரை இந்த தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்” என்றும், இனிவரும் பதிலடிகள் “கனமான, பரந்த மற்றும் அதிக அழிவுகரமானதாக” இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது. கடந்த ஆறு மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே ஒரு தேக்கநிலை நீடித்து வரும் சூழலில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதற்கும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீது பதிலடி முற்றுகை விதித்துள்ளதற்கும் இடையே இந்த புதிய தாக்குதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed