
“‘திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல முரளி ராமசாமி அணியில தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன்.
பொதுக்காசை எடுத்து மீட்டிங்னு மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான். அது இவங்களுக்குப் பிடிக்கலை.
தேர்தல்ல நிக்க விடாம தடுத்தாங்க. சுயேட்சையா துணைத் தலைவர் பதவிக்கு போட்டி போட்டு 357 ஓட்டு வாங்கினேன். செயலாளர் பதவிக்கு நிற்க நினைச்சேன். ஜெயிச்சுடுவேனோனு பயந்து சங்கத்துல இருந்து நீக்கிட்டாங்க’ என அப்போது பேசியிருந்தார்.
விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்ற போதும் கூட சங்கத்துக்கு நடந்த தேர்தலில் ராஜேஸ்வரியால் போட்டியிட முடியவில்லை.
தொடர்ந்து தேர்தல் நடந்து தற்போது ஆட்சியும் மாறியிருக்கிற சூழலில் ராஜேஸ்வரியின் புகார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.






















